27.-இதுவும்அடுத்த கவியும்-வீமன் வந்தவரை யெதிர்த்துவென்று ஐந்துதம்பிமாரைச் சுவர்க்கம் அனுப்பினமை கூறும். வின்மேல்விசையிற்கடும்பாணமேன்மேனிறுத்திவேந்தரைப் பார்த்தென் மேனினைவென்றவரவர்பேரிதந்துணித்துச்சிலைதுணித்துத் தன்மேல்வந்ததம்பியரிற்றரியாதுடன்றவைவர்க்கு மன்மேலெய்தவாளியெனத்தொடுத்தானைந்துவயவாளி. |
(இ - ள்.) (அப்பொழுது வீமன்), வில்மேல் - (தனது) வில்லிலே, விசையின் -வேகத்தோடு, கடு பாணம்-கொடிய அம்புகளை, மேல் மேல் நிறுத்தி - மேலேமேலேவைத்துத் தொடுத்து, வேந்தரை பார்த்து - (எதிர்த்து வந்த அந்த) அரசர்களைநோக்கி, மேல் நினைவு என் என்று - இனிமேல் (உங்கள்) ஆலோசனை என்ன வென்று (இகழ்ச்சிதோன்றச்) சொல்லி, அவர் அவர் - அந்தந்தஅரசர்களது, பேர் இரதம்- பெரியதேர்களை, துணித்து-அழித்து, சிலை- விற்களை,துணித்து-அறுத்து, தன்மேல் வந்த தம்பியரில் தரியாது உடன்ற ஐவர்க்குஉம் -தன்மேல் (போருக்கு) வந்த (துரியோதனன்) தம்பிமார்களுள் பொறுக்கக்கூடாதபடி[மிகுதியாகப்] போர் செய்த ஐந்துபேருக்கும், மன் மேல் எய்த வாளி என (கீழ்த்)துரியோதனன்மேல் (தான்) தொடுத்த அம்புகள்போல, ஐந்து வயவாளி-வெற்றியைத்தருதற்குரிய ஐந்தபாணங்களை, தொடுத்தான்- செலுத்தினான்; (எ-று.) முன்இரண்டடி - வீமனதுதொழில்; துணித்துத்தொடுத்தான் என்க: துரியோதனன் தம்பிமாரது தொழிலாயின், துணித்துத் தன்மேல்வந்த என்க. என் மேல்நினைவு என்றது, இனி அழிவுநிச்சயம் என்பதைக் காட்டும். ஐவர்பெயர் - அடுத்த கவியிற் கூறப்படும். மன்மேல்எய்தவாளி - கீழ் 24-ஆம் பாட்டிற் காண்க. (166) 28. | சேனாவிந்துசுதக்கணன்பொற்றேர்ப்பிங்கலசன்சலாசந்தன் ஆனாவீமவாகுவெனுமடல்வாணிருபரைவரையும் வானாடாளும்படிவிடுத்தான்வன்பாற்றம்மையைவரையுங் கானாள்கென்றகாவலனைப்போல்வான்வீரக்கழல்வீமன். |
(இ - ள்.) வன்பால் - கொடுமையால், தம்மை ஐவரைஉம் - (பாண்டவர்களாகிய) தங்களைந்து பேரையும், கான் ஆள்க என்ற - 'காட்டையாளுவீர்களாக' என்று சொல்லியனுப்பின, காவலனை - துரியோதனராசனை, போல்வான்-ஒப்பவனாகிய, வீரம் கழல்வீமன் - வீரக்கழலையுடைய வீமன்,-சேனாவிந்து-,சுதக்கணன்-,பொன்தேர்- பொன்னாலாகியதேரையுடைய, பிங்கலசன்-,சலாசந்தன்-,ஆனா-(போரில்) நீங்காத, வீமவாகு-,எனும்-என்று பேர்சொல்லப்படுகிற, அடல் வாள் நிருபர் ஐவரைஉம் - வலிமையையுடையவாளாயுதத்தையுடைய அரசர்கள் ஐந்து பேரையும், வான் நாடு ஆளும்படிவிடுத்தான் - வீரசுவர்க்கத்தை ஆளும்படி அனுப்பினான்; (எ-று.) துரியோதனனும் வீமனும் சமபலமுடையவராதலாலும் துரியோதனன் பஞ்சபாண்டவரை இந்நாட்டைவிட்டு வனமடையச் |