பக்கம் எண் :

128பாரதம்வீட்டும பருவம்

வேறு.

             33.-கடோற்கசன் மாயவேடங்கொண்டு
              பகதத்தனோடு போர்தொடங்குதல்.

ஆய போதி லாயிர நூறு மதமாவு
மேய தீய காலனை யொக்கு மேலாளுஞ்
சாய கம்முஞ் சாபமும் யாவுந் தானேயா
மாய வேடங் கொண்டவ னோடு மலைவுற்றான்.

     (இ-ள்.) (பார்த்த கடோற்கசன்,)-ஆய போதில் - அப்படியான
அச்சமயத்தில்.- ஆயிரம் நூறு மதம் மாஉம்  - லஷம்மதயானைகளும், மேய -
(அத்தொகையாகப்) பொருந்திய, தீய - கொடிய, காலனை ஒக்கும் -
யமனையொத்த, மேல் ஆள்உம் - (அந்தயானைகளின்) மேலுள்ள வீரர்களும்,
சாபம்உம் - (அவர்களது) விற்களும், சாயகம்உம் - (அவ்விற்களால் எய்யப்படும்)
அம்புகளும், (ஆகிய), யாஉம் - எல்லாம், தான்ஏ ஆம் - தானே யாகிய, மாயம்
வேடம் - மாயாவடிவத்தை, கொண்டு - எடுத்துக் கொண்டு, அவனோடு
மலைவுற்றான் - அந்தப்பகதத்தனோடு  போர் செய்யத் தொடங்கினான்; (எ -று.)

     அரக்கனாதலால், மாயாரூபங்கொண்டான், சாயகம்மும் - விரித்தல்,
தானேயாஎன்று எடுத்து - தானேயாக என்றுமாம்.                   (172)

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பத்துக்கவிகள் - பெரும்பாலும்
மூன்றாஞ்சீர்விளச்சீரும், ஐந்தாவது மாங்காய்ச் சீரும், மற்றைமூன்றும் மாச்சீர்களு
மாகிய நெடிலடிநான்குகொண்ட கலிநிலைத்துறைகள்.

34 - கடோற்கசன் மாயையால் எங்கும் தானும் வேழமுமேயாகிப்
பகதத்தன்மீது போதல். 

சங்கமூதத்தார்முரசார்ப்பமுழவார்ப்பப்
பொங்கும்பூழியாழிவறக்கும்படிபோதச்
சிங்கங்குன்றிற்செல்வதுபோலச்சிலையோடு
மெங்குந்தானும்வேமுமாகியெதிர்சென்றான்.

     (இ-ள்.) சங்கம் - சங்குகள், ஊத - ஊதப்பட்டு முழங்கவும், தார் -
சேனைக்குஉரிய, முரசு - பேரிகைகள், ஆர்ப்ப - ஆரவாரிக்கவும், முழவு -
(மற்றைப்)பறைகள், ஆர்ப்ப - ஒலிக்கவும், பொங்கும் பூழி - மேற்கிளம்புந்
தூளிகள்,ஆழி வறக்கும்படி போத -  கடல்களும் நீர்வற்றும்படி பரவவும்,
(கடோற்கசன்),சிங்கம் குன்றில் செல்வது போல,- ஒருசிங்கம் ஒருமலையின்மேல்
ஏறிப்போவதுபோல, சிலையோடுஉம் - (தன்கை) வில்லுடனே, எங்குஉம் தான்உம்
வேழம்உம் ஆகி - (மாயையால்) எவ்விடத்திலும் தானும் (தன்) யானையுமாய், எதிர்
சென்றான் - பகதத்தனெதிரிற் போனான்; (எ-று.)

     சிங்கம் - பராக்கிரமசாலியான கடோற்கசனுக்கும், மலை - வலியபெரிய யானைக்கும் உவமை.மிகுதியாகக் கிளம்பின புழுதிகள்