பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 87

பிராணிகளைச் சிரமமில்லாமல் எளிதிற்கொண்டுபோதற்குப் போர்
கருவியாகுதலால், 'காலன்மாதூதர் மனங்களிக்கப் பொருது' எனப்பட்டது.
வசையுமன்று என்ற உம்மையை ஒழியிசைப்பொருளதாக்கி, புகழாகுமென்றும்
கருத்துக்கொள்க.                                       (70)

11.முந்தூர் வெம்பணிக் கொடியோன்மூதூரி னடந்துழவர்
                                    முன்றிறோறு,
நந்தூரும் புனனாட்டின் றிறம்வேண்டு நாடொன்றுநல்கானாகில்,
ஐந்தூர்வேண்டவையிலெனி லைந்திலம்வேண்டவை மறுத்தாலடு
                                  போர் வேண்டு,
சிந்தூரத் திலகநுதற் சிந்துரத்தின் மருப்பொசித்த
                                  செங்கண்மாலே.

     (இ - ள்.) சிந்தூரம் -சிந்தூரமென்னும் ஒருவகைச் செம்பொடி
யாலாகிய, திலகம் - திலகத்தை அணிந்த, நுதல் - நெற்றியையுடைய,
சிந்துரத்தின் - (குவலயாபீடமென்னும்) யானையினது, மருப்பு - தந்தத்தை,
ஒசித்த - ஒடித்த, செம் கண் மாலே - சிவந்த திருக்கண்களையுடைய
கண்ணனே! - முந்து ஊர் - விரைவாக ஊர்ந்துசெல்கின்ற, வெம்பணி -
கொடிய பாம்பின் வடிவத்தை யெழுதிய, கொடியோன் -
துவசத்தையுடையவனான துரியோதனனது, முது ஊரில் - பழமையான
நகரமாகிய அஸ்தினாபுரியில், நடந்து - (நீ) சென்று,- உழவர் முன்றில் தோறும்
- உழுது பயிர் செய்பவர்களது வீடுகளின் முன்னிடங்களிலெல்லாம், நந்து
ஊரும் - சங்குகள் தவழப்பெற்ற, புனல் - நீர்வளப்பத்தையுடைய,  நாட்டின் -
குருநாட்டினது திறம் - பாகத்தை, வேண்டு - (அவனை) விரும்பிக் கேள்; நாடு
ஒன்றும் நல்கான் ஆகில் - (அவன்) அந்நாட்டில் நமக்குரிய  ஒருபங்கு
முழுவதையுங் கொடுக்கச் சம்மதியானானால், ஐந்து ஊர் வேண்டு - (எங்கள்
ஐந்துபேர்க்குமாக) ஐந்து ஊரை விரும்பிக்கேள்; அவை இல் எனில் - அந்த
ஐந்து ஊரையும் கொடுப்பதில்லையென்றால், ஐந்து இலம் வேண்டு - ஐந்து
வீடுகளை விரும்பிக்கேள்; அவை மறுத்தால் - அவ்வைந்து வீடுகளையும்
(கொடேனென்று) மறுப்பானானால், அடு போர் வேண்டு - கொல்லுதற்கு உரிய
யுத்தத்தை விரும்பிவருக; (எ - று.)

     இராச்சியத்தைக் கொடுக்கச்சம்மதியானானால், எங்களைவருக்கும்
தலைக்கு ஓர் ஊராக ஐந்து ஊரையாவது கேள்; அதுவும் இல்லையென்றால்,
தலைக்கு ஒரு வீடாக ஐந்து வீட்டையாவது கேள்; இங்ஙனம் எங்களுக்காக
நீதானே நேரிற்சென்று தாழ்ந்து யான் கூறியபடி இடங்கேட்கவும், அவன்
ஐந்துவீடுதானும் கொடுத்திடேனென்றால், அப்பொழுது, நாம் போர்
செய்யக்கடவோமாக முடிவு கூறிவருவாய் என்பதாம்.  "ஆண்டு பதின்மூன்றுஞ்
சென்றனவென்று உரிமை, வேண்டிவிடுக விறல் வேந்தீர் - வேண்டினாற்,
பார்காட்டித்தந்தானேல் தந்தானாம் தாரானேற், போர்காட்டிற்றன்றோ பொர"
என்றபடி அவன் அரசுகொடேனென்று மறுப்பதே போர் செய்யுங்குறிப்பை
விளக்குவதாயிருக்கவும், 'அவை மறுத்தால் அடுபோர் வேண்டு' என்றது,
முன்பு 'வனவாச அஜ்ஞாதவாசங்களின்பின் அரசு கொடுப்பேன்' என்று
வாக்குத்தத்தஞ்செய்