6. | மேல்வாய்தமகையொடுமேலெழவுந் தோல்வாயவைகீழ்விழவுந்துணியா மால்வாரணம்வாய்கள்கழன்றனமுன் னால்வாயெனுநாமநலம்பெறவே. |
(இ - ள்.) மேல் வாய் தம கையொடு மேல் எழஉம் - மேல்வாய் தமது துதிக்கையோடு மேற்கிளம்பவும், தோல் வாய் கீழ் விழஉம்-தோல் மயமான கீழ்வாய்கீழே தாழவும், அவை துணியா- அவ்விரண்டு வாய்களுந் தனித்தனி அறுபட்டு,மால் வாரணம்-பெரிய மதயானைகள், முன் நால்வாய் எனும் நாமம் நலம் பெறஏ-(தொங்குகின்ற வாயையுடைமையால் தமக்கு) முன்னமேயுள்ள நால்வாயென்னும்பெயர் (இப்பொழுது எண்ணினாலும்) சிறப்புறும்படி, வாய்கள் கழன்றன-வாய்கள் கிழியப்பெற்றன; (எ-று.) தொங்குகிற வாயை யுடைமையால் வினைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகையாக முன்பு நால்வாயென்று பெயரிடப்பட்டுள்ள யானைகள், அப்பொழுது, மேல்வாய் கீழ்வாய் என்னுமிரண்டும் வீமன்செய்த போரில் தனித்தனி துணிபட்டு நான்கு வாயையுடையனவாய், பண்புத்தொகைப்புறத்துப்பிறந்த அன்மொழித்தொகையாகவும் நால்வா யென்னலாம்படியாயின என்க. 7, | மதிவெண்குடைமாருதிவன்புடனே குதிகொண்டொருவகைகொடுகுத்துதலா லதிர்சிந்துரவல்லுரமத்தனையு மெதிர்சிந்துரமாகியிளைத்தனவே. |
(இ - ள்.) மதி வெண் குடை மாருதி-பூர்ணசந்திரன்போன்ற வெண்கொற்றக்குடையையுடைய வாயுகுமாரனான வீமன், வன்புடனே - வலிமையோடு, குதி கொண்டு - பாய்ந்து, ஒரு கைகொடு குத்துதலால்-(தனது) ஒருகையினால் [முட்டியால்] குத்தினதனால், அதிர் சிந்துரம் - முழங்குந்தன்மையனவான யானைகள், வல் உரம் அத்தனைஉம் எதிர் சிந்துரம் ஆகி - வலிய (தமது) உடம்பு முழுவதும் எதிரிலே பொடிபட்டு, இளைத்தன- மெலிந்தன;(எ - று.) யானையைக் குறிக்கும்பொழுது, ஸிந்துரமென்னும் வடசொல்லுக்கு - சிந்துதேசத்தில் சஞ்சரிப்ப தென்று பொருள். உரம் - மார்பு; உரஸ் என்னும் வடமொழித்திரிபு: இது இலக்கணையாய், இங்கே உடம்பை யுணர்த்திற்று. நான்காமடியில், ஸிந்தூரம் - செந் துகள். (146) 8. | உடலிற்றசையாவுமுடைந்துநெடுங் குடலற்றுவிழும்படிகுத்துதலான் மிடல்பற்றியவீமன்வெறுங்கைகளா லடலத்திகளத்திகளாயினவே. |
(இ -ள்.) உடலில் தசை யாஉம் உடைந்து - உடம்பிலுள்ள சதைகளெல்லாம் சரிந்து, நெடு குடல் அற்று விழும்படி - நீண்ட குடலும் அறுந்து கீழ்விழும்படி, மிடல் பற்றிய வீமன் - வலிமை |