பக்கம் எண் :

எட்டாம் போர்ச்சருக்கம்193

29.- வீமன் சூழ்ந்தோரை வலிகெடுத்துத்
துரியோதனன்தம்பிய ரெழுவரை மாய்த்தல்.

எடுத்தானொருதன்சிலைவீமனுமெண்ணில்பாணந்
தொடுத்தானவர்மேலிமைப்போதையிற்சூழ்ந்துளோரைக்
கெடுத்தானரசற்கிளையோரெதிர்கிட்டிமீண்டும்
படுத்தானெழுவரிவன்வாளியிற்பட்டுவீழ்ந்தார்.

     (இ-ள்.) (அப்பொழுது), வீமனும்-, தன் ஒரு சிலை எடுத்தான். தனது
ஒப்பற்றவில்லையெடுத்து, அவர்மேல் எண் இல்பாணம் தொடுத்தான் -
அவ்வரசர்கள்மேல்அளவில்லாத அம்புகளைத்தொடுத்து, இமைப்போதையின் -
ஒருநொடிப்பொழுதினுள்ளே, சூழந்துஉளோரை கெடுத்தான்-(தன்னை)
வளைந்துள்ளஅவர்களையெல்லாம் நிலைகெடுத்து, அரசற்கு இளையோர் எதிர்
கிட்டி -துரியோதனன் தம்பிமார்களின் எதிரிலே சமீபித்து, மீண்டும்
எழுவர்படுத்தான்-மறுபடியும் (அவர்களில்) ஏழுபேரை அழித்தான்; (அவர்கள்)
இவன் வாளியின்பட்டு வீழ்ந்தார்-இவனது அம்புகளால் இறந்து விழுந்தார்கள்;
(எ - று.)

     எழுவர்பெயர், மேற்கவியிற் கூறப்படும். கீழ் இச்சருக்கத்து ஐந்தாங்கவியை
நோக்கி, 'மீண்டும்' என்றார். போதை - ஐயீற்றுடைக் குற்றுகரம்.          (273)

30.-இரண்டுகவிகள் - துரியோதனன்தம்பியர் எழுவர்தலை
வானிற் சென்றது கூறும்.

அறமிக்கசொற்குண்டலபோசனனாதியக்கன்
திறமிக்கதீர்க்கநயனன்சிலைத்திம்மவாகு
மறமிக்கவேற்குண்டலன்குண்டலதாரன்மன்னூற்
றுறைமீக்ககேள்விக்கனகத்துசனானதோன்றல்.

இதுவும், மேற்கவியும்-குளகம். 

     (இ-ள்.) அறம் மிக்க சொல், தருமம்மிகுந்த சொற்களையுடைய,
குண்டலபோசன்-, அனாதியக்கன்-, திறம் மிக்கவலிமை மிகுந்த, தீர்க்கநயனன்-,
சிலை-வில்லில்வல்ல, திம்மவாகு-, மறம்மிக்க- பராக்கிரமம்மிகுந்த, வேல் -
வேலில்வல்ல, குண்டலன்-, குண்டலதாரன்-, மன் நூல் - நிலைபெற்ற
சாஸ்திரங்களின், துறை - வழிகளிலே, மிக்க-மிகுந்த, கேள்வி-கேள்விகளையுடைய,
கனகத்துசன் ஆன தோன்றல்-கநகத்வஜனாகிய அரசன்,-(எ-று.)

     குண்டபேதன், அநாத்ருஷ்டி, தீர்க்கலோசநன், தீர்க்கபாகு, சுபாகு, வைராடன்,
கநகத்வஜன் என்று இவர்கள்பெயர் முதனூலிற் காணப்படுகிறது. தீர்ககநயநன்
என்பது - நீண்டகண்களையுடையா னென்றும், குண்டலதாரன் என்பது
குண்டலந்தரிப்பவனென்றும், கநகத்வஜன் என்பது-பொற்கொடியையுடையானென்றும்
பொருள்படும். அறம்-தீங்குமாம். பி-ம்: கருடத்துசனானதோன்றல்.   (274)