(இ-ள்.)(இவ்விருவரும்), யாளி லுர் இரண்டு இகல்புரிந்தது என - ஓர் இரண்டுயாளிகள் (ஒன்றோடொன்று) போர்செய்ததுபோல, இகலா - (தம்மில்)போர்செய்ய,-(பின்புஅப்போரில்), மீளிமையினால்உம் வலியால்உம் விறல் மிக்கோன் - பராக்கிரமத்தாலும் தேகபலத்தாலும் சிறப்புமிகுந்த வீமன், வாளின்மிசைவாள் அதனை வைத்து- (அப்பகைவனது) வாளின் மேல்(தன்) வாளை வைத்து, (தாக்கி அதைத் துணித்து), அடல் அரக்கன்தோளில் ஒரு தோள் நிலன் உறும்படி துணித்தான்-கொடிய அவ்விராக்கதனது தோள்களில் ஒருதோளையும் தரையிலே விழும்படி வெட்டித் தள்ளினான்; (எ-று.)-யாளி - சிங்கம், வேறொருவிலங்குமாம். (299) 17.- அலம்புசன் 'மற்போர்புரிக' என்று வீமனை நெருங்குதல். அற்றதிரடோடுணியவச்சமறவேநின் றுற்றுழியும்வாளுரகமென்னவுளனாகி மற்றையொருதோளின்மிசைதட்டியினிமற்போர் பற்றுகெனவீமனுடல்பற்றுபுபுகுந்தான். |
(இ-ள்.) அந்த - (இவ்வாறு வீமனால்) அறுக்கப்பட்ட, திரள்தோள் - திரண்ட (தனது) ஒரு தோள், துணிய - துண்டித்து, விழவும,் (அவ்வரக்கன்), அச்சம் அறஏ நின்று - பயமில்லாமலே சலியாமல்நின்று, உற்றஉழி உம் - (அத்)துன்பம் நேர்ந்தவிடத்தும், வாள் உரகம் என்ன உளன் ஆகி - கொடியபாம்புபோல (ச் சீற்றத்தை)உடையவனாய், மற்றை ஒரு தோளின் - மற்றொரு தோளினால், மிசை தட்டி-(உடம்பின்)மேல் தட்டிக்கொண்டு, இனிமல் போர் பற்றுக என-'இனி மற்போர்தொடங்குவாயாக' என்று (வீமனை நோக்கிச் சொல்லி), வீமன் உடல் பற்றுபு புகுந்தான் - அவ்வீமனது உடம்பைத் தொடர்ந்து நெருங்கினான்; (எ-று.) உற்றுழி, பற்றுகென-தொகுத்தல் விகாரம், பற்றுபு செய்பு என்னும் வாய்பாட்டுத் தெரிநிலை வினையெச்சம், 'பு' விகுதியே இறந்தகாலங் காட்டும். உளனாகி - கையையுடையவனாயென்பாருமுளர். (300) 18.-வீமனும் அலம்புசனும் கடுமையாக மற்போர்புரிதல். குத்துவர்திரிப்பரிருகுன்றனையதோள்கொண் டொத்துவர்வயப்புலிகளென்னவுடனோடித் தத்துவருரத்தொடுரமூழ்கமுதுதகர்போன் மொத்துவர்சினத்தொடெதிர்முட்டுவர்சிரத்தால். |
(இ-ள்.) (இவ்விருவரும் ஒருவரையொருவர்), குத்துவர் - (கையால்) குத்துவார்கள்; திரிப்பர் - (எடுத்து)ச் சுழற்றுவார்கள்; இரு குன்று அனைய தோள் கொண்டு - இரண்டுமலையையொத்த தோளால், ஒத்துவர் - மோதுவார்கள்; வய புலிகள் என்ன - வலிமையையுடைய புலிகள்போல, உடன் ஓடி-விரைந்து ஓடிவந்து, |