தாம் - இறந்து விழாதவர்? இரு தளத்தின்உம் - இரண்டு சேனைகளிலும், இருவர்அம்பின்உம் - இந்த இரண்டுபேரது பாணங்களாலும், ஏவுணாத பேர்- எய்யப்படாதவர், எந்த மன்னர்- எந்த அரசர்தாம் (உளர்)? (எவருமில்லை யென்றபடி); (இவ்வாறு), நரன்உம் - நரனது அவதாரமான அருச்சுனனும், வெற்றி கூர்வசுஉம் - சிறப்பு மிகுந்த வசுவினது தோற்றமான வீடுமனும், உற்ற - பொருந்தின, போர் - யுத்தத்தை, நவிலுகிற்கின்-சொல்லத் தொடங்கினால், நாஉம் நடுங்கும் - (பேசுங்கருவியான) நாக்கும் அஞ்சும்; (எ-று.) இதில் நால்வகைச்சேனையிலும் எல்லாம் அடிபட்டதன்மை கூறப்பட்டது. அப்போர்,சொல்லுதற்கு அரிது என்பதாம். கீழ்ப்பாட்டில், 'உன்னலாகுமோ' எனஎண்ணமுடியா தென்றவர், இப்பாட்டில் 'நவிலுகிற்கினும் நாநடுங்கும்' எனச் சொல்லலாகாமையை வெளியிட்டார். ஏவுணாத, உண்-செயப்பாட்டுவினைப் பொருளுணர்த்தும் இடைநிலை. ஆல் - ஈற்றசை (241) 8. | வேறுபோரினிப்பொருதல்வேண்டுமோவிசயன்வீடுமனென்னும் வீரர்தஞ் சீறுபோரிடைத்திசையடங்கலுசிவந்தகோலமெய்க்கவந்தமாடுமால் கூறுபோர்பொரக்கருதிவெங்களங்கொண்டுதங்களிற்கொல்லலுற்றநா ளாறுபோரினும்பட்டபேரினுமறுமடங்குபேரன்றுபட்டதே. |
(இ-ள்.) விசயன்வீடுமன் என்னும் வீரர்தம்-அருச்சுனன் பீஷ்மன் என்கிற இரண்டு வீரர்களது, சீறு போரிடை-கோபித்துச் செய்த யுத்தத்திலே, திசை அடங்கல்உம்-எல்லாத்திக்குக்களிலும், சிவந்த கோலம் மெய் கவந்தம் ஆடும்-(இரத்தத்தாற்) சிவந்த நிறத்தையுடைய வடிவமுள்ள கவந்தங்கள் (எழுந்து) கூத்தாடும்; (இருதிறத்தாரும்), கூறு போர் பொர கருதி - (சிறப்பித்துச்) சொல்லப்படுகிற போரைச் செய்யஎண்ணி, வெம் களம் கொண்டு-கொடிய போர்க்களத்தை யடைந்து, தங்களில்கொல்லல் உற்ற - தம்மில் (ஒருவரையொருவர்) கொல்லத்தொடங்கிய, ஆறு நாள் போரின்உம்-(கீழ் நடந்த) ஆறுநாளை யுத்தத்திலும், பட்ட பேரின்உம் - இறந்த சேனைத்தொகையினும், அறு மடங்கு பேர்-ஆறளவுகொண்ட சேனைத்தொகை, அன்று பட்டது - அந்தஏழா நாட்போரில்இறந்தது; (என்றால்), இனி வேறு போர் பொருதல் வேண்டும்ஒ - இனிமேல் மற்றும்போர்செய்தல் வேண்டுமோ? (எ-று.)-அவ்வளவோடு அன்றையதினத்துப்போர்முடிந்தது என்க (242) 9.-சூரியாஸ்தமனவருணனை. பாரவாளினுங் கூரவேலினும் பகழிவாயினும் பட்டபட்டபோர் வீரர்வானின்மேல்வழிநடத்தலான்மெய்தளர்ந்துவேதனைமிகுத்தபின் சேரநீருநும்பாடியெய்துவீர்செருவினொந்ததிச்சேனையென்றுபோ யாரவாரநீடாழியெய்தினானாழியொன்றுடைத்தேரருக்கனே. |
(இ-ள்.) பார வாளின்உம்-பெரிய வாள்களாலும், கூரவேலின்உம் - கூர்மையையுடைய வேல்களாலும், பகழி வாயின்உம்- |