(இ-ள்.) ஒரு புடை இவன் போர் செய்ய-ஒருபக்கத்திலே இந்தக்கடோற்கசன் (இவ்வாறு)போரைச் செய்துகொண்டிருக்க,- ஒரு புடை - மற்றொரு பக்கத்தில், உரக கன்னி அருள் உடைமைந்தான் - நாககன்னிகையாகிய உலூபியினது அன்புள்ளபுத்திரனான இராவான், எண் இல் ஆயிரம் உருவம் ஆகி - அளவில்லாத பல ஆயிரம்வடிவங்கொண்டு, போர் வேந்தர் - போர் செய்யவல்ல அரசர்கள், எலிகள் போல் ஏங்கி-(பாம்பின் முற்பட்ட) எலிகள் போல அஞ்சி வருந்தி, பொரு படை - போர்செய்யும் சேனைகளோடு, இருபுடையின்உம் உருண்டு போக - இரண்டு பக்கங்களிலுஞ் சிதறிப்போகும்படி, அம்பால் - அம்புகளால், பொருவு இல் வெம் பூசல் செய்தான் - ஒப்பில்லாத கொடிய போரைச்செய்தான். நாககன்னிகைமகனான இவன், தலையின்மேற் படத்தோடு கூடிச் சிறிது பாம்புவடிவம் உடையனாதலால், இவனுக்குமுன் ஓடுங்கின அரசர்களுக்கு எலிகளை உவமைகூறினார்; இங்கே "ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை, நாக முயிர்ப்பக்கெடும்" என்ற திருக்குறளை யுணர்க்க, பல எலிகள் கூடி ஆரவாரித்தாலும் ஒருபாம்பினால் எளிதில் அழிதல்போல, பலர் திரண்டு ஆரவாரித்து வந்து இவனொருவனால் அழிவடைந்தன ரென்க. 19.-அப்போது பகாசுரன்தம்பி வீமன்மேற் பொரவருதல். இப்பகன்முடியுமுன்னேயாரையுமுடிப்பனென்னாப் பைப்பகன்மகுடமைந்தன்பலபெரும்படையுமாகி யப்பகலடுபோர்செய்யவன்றமரழிந்துமாய்ந்த மெய்ப்பகனிளவலந்தவீமன்மேல்வெகுண்டுவந்தான். |
(இ-ள்.) 'இ பகல் முடியும் முன்ஏ - இந்தப்பகற்பொழுது முடிவதற்கு முன்னே, யாரைஉம் முடிப்பன்-(பகைவர்கள்) எல்லோரையும் அழிப்பேன்', என்னா- என்றுகூறி, பை பகல் மகுடம் மைந்தன் - படத்தையும் ஒளியையுடையகீரிடத்தையு முடைய இராவான், பல பெரு படைஉம் ஆகி - (தான்ஒருவனே மாயையால்) பல பெரிய சேனைகளுமாக வடிவங்கொண்டு, அ பகல் - அன்றைத்தினத்திலே, அடு போர் செய்ய - கொல்லும்போரைச் செய்துகொண்டிருக்க,- அன்று அமர் அழிந்து மாய்ந்த மெய்பகன் இளவல்- முன்னொருகாலத்திலே போரில்(வீமனால்) அழிந்து இறந்த வடிவத்தையுடைய பகாசுரனது தம்பியான (அலம்புசனென்னும்) அரக்கன், அந்த வீமன்மேல் வெகுண்டு - (தன் தமையனைக் கொன்றவனான) அவ்வீமசேனன்மேற் கோபங்கொண்டு, வந்தான் -(பாண்டவசேனையை) எதிர்த்து வந்தான்; (எ-று.) வேத்திரகீயநகரத்தின் புறத்தி லுள்ளதொரு வனத்தில் வசித்துக்கொண்டு, பகாசுரனென்பவன், அவ்வூரிலுள்ள வீடுகளிலிருந்து நாள்தோறும் ஒருவண்டியுணவையும் ஓரிளமகனையும் தனக்கு முறைப்படி திறையாகப்பெற்று உண்டுவாழ்ந்திருந்தான்; இருக்கையில், பாண்டவர்கள் அரக்கு மாளிகையினின்று தப்பியுய்ந்து பிராமணவேடம்பூண்டு குந்தியோடுகூட அவ்வூரில் ஓர் |