கொல்லுங்கொடும்பாணமவையைந்துவிசயன்கொதித்தேவினான் வில்லுந்தன்வின்னாணும்விறலம்புமுடனற்றுவிடைகொள்ளவே. |
(இ-ள்.) செல்லும் - (அருச்சுனனை எதிர்த்துச்) சென்ற, கலிங்க ஈசர்- கலிங்கநாட்டு அரசர்கள், அலையுண்ட - (அருச்சுனனால்) வருத்தமடைந்த, நிலை -நிலைமையை, கண்டு - பார்த்து, சிவன் என்று பார் சொல்லும் பெருசெம்மல் -(அழித்தல்தொழிலில்) சிவபிரான் (போல்வான்) என்று உலகத்தவராற் சொல்லப்படுகிற சிறந்த வீரனான வீட்டுமன், அவன் மேல் பல்லங்கள் தொடுத்து ஏவினான்- அந்த அருச்சுனன்மேல் அம்புகளை (வில்லில்) தொடுத்து எய்தான்:(அப்பொழுது), விசயன்- அருச்சுனன், கொதித்து - கோபங்கொண்டு, தன் வில்உம்வில் நாண்உம் விறல் அம்புஉம் உடன் அற்று விடைகொள்ள - (அவ்வீடுமன்)தனதுவில்லும் அவ்வில்லின்நாணியும் (அவ்வில்லில் எய்யப்படும்)வலிமையையுடைய அம்புகளும் ஒருசேர அழிந்து மீண்டு செல்லும்படி, கொல்லும்கொடு பாணம் அவை ஐந்து-(பகைவரைக்) கொல்லவல்ல கொடிய ஐந்துபாணங்களை, ஏவினான்-செலுத்தினான்; (எ-று.) விறலம்பும் என்றவிடத்து 'அடனாணும்' எனச் சில பிரதிகளிற்பாடங்காணப் படுகிறது; அப்பொழுது, அடல்நாண் அற்று வலிமையும்வெட்கமுங்கெட்டு என்க. பல்லம், பாணம், - வட சொற்கள். (188) 8.-இதுவும் அடுத்த கவியும்-வீமனுடன் மன்னர்பலரும் துச்சாதனன் முதலியோரும் பொழுது தோற்றோடினமை கூறும். இவர்கொண்டசெற்றத்தொடிவ்வாறுபோர்செய்யவிகல்வீமனைப் பவர்கொண்டநெடுவேலைபோல்வந்துமொய்த்தார்கள்பலமன்னரும் கவர்கொண்டமுனைவாளியவர்மார்புதோறுங்கழன்றோடவே தவர்கொண்டுசெற்றான்முன்னளகேசனமர்வென்றனியாண்மையான் |
(இ - ள்) இவர் - (அருச்சுனன் வீடுமன் என்ற) இவ்விருவரும், கொண்ட செற்றத்தொடு - (தாம் தாம்) கொண்ட பராக்கிராமத்துடனே இ ஆறு போர் செய்ய- இப்படி (ஒருபுறத்தில்) போர்செய்து கொண்டிருக்க, - (மற்றொரு புறத்தில்), இகல்வீமனை - வலிமையையுடைய வீமசேனனை, பல மன்னர்உம் - அநேக அரசர்களும், பவர் கொண்ட நெடு வேலை போல்-(பிரளயகாலத்தில்) நெருங்குதலைக் கொண்ட பெரிய கடல்கள்போல, வந்து மொய்த்தார்கள் - வந்து நெருங்கிச் சூழ்ந்தார்கள்; (அப்பொழுது), முன் அளகேசன் அமர் தனி வென்ற ஆண்மையான் - முன்னே குபேரனது போரில் தனியே வெற்றிகொண்ட பராக்கிரமமுடைய வீமன், தவர்கொண்டு-(தன்) வில்லை(க்கையில்) ஏந்தி, (அம்புதொடுத்து), கவர் கொண்ட முனைவாளி - (பகைவருயிரைக்) கவர்தலைக் கொண்ட கூர்நுனியையுடைய (அந்த) அம்புகள், அவர் மார்பு தோறுஉம் கழன்று ஓட - |