பக்கம் எண் :

எட்டாம் போர்ச்சருக்கம்177

     (இ-ள்.) விலோதனம்-கொடியிலே, பணி-பாம்பையுடைய, காவலன்-
துரியோதனராசன், போர் வென்று போன மேன்மையால் - (ஏழாம்நாட்) போரில்
(எதிரிகளைத் தாம்) சயித்துப்போன சிறப்பினால், இன்றுஉம் வேறும் என்று -
இன்றைத்தினமும் (நாம்) சயிப்போ மென்று கருதி, அ களத்து' - அந்தப்
போர்க்களத்திலே, எண் இல்சேனையோடு-அளவில்லாத சேனைகளுடனே,
எய்தினான் - வந்து சேர்ந்தான்; (அங்கு), துன்று கங்கையின் திரு மகன்-
(சேனாதிபதியாகப்) பொருந்தின கங்காநதியின் சிறந்த புத்திரனான வீடுமன்,
தூசியூகம்உம்- (தம்சேனையைக்கொண்டு) தூசியென்னும் வியூகத்தையும், துளபம்
மால் - திருத்துழாயையுடைய கண்ணபிரான், வென்றி கூர் பெரு சகடம் ஆம்
வெய்ய யூகம்உம் - (தம்சேனையைக்கொண்டு) வெற்றி மிகுதற்குக்
காரணமானபெரியவண்டிவடிவமான கொடியவியூகத்தையும், செய்ய-வகுக்க -(எ-
று.)-"வலம்புரிதாரினான் வீமனைவளைத்துவந் தெதிர்திளைத்தனன்" என அடுத்த
கவியோடு குளகமாகத் தொடரும். செய்ய எய்தினான் என இப்பாட்டிலேயே
முடித்தலுமாம்.

     தூசிஎன்ற சொல்லுக்கு-குதிரையென்று ஒருபொருள் உள்ளதனால்,
'அசுவவியூகம்' என்று ஒருவியூகம் அமைத்ததாகப் பொருள்காணலாம்:
எட்டாம்வாளில்வீடுமன் கூர்மவியூகம் வகுத்ததாகவும், திருஷ்டத்யுமநன்
ஸ்ருங்காடக [நாற்சந்தி] வியூகம் வகுத்ததாகவும் வியாசபாரதத்திலுள்ளது.
வேறும்என்று-வெல்வொமென்று வீரவாதஞ்செய்து என்றுமாம். பி-ம்:
சூசியுகமும்.

4.-  துரியோதனன் வீமனோடுபொரத் தம்பிமாருடன்
வளைத்துவந்து நெருங்குதல்.

தொலைவிலங்கழற்றுணைவரேதுணைவராகவெஞ்சூறைபோற்
கொலைவிலங்கையன்பிறைமுகக்கூரவாளியன்றேரினன்
மலைவிலங்குதோள்வீமனைவளைத்துவந்தெதிர்திளைத்தனன்
தலைவிலங்கலுக்கரசெனத்தகும்வலம்புரித்தாரினான்.

     (இ-ள்.) தலை விலங்கலுக்கு-(எல்லா மலைகளிலும்) சிறந்த இமயமலைக்கும்,
அரசு என தகும் - அரசனென்று சொல்லத்தக்க, வலம்புரி தாரினான் -
நஞ்சாவட்டைப்பூமாலையையுடைய துரியோதனன்,-கொலை வில் அம் கையன் -
கொல்லுதலைச்செய்யும் வில்லையேந்திய அழகிய கையையுடையவனும், பிறை
முகம் கூரவாளியன் - பிறைச்சந்திரன்போல நுனியமைந்த கூர்மையையுடைய
(அர்த்த சந்திர;)பாணங்களை யுடையவனும், தேரினன் - தேரின்மேல்
ஏறியவனுமாய்,-தொலைவு இல் அம் கழல் துணைவர்ஏ துணைவர் ஆக -
தோல்வியில்லாத அழகிய வீரக் கழலையுடைய (தன்) தம்பிமார்களே சகாயராய்வர்,
வெம் சூறை போல் - கொடிய சுழல்பெருங்காற்றுப் போல, மலை விலங்கு தோள்
வீமனை வளைத்து - மலையும் (எதிராகாமல்) விலகும்படியான [மிகவலிய]
தோள்களையுடைய வீமசேனனைச் சூழ்ந்து, எதிர்வந்து திளைத்தனன்-எதிரில்வந்து
நெருங்கினான்; (எ-று.)