பக்கம் எண் :

356பாரதம்உத்தியோக பருவம்

34.-உற்றாரைக் கொல்லப்பின்வாங்கி அருச்சுனன் போர்
செய்யமாட்டே னெனல்.

நின்றமர்தொடங்கநினைகிற்பவர்பிதாமகனுநீள்கிளைஞருந்துணை
                                           வருங்,
கொன்றிவரைவாகுவலியிற்கவர்வதித்தரணிகொள்பவனு
                                 மென்றுணைவனே,
யென்றுபலபேசியதிபாதகமெனக்கருதியான்மலைவுறே
                                    னினியெனா,
அன்றுவசுதேவன்மகனோடுரைசெய்தானமரிலவனுமிவ
                             னோடுரைசெய்வான்.

     (இ -ள்.) 'நின்று - (எதிரில்) நின்று, அமர் தொடங்க - போரைத்
தொடங்கிச்செய்ய, நினைகிற்பவர் - எண்ணியிருப்பவர், பிதாமகனும் -
பாட்டனும், நீள் கிளைஞரும் - மிக்க உறவினரும், துணைவரும் - அண்ணன்
தம்பிமார்களும், (ஆவர்); இவரை - இவர்களை, வாகு வலியின் -
தோள்வலிமையால், கொன்று -, கவர்வது - பறித்துக்கொண்டு
அடையப்படுவது, இ தரணி - இந்தப் பூமியாம்; கொள்பவனும் - (அதனை)
அடைபவனும் எண் துணைவனே - எனது தமையனே,' என்று -, பலபேசி -
அநேக வார்த்தைகளைச் சொல்லி, அதி பாதகம் என கருதி -
(இவர்களைக்கொல்வது) மிகப்பாவமென்று எண்ணி, இனி யான் மலைவு
உறேன்எனா - இப்பொழுது நான் போர்செய்ய மேற்கொள்ளேனென்று,
அன்று -அப்பொழுது, அமரில் - யுத்தகளத்தில், வசுதேவன் மகனோடு -
வசுதேவபுத்திரனான கண்ணனுடனே, உரை செய்தான் - (அருச்சுனன்)
கூறினான்;அவனும் - அந்தக்கண்ணபிரானும், இவனோடு -
இவ்வருச்சுனனோடு, உரைசெய்வான் - (அதற்கு உத்தரங்) கூறியருளுவான்;
(எ - று.)-அதனை, மேல்வீட்டுமபருவ முதற்போர்ச்சருக்கத்தில்
இரண்டாங்கவிமுதல் ஆறுகவிகளிற்காண்க.  'உரைசெய்தான் விசயன்'
என்றும் பாடம்.                                         (395)

அணிவகுப்புச்சருக்கம் முற்றிற்று.

உத்தியோகபருவம்முற்றுப்பெற்றது.

----  **** ----