பக்கம் எண் :

142பாரதம்வீட்டும பருவம்

     வீரம்புனை - பராக்கிரமத்தை ஆபரணமாகக்கொண்ட என்க. பூரிஸ்ரவா:
என்னும் வடசொல், திரிந்தது: இவன் சோமதத்த னென்பவனதுமகன்; அதனால்
சௌமதத்தியென்றும் ஒரு பெயர் பெறுவன். இவன் துரியோதனன்பக்கத்து
அதிரதவீரரில் ஒருவன்-பி-ம்: அலம்வர.

     இதுமுதல் இச்சருக்கம்முடியுமளவும் பதின்மூன்று கவிகள் - பெரும்பாலும்
ஈற்றுச்சீரொன்று மாச்சீரும், மற்றைமூன்றும் மாங்கனிச்சீர்களுமாகிய அளவடி
நான்கு கொண்ட கலிவிருத்தங்கள்.                          (194)

14.-அதுகண்ட சாத்தகி பூரிசிரவரவோடு பொருதல்.

இவனாண்மையைமதியாதெதிரெய்தானெனவெய்திற்
பவனாகதிபெறுதேரி னனளினாபதியிளவல்
அவனாருயிர்கவர்வேனெனவம்பொன்றுதொடுத்தான்
தவனான்மறைதெரிபூரிசவாவுஞ்சரம்விட்டான்.

     (இ-ள்.) (அப்பொழுது), நளினாபதி இளவல் - திருமகள் கணவனான
கண்ணபிரானது தம்பியாகிய சாத்தகி, (வீமன்மேல் பூரிசிரவன் அம்பெய்தது
கண்டு),இவன் ஆண்மையை மதியாது எதிர் எய்தான் என -'இவ்வீமனது
பராக்கிரமத்தைநன்கு மதிக்காமல் (பூரிசிவரன்) இவனெதிரில் அம்பு தொடுத்தான்'
என்று. வெய்தின்- கடுமையான கோபத்தோடு, பவனாகதி பெறுதேரினன் -
வாயுவேகத்தைப்பெற்றதேரைச் செலுத்தியவனாய் (வந்து), அவன் ஆர் உயிர்
கவர்வேன் என-'அந்தப்பூரிசிரவனது அருமையான உயிரை (நான் இப்பொழுது)
வாங்குவேன்' என்று(வீரவாதஞ்) சொல்லி, அம்பு ஒன்று தொடுத்தான் -
ஒருபாணத்தை (அவன்மேற்)செலுத்தினான்; தவனால் மறை தெரி பூரிசவாஉம் -
தவஞ்செய்து அதனால்(அஸ்திரத்துக்குரிய) மந்திரங்களையறிந்துள்ள பூரசிரவனும்,
சரம் விட்டான்-(சாத்தகியின்மேல்) எதிரம்பு தொடுத்தான்; (எ-று.)

     பவநாகதி - வடமொழித்தொடர், எதுகைநயம் நோக்கி நீண்டது. நளிநா -
தாமரைமலரில் வாழ்பவள்: அவள்கணவன் - நளிநாபதி; வடசொற்றெடர்.
தவன்=தவம்: இறுதிப்போலி; இனி, உயர்திணைப்பெயராகக்கொண்டு,
தவஞ்செய்துள்ள முனிவனால் மந்திரங்களை யறிந்த எனினுமாம்.      (195)

15.-மூன்றுகவிகள்-சாத்தகியும் பூரிசிரவாவும்
முதலில் விற்போர்புரிந்து பிறகு வாட்போர்புரிதலைக் கூறும்

ஏணற்றுயர்வரைமார்பினரிருவோர்களுமொருவோர்
காணற்றொழிலரிதாமுறைகடிதிற்கணைதொடவே
நாணற்றனவெஞ்சாபமுநடுவற்றனவெனினுங்
கோணற்றனபுகல்வானொருகுறையற்றதவர்க்கே.

     (இ - ள்) ஏண் அற்று - வளைவு இல்லாமல், உயர் - நீண்டு வளர்ந்துள்ள,
வரை -மலைபோல (வலியதாய்)ப் பரந்த, மார்பினர் -