நனானசூரியனது விளக்கமும், அகலுற - நீங்கும்படி, ஒளி புரியும்-(தான் மிகுந்த) பிரகாசத்தைச்செய்கிற, நேமியான்-(சுதர்சந மென்னுஞ்) சக்கரா யுதத்தையுடைய கண்ணபிரான்,-பின் பகல் அணியைஉம் - அடுத்தநாளின் [நான்காநாளின்] படைவகுப்பையும். பிறங்கு சேனையால் - (வெற்றியால்) விளங்குகிற (பாண்டவர்களின்) சேனைகளைக்கொண்டு, முன் பகல் வியூகம்ஏ ஆக - (இதற்கு)முந்தினநாளின் [மூன்றாநாளில் அமைத்த] வியூகமாகவே [அர்த்தசந்திரவியூகமாகவே], மூட்டினான் - வகுத்திட்டான்; "ஸூதர்ஸநம் பாஸ்கரகோடி துல்யம்" என்றபடி எம்பெருமானது திருவாழி கோடிசூரியப்பிரகாச முடையதாய் விளங்குதலால்,' நளினநாயகன் பொற்பு அகலுற வொளிபுரியுநேமி' என்றார். நளிந நாயகன்-வடசொற்றொடர். (141) 3.-துரியோதனன் பக்கத்தவரும் காருடவியூகமாகவேவகுக்கப்பட, இரு சேனையும் போர்ப்பறை முழங்க ஆர்த்தல். கார்முகில்வண்ணனைக்கண்டுகாணலார் தாமுமவ்வியூகமேசமைத்துமுந்தினார் ஏமமோடெதிர்முனைந்திருவர்சேனையும் போர்முரசெழவெழப்பொங்கியார்த்தவே. |
(இ - ள்.) கார் முகில் வண்ணனை கண்டு - கரிய மேகம்போன்ற திருநிறத்தையுடைய கண்ணபிரானைப் பார்த்து [கண்ணன் முந்தினநாள் வியூகமாகவே அன்றும் அமைத்ததை நோக்கி யென்ற படி], காணலார் - பகைவர்கள், தாம்உம்-தாங்களும், அ வியூகம்ஏ சமைத்து முந்தினார் - அந்த [மூன்றா நாளில் வகுத்தகாருட] வியூகமாகவே அணிவகுத்து(ப் போருக்கு) முற்பட்டார்கள்; (அப்பொழுது), இருவர் சேனைஉம்- இருதிறத்தாரது சேனைகளும்,ஏமமோடு-களிப்புடனே, எதிர் முனைந்து - எதிரெதிராக வந்து கலந்து, போர் முரசுஎழ எழ-போருக்குரிய பறைகள் மிகுதியாக முழங்க, பொங்கி ஆர்த்த-ஊக்கங்கொண்டு ஆரவாரித்தன; (எ - று.) போர்ப்பறையோசையைக் கேட்குந்தோறும் வீரர்க்குப்போரில் உற்சாகம் மிகுதியாக உண்டாதல் இயற்கை யாதலால், 'போர்முரசெழவெழப் பொங்கியார்த்த' என்றார். இச்செய்யுளில் ஒன்று நான்காம் அடிகளில் ரகர வொற்றிடைவந்த ஆசெதுகை காண்க. 4.-வீமனை வேழப்படை வளைதல். ஏழிரு புவனமு மேந்து மேருவைச் சூழ்வன கிரிக்குழாஞ் சுற்று மாறுபோற் பாழியம் புயகிரிப் பவனன் மைந்தனை வேழவெம் படையுடை வேந்தர் சூழவே. |
(இ-ள்.) ஏழ் இரு புவனம்உம் ஏந்து மேருவை-பதினாலு உலகங் களையுந் தாங்கவல்ல மகாமேருகிரியை, சூழ்வன கிரி குழாம் சுற்றும் ஆறு போல்- சுற்றிலுமுள்ள மலைகளின் கூட்டம் சூழ்ந்துநிற்கும் விதம் போல,-பாழி அம் புய கிரிபவனன் மைந்தனை-வலிமை |