பக்கம் எண் :

66பாரதம்உத்தியோக பருவம்

அள்ளல், ரௌரவம், கும்பிபாகம்,கூடசாலம், செந்துத்தானம், பூதி, மாபூதி
எனப்படும்:  தமப்பிரபை, இமப்பிரபை, தூமப்பிரபை, வாலுகப்பிரபை,
சாகரப்பிரபை, இரத்தப்பிரபை, அழற்பிரபை என்றும், அவையாவன - இருள்,
குளிர், புகை, மணல், துயிலாமை, இரத்தம், தீ என்றுங் கூறுவாருமுளர்.
செம்மையல்லது - உம்மைத்தொகை -ஒண்குறு முறுவல் - பண்புத்தொகை
பன்மொழித்தொடர்.  ஏழ் என இது மெய்யீற்றுப் பெயரென்பது
ஆசிரியர் தொல்காப்பியனார் கொள்கை; ஏழு என முற்றியலுகரவீ்ற்றுப்
பெயரென்பது - நன்னூலார் மதம்.                              (52)

12.

நின்னறத்தினினீர்மைதன்னைவிளங்குமாறுநிகழ்த்தினும்
மன்னறத்தினைவிட்டுநல்லறமன்னரானவர்முயல்வரோ
என்னறத்தினினின்றுதெவ்வரையிருவிசும்பினிலேற்றினாற்
பின்னறத்தினினினைவுகூருமெனக்கனன்றிவைபேசினான்.

     (இ - ள்.) நின் - உனக்கு உரிய,அறத்தின் - துறவறத்தினது, இன்
நீர்மைதன்னை - இனிமையான தன்மையை, விளங்கும் ஆறு - நன்றாகத்
தெரியும்படி, நிகழ்த்தினும் - (நீ) கூறினாலும், மன்னரானவர் - அரசர்கள், மன்
அறத்தினை விட்டு - ராஜதர்மத்தை நீங்கி, நல் அறம் முயல்வரோ - சிறந்த
துறவற வழியையே அடையப் பிரயத்தனப்படுவார்களோ? (படாரன்றோ!), என்
அறத்தினில் நின்று - எனக்குரிய ராஜதருமத்திலே தவறாமல் நிலைத்து நின்று,
தெவ்வரை - பகைவர்களை, இரு விசும்பினில் ஏற்றினால் - பெரிய வீர
சுவர்க்கத்திலே சேரச்செய்தால் [கொன்றால் என்றபடி], பின் - அதன்
பின்புதான், அறத்தினில் நினைவு கூரும் - துறவறத்தில் எண்ணம் மிகும், என
- என்று, இவை - இவ்வார்த்தைகளை, கனன்று - கோபங்கொண்டு, பேசினான்
- (சஞ்சயனோடு) சொன்னான், (யுதிட்டிரன்); (எ - று.)

    போரிற் பின்வாங்காமற் பகைவராலிறந்தவர் வீரசுவர்க்கமடைவரென்பது
நூற்றுணிபு.  துறவறம் முத்திபெறுதற்குரிய சிறந்த உபாயமாதலால்,
நல்லறமெனப்பட்டது.  இராசதருமத்தினின்று பகை யொழித்தபின்பே
மனத்திற்குநிச்சலத்தன்மை தோன்றித் துறவறத்திற்குச் செல்லுமாதலால்,
சஞ்சயமுனிவனே!உன்னுபதேசத்துக்கு என்மனம் இப்போது இடங்கொடாது
என்று மறுத்தவாறு. தெவ் - பகைமை யுணர்த்தும் உரிச்சொல்;
"தெவ்வுப்பகைமை" என்பதுதொல்காப்பியம்; அதனையுடையவர் தெவ்வர்.
விசும்பு - ஆகாயம்.                                        (53)

அதுகேட்டு வீமன் கூறத்தொடங்குதல்.

13.

முனியுமப்பெருமுரசுயர்த்தவனும்புகன்றனமுன்னிநா
மினியுரைப்பதுகடனெனத்துணைவிழிசிவப்பெழவெழிலியின்
தனிதமுற்றனவுருமின்வெஞ்சினமூளமற்றிவைசாற்றுவான்
கனியெனத்தினகரனைவவ்வியகடவுண்மாருதிதுணைவனே.

     (இ - ள்.) தினகரனை - சூரியபகவானை(நோக்கி), கனி என - ஒரு
பழமென்று கருதி, வவ்விய - (கையாற்) கவர்தற்குத் தொடங்கின,