சொல்லி அனுப்பியது போல, வீமன் இப்பொழுது துரியோதனன் தம்பிமாரைவரை இவ்வுலகத்தைவிட்டு விண்ணுலகமடையும்படி அனுப்புதலாலும், வீமனுக்குத் துரியோதனனை உவமைகூறினார். வானாடாளும்படிவிடுத்தல்-கொல்லுதல்: பிறிதினவிற்சி. பீமபாஹூ- வடசொல்; பகைவர்க்குப் பயங்கரமான தோள்களையுடையா னென்று பொருள். ஆளுதல் - இங்கே, சேர்தல். வன்பால் - பலாத்காரமாக என்றபடி. ஸேநாபதி, ஸூஷேணன், ஸூலோசநன் ஜலஸந்தன், பீமபாஹூ என வடநூலிற் பெயர் காணப்படுகிறது. 29.-தருமபுத்திரன்பக்கத்து வீமன் முதலியோர் ஆங்காங்குப் போர்புரியவே துரியோதனன்சேனை யுடைதல். ஒருபால்வீமன்சிலைவிசயனொருபாலொருபாலபிமன்னு வொருபானகுலன்சாதேவனொருபாலொருபாலுரகேச னொருபாலரக்கன்பாஞ்சாலனொருபாலடலுத்தமபானு வொருபாலுடன்றுபொரப்பொரவேயுடைந்ததரசன்பெருஞ்சேனை, |
(இ - ள்.) ஒரு பால் - ஒருபக்கத்தில், வீமன்-வீமசேனனும், ஒரு பால்-, சிலைவிசயன் - வில்லில்வல்ல அருச்சுனனும், ஒரு பால்-, அபிமன்னு - அபிமன்யுவும்,ஒரு பால்-, நகுலன்-நகுலனும், ஒரு பால்-, சாதேவன் - சகதேவனும், ஒரு பால்-உரக ஈசன் - நாகர்களுக்குத் தலைவனான இராவானும், ஒரு பால்-, அரக்கன் -கடோற்கசனும், ஒரு பால்-, பாஞ்சாலன் - பாஞ்சாலதேசத்து அரசனான துருபதனும்,ஒரு பால்-, அடல் உத்தமபானு - வலிமையையுடைய உத்தமௌஜஸூம், உடன்றுபொர பொர - கோபங்கொண்டு மிகுதியாகப்போர்செய்ய, (அதனால்) அரசன் பெருசேனை - துரியோதனராசனது பெரியசேனை, உடைந்தது - தோற்றுப் பின்னிடைந்தது; (எ-று.) இராவான் போர்செய்யுந்தன்மை கீழ்க் களப்பலியூட்டுசருக்கத்தின் சு, எ - பாட்டுகளிற் கூறப்பட்டது. அரக்கன் - பொதுப்பெயர் சிறப்புப்பொருளை யுணர்த்திற்று. உத்தமௌஜஸ் - பாஞ்சாலரிற் சேர்ந்தவன். (168) 30.-அப்போது பகதத்தனென்பான் உடைந்தோடுஞ்சேனைக்கு அபயமளித்துப் பாண்டவர்சேனையோடெதிர்த்தல். விண்ணாடருக்காவெஞ்சமத்திலசுராதிபரைவென்கண்டோன் மண்ணாளரசர்மகுடசிகாமணியேபோல்வான்மாமரபாற் பண்ணார்பஞ்சகதிமான்றேர்ப்பகலோனன்னபகதத்தன் எண்ணார்துரக்கவரும்படையையஞ்சலென்றென்றெதிர்சென்றான். |
(இ - ள்.) வெம் சமத்தில் - கொடிய (தேவாசுர) யுத்தத்தில், விண் நாடருக்கு ஆ - தேவர்களுக்கு உதவியாக (ச்சென்று), அசுர அதிபரை வென்எண்டோன் - அசுரத்தலைவர்களை முதுகுகாட்டியோடச் செய்தவனும், மா மரபால் - சிறந்த வமிசமுறைமையால், மண் ஆள் அரசர் மகுட சிகாமணிஏ போல்வான் - பூமியை ஆளுகிற அரசர்களது கிரீடத்திலுள்ள பிரதான ரத்தினத்தை |