எதிரிகளை அழியாது விடேனென்றவாறு. அருச்சுனன்=அர்ஜ்ஜு நன்; வடசொற்றிரிபு : இதற்கு-வெண்ணிறமுடையவனென்பது பொருள்: இது -முதலில் இந்நிறமுடைய கார்த்தவீரியமகாராசனுக்குப்பெயர் பெயராயிருந்து, பின்பு, அவனைப்போன்ற சௌரிய தைரியங்களையுடைய பார்த்தனுக்கு இட்டுவழங்கப்பட்டது; இது- உவமவாகுபெயரின்பாற்படும். பார்த்தன் கருநிறமுடையவனாததலால். அவனுக்கு அருச்சுனனென்பது நிறம்பற்றிவந்த பெயரென்றல் பொருந்தாது. இனி, "குருச்சுடர் மணிசெய் பச்சைக் கொழுந்துடற் பொலிவு நோக்கி, அருச்சுன னென்ப ரீதென்னரும்பெயர் வந்த பான்மை" என்னும் நல்லாப்பிள்ளைபாரதச் செய்யுளைக்கொண்டு,அருச்சுனனென்பது - பசுமைநிறம் பற்றிவந்த பெய ரென்றலு மொன்று. அன்றியும்,பார்த்தன் (பார்வதிபோல) முதலில் [பிறந்தபொழுது] வெண்ணிறமுடையவனாயிருந்துஉடனே கருமைநிறமடைந்தானென்று கூறுவதுமுண்டு. தாரை-கூர் நுனியுமாம்.தாரையுய்ப்பது-மழைபொழிவது போலமிகுதியாக எய்வதுஎனவும் கொள்ளலாம்.அதிரா - நாணேற்றி அந்நாணியைக்கைவிரலால் தெறித்து டங்காரத்தொனியையுண்டாக்கிச் சிங்கநாதமுஞ் செய்து என்க. (129) 21.-இதுவும் அடுத்த கவியும்.அருச்சுனன் செய்த கடும்போரைத் தெரிவிக்கும். நீறுப டுத்தினன் மாமகு டத்திர ணீணில வைப்படையச் சேறுப டுத்தினன் மூளைக ளிற்றிசை சேர்குரு திப்புனலால் ஆறுப டுத்தின னோரொரு வர்க்கெதி ராயிரம் வைக்கணையால் ஈறுப டுத்தினன் வீடுமன் விட்டவர் யாவர்பி ழைத்தவரே. |
(இ - ள்.) (உடனே அருச்சுனன்),-மா மகுடம் திரள் - (பகையரசர்களது) பெரிய கிரீடங்களின் தொகுதியை, நீறு படுத்தினன்-பொடியாக்கினான்; மூளைகளின் -(அவ்வீரர்களது) மூளைகளால், நீள் நிலம் வைப்பு அடைய சேறு படுத்தினன் -பெரிய பூலோகத்தின் இடம்முழுவதுஞ் சேறாக்கினான்; திசை சேர் குருதி புனலால் -எல்லாத்திக்குக்களிலும் பாய்கிற இரத்தவெள்ளத்தால், ஆறு படுத்தினான் - பலஆறுகளை யுண்டாக்கினான்; ஓர்ஒருவர்க்கு எதிர் ஆயிரம் வை கணையால-(தன்னையெதிர்த்த) ஒவ்வொரு வீரருக்கும் எதிராக(த் தான்எய்த) ஆயிரம் ஆயிரம்கூரிய அம்புகளால் ஈறுபடுத்தினன் - (அவர்களுக்கு) அழிவை யுண்டாக்கினான்;(அப்பொழுது), வீடுமன் விட்டவர் யாவர் பிழைத்தவர் - வீடுமனொழிந்த வீரர் எவர்பிழைத்தார்? (எ - று.)-எவரும் பிழைக்கவில்லை; மிகப்பலர் இறந்தனர் என்பதாம். இனி, வீடுமன் விட்டவர் யாவர் பிழைத்தவர் என்பதற்கு - அருச்சுனனோடு போர்செய்யும்படி வீடுமனால் ஏவியனுப்பப்பட்டு எதிர்த்த வீரர்களில் யார் பிழைத்தார்? எவருமில்லை என்றுஉரைப்பாரு முளர். பி-ம்:- திரை சேர்குருதி, தசைசேர்குருதி. விட்டமர். |