பொருந்தின வீமசேனன், வெறு கைகளால் குத்துதலால் - ஆயுதமில்லாத (தனது) கைகளால் குத்தியதனால், அடல் அத்திகள் அத்திகள் ஆயின - வலிமையையுடைய யானைகள் எலும்புமாத்திர மாயின ; (எ-று.) உயிர்வாழ்ந்தபொழுதுள்ள அத்தியென்னும் பெயர் உயிர் நீங்கினபின்பு வேறுவகையாலும் இருந்த தென்பது, கவியினது சதுரப்பாடு. அத்தி என்பது - இவ்விருபொருளு முடையதாதலை "யானையு மொருமரப் பெயருமென்பு, மார்கலிப்பெயரு மத்தியென்றாகும்" என்ற பிங்கலந்தையினாலுமறிக. அத்தியென்பது -யானையைக் குறிக்கும்பொழுது, ஹஸ்தீயென்னும் வடமொழித் திரிபென்றும்;எலும்பைக் குறிக்கும்பொழுது, அஸ்தியென்னும் வடமொழித் திரி பென்றுங் காண்க.ஹஸ்தம் - கை, இங்கே துதிக்கை; அதனையுடையது - ஹஸ்தீ.தசை - ஊன். (147) 9. | கந்தாவகன்மொய்ம்புறுகாளைபுயக் கந்தாலமர்செய்துகலக்குதலிற் றந்தாவளசேனைதரிப்பறவே தந்தாவளமுற்றனசாயுறவே. |
(இ - ள்.) மொய்ம்பு உறு - வலிமைமிகுந்த, காந்தாவகன் காளை - வாயுவினதுகுமாரனான வீமன், புயம் கந்தால் - (தனது) தோள்களாகிய தூண்களால், அமர்செய்து கலக்குதலின் - போர் செய்து கலங்கச்செய்ததனால், தந்தாவளம் சேனை -யானைச் சேனைகள், தரிப்பு அற - (பின்வாங்காது) எதிர்நிற்றல் இல்லையாம்படி, சாய்உற - அழிவுண்டாக, (அஞ்சி), தம் தாவளம் உற்றன - தமது இருப்பிடத்தைஅடைந்தன; (எ-று.) இச்செய்யுளில் முன்னிரண்டடிகளிலும் பின்னிரண்டடிகளிலும் முதலில் எழுத்துக்கள் தனித்தனி ஒத்துநின்று பொருள் வேறுபட்டு வந்தது - யமக மென்னுஞ்சொல்லணி. கந்தவஹ னென்னும் வடசொல்லுக்கு-வாசனையை வகிப்ப னென்றும்,தந்தாவளம் என்னும் வடசொல்லுக்கு - தந்தங்களை யுடைய தென்றும் பொருள். கந்து- ஸ்கந்தமென்னும் வடமொழித்திரிபு. சாயுற - மீளஎன்றுமாம். தாவளம் - இடமாதலை"சரண மாவாசம் பக்கந்தாவள நியமந் தாமம்" என்னும் நிகண்டினாலு மறிக. சாய்-முதனிலைத் தொழிற்பெயர். (148) 10. | வெவ்வாயுவின்மைந்தன்வெகுண்டொருதோன் மொய்வாகுவில்வைத்தெதிர்மோதுதலாற் கைவாலதிமெய்தலைகால்கள்கரந் தவ்வாரணம்வாரணமாகியதே. |
(இ - ள்.) வெம் வாயுவின் மைந்தன் - கொடிய வாயுவினது குமாரனான வீமன், வெகுண்டு - கோபித்து, ஒரு தோல் - ஒரு யானையை, மொய் வாகுவில் வைத்து - வலிய கையில் எடுத்துக் கொண்டு, எதிர் மோதுதலால் - எதிரே தாக்கியதனால், கை வாலதி |