இல் பாகன் ஊர் வான் தட தேரொடுஉம் - (போரில்) சோர்தலில்லாத சாரதி செலுத்திய சிறந்த பெரிய தேருடனே, சென்று - போய், வருக என எதிர் ஊன்றினான் - (துரியோதனன் முதலியோரை) வருவீர்களாக' என்றுசொல்லி எதிர்த்து நிலைநின்றான். அரித்துவசன், மைந்தர்முதலியோர் புடைவரத் தேரொடுஞ் சென்று ஊன்றினானென்க. ஸோகம் - வடசொல். 'உயிரையே போன்ற' என்ற அடைமொழியை 'மைந்தர்' முதலியோர்க்குக் கூட்டுதலு மொன்று. (219) 14.-இருபுறத்து வீரரும் பொருமாறு நெருங்குதல். நின்றிருசேனையுநேர்படவேலினும் வன்றிறல்வில்லினும்வாளினுமலைவுறக் குன்றனதோளினாரிருவருங்கொக்கரித் தொன்றினார்வில்வளைத்தொருவருக்கொருவரே. |
(இ-ள்.) இரு சேனைஉம்-இருதிறத்துச் சேனைகளும், நேர் படநின்று- (ஒன்றுக்கொன்று) எதிராக நின்று, வேலின்உம் - வேல்களாலும், வல்திறல் வில்லின்உம் -கொடிய வலிமையையுடைய விற்களாலும் வாளின்உம்- வாள்களாலும்,மலைவு உற-போரைச் செய்ய,-குன்று அன தோளினார் இருவர்உம்-மலையையொத்த தோள்களையுடையவரான (வீமன் துரியோதனன் என்ற) இரண்டுபேரும்,வில் வளைத்து- (தம் தம்) வில்லை வளைத்து, கொக்கரித்து - கர்ச்சித்துக்கொண்டு,ஒருவருக்கு ஒருவர் ஒன்றினார் - ஒருத்தருக்கொருத்தர் நெருங்கினார்; (எ-று.) (220) 15.-வீமதுரியோதனரின் கைகலந்த போர். அவனுமம்பிவனுரத்தழகுறவெழுதினான் இவனுமம்பவன்மணித்தோளின்மேலெழுதினான் புவனமெங்கணுமிகப்பொறியெழப்போர்செய்தார் பவனனுங்கனலியுநிகரெனும்பரிசினார். |
(இ-ள்.) அவன்உம் - துரியோதனனும், இவன் உரத்து - வீமன்மார்பிலே, அம்பு - பாணங்களால், அழகு உற எழுதினான் - அழகாகப் பதிவுசெய்தான்; இவன்உம் - வீமனும், அவன் மணி தோளின்மேல் - துரியோதனனது அழகிய தோள்களின்மேல், அம்பு - அம்புகளால் எழுதினான் - பதிவுசெய்தான்; (இவ்வாறு),பவனன்உம் கனலிஉம் நிகர் எனும் பரிசினார்-காற்றும் நெருப்பும் (தமக்கு) உவமையென்றுசொல்லப்படுந்தன்மையையுடைய அவ்விருவரும்,-புவனம் எ கணும் மிகபொறி எழ போர் செய்தார் - பூமிமுழுவதிலும் மிகுதியாக(க் கோபாக்கினியின்)பொறிகள் சிந்தும்படி யுத்தம்பண்ணினார்கள்; (எ-று.) அம்பெய்தற்கு மார்புதோள் சிறந்த இலக்காதல் தோன்ற, 'அழகுறஎழுதினான்' என்றார்.அவன்-வந்தவன். இவன்- எதிரூன்றி நின்றவன். (221) |