பக்கம் எண் :

ஒன்பதாம் போர்ச்சருக்கம்201

மார்களின் தன்மையைப் பற்றி(த்துரியோதனனை) விசாரித்திருந்த சமயத்து,-
(எ-று.)

     முன்னையிரவு-இராத்திரியின் முன்பாகம். "முற்பகல் முழுவதிலும்
தானஞ்செய்து பிற்பகலில் தானமொழிதல் கர்ணனது இயல்பாதலை"அடுத்ததானமும்
பரிசிலு மிரவலர்க் கருளுடன் முற்பகலளவுங், கொடுத்து" என்றதனாலும் அறிக.
தன்போலும் வேறு உவமைபெறாத என்றுமாம்.                       (285)

3.மாவில்லெடுத்தென்னிளையோர்கள்கந்தவகன்மைந்தன்முன்பு
                                     சிவன்முன்
பூவில்லெடுத்தமதனானவாறுபுகல்கிற்பதல்லவனிகக்
கோவில்லெடுத்தென்மறைநாலும்வல்லகுருவில்லெடுத்
                                  தெனினிமேல்
நீவில்லெடுக்கிலனைவேமுமுய்துநினையாரும்வாகைபுனையார்.

     (இ-ள்.) என் இளையோர்கள்-எனது தம்பிமார்கள் (இருபதுபேர்), கந்தவகன்
மைந்தன் முன்பு-வாயுகுமாரனானவீமனுக்கு எதிரில், மா வில் எடுத்து - பெரிய
வில்லை யேந்தி (ப் போர்செய்து), சிவன் முன் பூ வில் எடுத்தமதன் ஆன ஆறு-
சிவபிரானெதிரிலே புஷ்ப வில்லையெடுத்துப்போர்செய்த மன்மதன்போல் (எளிதில்)
அழிந்த விதம் புகல்கிற்பது  அல்ல - சொல்லுந்தரமுடையதல்ல; அனிகம் கோ-
(எனது) சேனைத்தலைவனாகிய பீஷ்மன், வில் எடுத்து - வில்லையெடுத்துப்
போர்செய்து, என்-என்னபயன்? மறை நால்உம் வல்ல குரு வில் எடுத்து என்-
நான்குவேதங்களையும், வல்ல ஆசிரியனான துரோணன் வில்லையெடுத்துப்
பொருது என்ன பயன்? இனி மேல்-,நீ-,வில் எடுக்கில் - வில்லையெடுத்துப்
போர்செய்தால், அனைவேம்உம் உய்தும்-நாங்கள் எல்லோரும் பிழைப்போம்;
நினையார்உம் வாகை புனையார்-பகைவர்களும் வெற்றிமாலை சூடமாட்டார்கள்:(எ-
று.) -இது-கர்ணனை நோக்கித் துரியோதனன் கூறுவது.

     'பூவில்லெடுத்த' என்ற, 'புஷ்பதந்வா' என்னும் மன்மதனது
வடமொழிப்பெயரின் பொருள்பற்றி: காமநூலென்னும் பூவிசேடம் காமனுக்கு
வில்லாமென்று தமிழ்நூலிலும், மன்மத தந்திரமென்னும் புஷ்பம் மன்மதனுக்கு
வில்லா மென்று வடநூலிலுங் கூறுமாறு உணர்க; இனி, பூ வில் எடுத்த -
புஷ்பபாணங்களையுடைய கரும்புவில்லைத் தரித்த என்றுமாம்.       (286)

4.என்னுஞ்சொலண்ணல்செவியேறநெஞ்சமெரியேறவெய்தின்
                                    மொழிவான்
முன்னுந்தைதந்தையுரைசெய்தமேன்மையறியாய்கொலம்
                                பொன்முடியாய்
தன்னுந்துதேரும்வரிவில்லுமுண்டுசரமுண்டுநாளையவனே
உன்னுங்களத்திலவர்வானமாளவுலகாளுவிப்பனுனையே.

     (இ - ள்.) என்னும் சொல்-என்று (துரியோதனன்) சொன்னவார்த்தை,
அண்ணல் செவி ஏற-பெருமையையுடைய கர்ணனது காதில் பட, (அதனைக்
கேட்டவுடனே), (அக்கர்ணன்), நெஞ்சம் எரி ஏற- மனத்தில் கோபாக்கினி மிக,
வெய்தின் - கடுமையாக, மொழிவான் - சொல்லுவான்; (என்னவென்றுஎனில்.)-
முன்-முன்னே [அணிவகுத்தபொழுது],  உந்தைதந்தை-உனதுதந்தை