பக்கம் எண் :

164பாரதம்வீட்டும பருவம்

26.மாலுமதகடசாலநுதலுமருப்புமொருகையும்வதனமுந்
தோலுமொழியவுளானதசைபலபேய்கணுகர்தருதும்பிமா
நாலுமறைகளுமோலமெனவகல்வானமெனமுழுஞானமே
போலுமெனவொளிர்மேனியுடையவர்போர்வையுரியதள்போலுமே.

     (இ-ள்,) மாலும்-மயங்குதற்குக் காரணமான, மதசாலம்-
மதப்பெருக்கைக்கொண்ட, கடம்-கன்னங்களையுடைய, நுதல்உம்-நெற்றியும்,
மருப்புஉம் - தந்தங்களும், ஒரு கைஉம் - ஒன்றாகிய துதிக்கையும், வதனம்உம்-
முகமும், தோல்உம்-(உடம்பின்) தோலும், ஒழிய-நீங்க, உள் ஆன தசை-உள்ளே
பொருந்திய சதைகளை, பல பேய்கள் நுகர்தரு- அநேகம் பேய்கள்
உண்ணப்பெற்ற, தும்பிமா - யானைகள்,-நாலு மறைகள்உம்-நான்கு வேதங்களும்,
ஓலம் என - அபயமிட்டழைக்கவும், அகல்வானம் என-பரந்த ஆகாயம் மென்று
சொல்லவும், முழு ஞானம்ஏ போலும் என-பூர்ணமான அறிவையே ஒக்கு மென்று
சொல்லவும், ஓளிர்-விளங்குகிற,  மேனி உடையவர்- திருமேனியையுடைய
சிவபிரானுக்கு, போர்வை - போர்வையாக உள்ள, உரி அதள்-
உரிக்கப்பட்ட(யானைத்) தோலை, போலும்-ஓக்கும்.

     உடம்பிலுள்ள உறுப்புக்கள் ஒழியத் தோலுரிபட்ட யானைகள்,
சிவபிரானால்முன்பு தோலுரிக்கப்பட்ட யானையை யொக்கு மென்க. தமது
துன்பத்தையழிக்கும்பொருட்டு யாவராலும் அபாயங்கூறி அடையப்படுங் கடவுள்
இவரேயென்றும், ஆகாசமூர்த்தி யென்றும், பூர்ணஞானசொரூபி யென்றும்
வேதங்களாற்புகழப்பட்டுத் தேசோமயமாய் விளங்குபவர் சிவபிரானென்பது,
பின்னிரண்டடிகளில்விளங்கும். சாலம்-ஜாலம் என்னும் வடசொல்லின் விகாரம்:
இனிஜலமென்பதன்விகாரமெனக் கொண்டு, நீர் என்றுமாம். அன்றி. 'மதகடசாலும்
'என்றுபாடங்கொண்டு, மதநீரைக் கொண்ட கன்னமாகிய சாலும் என்று
பொருளுரைப்பாருமுளர்: சால்-நீர்ப்பாத்திரம். போர்வை-போர்க்கப்படுவது.
யானைத்தோலுரித்த கதை:-அருந்தவமியற்றிப் பெருவரம்பெற்ற
கஜாசுரனென்பவன்தேவர் முனிவர் முதலியோரை இடைவிடாது வருத்தித் துரத்த,
அஞ்சியோடினஅவர்களது பிரார்த்தனையால் பரமசிவன் தம்மை யெதிர்த்துப்
போர்செய்யவந்தஅவ்வசுரனைக் காலாலுதைத்துத் தள்ளிக் கொன்று தோலை
உரித்துப்போர்த்தருளின தென்றாயினும், தாருகவனமுனிவரேவிய யானையினுட்
சென்றுஉருத்திரமூர்த்தி உடலைப்பிளந்து அதனுரிவையைப் போர்த்துக்கொண்ட
தென்றாயினுங்கொள்க.                                     (232)

27.சேனையிபமுகமற்றுவிழுவனசென்றுதிசைவழிகவ்விவிண்
போனவயவர்கள்படைகொடெதிரெதிர்பூசல்புரியிருபூதமுஞ்
சோனைமழைமுகில்வாகன்முதலசுரேசர்தொழுதுதுதிக்கவே
யானைமுகவசுரேசனுடனமராடுமுதல்வனையொக்குமே.

     (இ-ள்.) சேனை - அச்சேனையிலே, அற்று விழுவன-அறுந்து
விழுந்தனவாகிய, இபம் முகம்-யானைகளின் முகங்களைக், திசை வழி சென்று
கவ்வி-(அவை விழுந்துள்ள) திக்குகளின் இடங்களிலே ஓடிப்போய் (வாயினாற்)
கௌவி யெடுத்துக்கொண்டு, விண்போன