பக்கம் எண் :

எட்டாம் போர்ச்சருக்கம்179

6.முந்தவன்றுசென்றாசுகன்மைந்தனாசுகமூழ்கவே
சுந்தரன்விசாலக்கணன்வீரவாசிபௌதுண்டனு
மந்தமாமகோதரனுடன்மாகவிந்துவுமபயனுஞ்
சிந்தினார்களந்தன்னிலாதித்தகேதுவுஞ்சேரவே.

     (இ-ள்.) அன்று - அப்பொழுது, ஆசுகன் மைந்தன் - வாயுகுமாரனான
வீமனது, ஆசுகம் - அம்புகள், முந்த சென்று - விரைவாகப் போய், மூழ்க -
(அவர்களுடம்பில்) அழுந்த,- சுந்தரன்-, விசாலக் க(ண்) ணன்-, வீரவாசி-,
பௌதுண்டனும்-, அந்த-, மா-பெரிய, மகோதரனுடன்-, மாகவிந்துவும்-, அபயனும்-
ஆதித்தகேதுவும்-, [இப்பெயர்கொண்ட துரியோதனன்தம்பிமார் எண்மரும்]. சேர-
ஒருசேர, களந்தன்னில்- போர்க்களத்திலே, சிந்தினார் - உயிர்நீத்தார்கள்; (எ-று.)

     சிந்தினார் என்று சொன்னது - மங்கலவழக்கு. சுநாபன், விசாலாக்ஷன்,
பஹ்வாசீ, பண்டிதன், மகோதரன் குண்டதாரன், அபராஜிதன், ஆதித்யகேது என
இவர்கள்பெயர் வியாசபாரதத்திற் கூறப்பட்டுள்ளது. சுநாபன் சுந்தரன் என்பனவும்,
விசாலாஷன் விசாலக்கண்ணன் என்பனவும், பஹ்வாசீ வீரவாசி என்பனவும்,
அபராஜிதன் அபயன் என்பனவும் காரணப்பெயர்களாகக் கருதுமிடத்துப்
பெரும்பாலும் பொருளில் ஒற்றுமைப்படும் மகோதரன்=மகா உதர அன் -
பெருவயிறுடையான், ஆதித்ய கேது - சூரியக்கொடியுடையவன்.
பௌதுண்டனும்என்றவிடத்து 'பண்டிதனுமே' எனப் பாடங்கொள்ளலாம்.
குண்டதாரன், மாக விந்து என்றவை-ஒற்றுமைப்படவில்லை. மூன்றாம் அடியின்
முதலில், மந்தம் ஆம் எனப்பிரித்து - மந்த புத்தியுடைய எனப் பொருள்
கொள்ளலுமாம். ஆசுகன் - விரைந்து செல்பவன்; வாயு: ஆசுகம்-விரைந்து
செல்வது;பாணம்: வடசொற்கள். அன்று முந்தச்சென்று - அப்பொழுது (அவர்கள்
போருக்கு)முற்பட வந்து எனினுமாம்.                             (250)

7.-தம்பிமாரெண்மர் இறந்ததுகண்ட வருத்தத்தோடு துரியோதனன்
வீடுமனைக் குறுகுதல்.

அற்றகந்தரமுயிரினோடந்தரம்புகத்துள்ளவு
மிற்றபேருடம்பவனிமேலெடுத்தவில்லுடன்வீழவு
முற்றதம்பியர்மாய்தல்கண்டுள்ளுடைந்துபோயுரனுடைக்
கொற்றவன்பெருங்குருகுலக்குரிசினின்றுழிக்குறுகினான்.

     (இ-ள்.) அற்ற கந்தரம் - (வீமனால்) அறுபட்ட கழுத்து (தலை),
உயிரினோடு- உயிருடனே, அந்தரம் புக - ஆகாயத்திலே பொருந்த, துள்ளஉம்-
எழும்பிக்குதிக்கவும், இற்றபேர் உடம்பு-(தலை)போன பெரிய உடம்பு, எடுத்த
வில்லுடன் -(கையிற்) பிடித்த வில்லுடனே, அவனி மேல் வீழ உம் - தரையிலே
விழுந்திடவும்,உற்ற தம்பியர் மாய்தல் - மனமொத்த (தன்) தம்பிமார் இறத்தலை,
கண்டு-, உரன்உடை கொற்றவன் - வலிமையையுடைய வீரனான துரியோதனன்,
உள்உடைந்துபோய் - மன