பக்கம் எண் :

50பாரதம்உத்தியோக பருவம்

களது) அழகியதலைகளைத் துணித்திடுவேன்', என்றான் - என்று கூறினான்;
(எ - று.)

     இது -தனது வீரவாத முகத்தால் கண்ணனது மகிமையை
விளக்கியபடியாம்.  கண்ணன் வேறொரு தொழிலுஞ் செய்யாது
தேர்செலுத்துதல் மாத்திரமே அமையுமென்பது கருத்து.  புறவிருளை
மாத்திரமே ஒழிக்கவல்ல சூரிய சந்திர அக்கினிய ரென்னும் முச்சுடர்களின்
ஒளியெல்லாவற்றினும் மேம்பட்ட ஒளியென்பார், 'செழுஞ்சுடர்' என்றார்.  சுடர்
என்றது - நித்தியமாய் சுவயம்பிரகாசமான ஞானத்தைக் குணமாகவுஞ்
சொரூபமாகவும் உடையவனென்றபடி.  இங்கே சுடர் என்றது - சுடர்
வடிவானவனுக்குப் பண்பாகுபெயரென்றாவது, தேவர்களை அஃறிணையாலுஞ்
சொல்லலாம் என்ற நியாயம் பற்றி வந்த அஃறிணை யென்றாவது
உடைமைக்கும் உடையதுக்கும் உள்ள அபேதத்தை நோக்கின
உபசாரவழக்கென்றாவது கொள்க.

    "பொய்படுமொன்றோ" என்ற குறளில் [836], பரிமேலழகர் 'ஒன்றோ
என்பது - எண்ணிடைச்சொல்' என உரைத்தனராதலால், இங்கும் அப்படியே
கொள்ளவும்.  இயக்கர் முதலியோராயினும் என கை வில்லை வளைத்துத்
தலையை துணிப்பேன்: அப்படிப்பட்ட எனக்குப் பூதலத்தரசர், ஒன்றோ - ஒரு
பொருளோ? என உரைத்தலும் ஒன்று.  இயக்கர் முதலியவர் -
பதினெண்தேவகணத்தினுட்பட்டவர்.  மாயவித்தையை யுடையவர், விஞ்சையர்.
வெருவரு என்பதை முத்திறத்தார்க்குங் கூட்டுக.  விண் - வானம்; இங்கே
தேவலோகம்: அங்குள்ளவர், விண்ணோர்.  வரிசிலை - நீண்ட வில்லுமாம்.
குழைய வாங்கி - நன்றாகவளைத்து என்றபடி.  மணி - கருவியாகுபெயராம்.
நவரத்தினமிழைத்த கிரீடத்தையுடைய என்றலுமாம்.  செழுஞ்சுடர் என்றது -
இயல்பாகிய அண்மைவிளி; முதல் வேற்றுமையாக்கி, முன்னிலைக்குப்
படர்க்கைவந்த இடவழுவமைதியென்று கொள்ளினுமாம்; சுடராகிய நீ என்று
கருத்து.                                                    (36)

ஸ்ரீ கிருஷ்ணன் தான் படையெடுப்பதில்லையென்று
துரியோதனனுக்கு உறுதிகூறுதல்.

16.

அடர்சிலைவிசயனிவ்வாறிசைத்தலுமமலன்வஞ்சப்
படவரவுயர்த்தவென்றிப்பார்த்திவன்றன்னைநோக்கி
நடையுடைப்புரவித்திண்டேர்நானிவற்கூர்வதன்றி
மிடைபடையேவிநும்மோடமர்செயேன்வேந்தவென்றான்.

     (இ -ள்.) அடர் - போர்செய்கின்ற, சிலை - வில்லையுடைய, விசயன் -
அருச்சுனன், இ ஆறு - இந்தப்படி, இசைத்தலும் - சொன்னவளவிலே,-
அமலன் - குற்றமில்லாதவனான கண்ணபிரான், வஞ்சம் -
வஞ்சனையையுடைய, படம் அரவு உயர்த்த - படத்தையுடைய பாம்பின்
வடிவத்தை யெழுதிய கொடியை உயர நாட்டின், வென்றி - வெற்றியையுடைய,
பார்த்திவன் தன்னை நோக்கி - துரியோதனராசனைப்பார்த்து, 'வேந்த -
அரசனே! நான் -, இவற்கு - இந்த அருச்சுனனுக்கு, நடை உடை புரவி திண்
தேர் - பலவகை