பக்கம் எண் :

ஒன்பதாம் போர்ச்சருக்கம்211

கினிக்கும்உம் - இரண்டுசேனைகளுக்கும், புணைஉம் - (போர்க்கடலைக்கடக்கத்)
தெப்பமாகவுள்ளவர்களும், இவர் - இவர்களே,' என்றனர் - என்றுசொல்லிக்
கொண்டாடினார்கள்; (எ-று.)-பிணைபட - ஒன்றோடொன்றுகலக்க.   (303)

21.-இதுமுதல்ஐந்துகவிகள்-வீமஅலம்புசர்புரிந்த கடும்போரில்
வீமனால் அரக்கனுயிரழிய மற்றையரக்கர்கள் கெட்டமையைக் கூறும்.

மலையினையும்வாசுகியையும்பொருவுநாணுஞ்
சிலையுமறமேலொருசெழுங்கணைதொடுத்தான்
தொலைவில்பகையானபகன்மார்புமிருதோளுங்
குலைகுலையுமாறுபலகுத்தினுயிர்கொண்டான்.

     (இ - ள்.) தொலைவு இல் - அழிதலில்லாத, பகை ஆன -
பலஉயிர்களுக்குப்) பகைவனான), பகன்-பகாசுரனது,மார்புஉம்-, இரு தோள் உம்-,
குலைகுலையும் ஆறு - நடுநடுங்கி அழியும்படி, பலகுத்தின் - (ஆயுதமில்லாமல்)
பல கைக்குத்துக்களால், உயிர்கொண்டான்-அவனுயிரை(முன்பு) பறித்தவனான
வீமன், (அவன் தம்பியான அலம்புசனது), மலையினைஉம் வாசுகியைஉம்
பொருவும் சிலை உம் நாண்உம் - (சிவபிரானுக்கு வில்லாகிய) மேருவையும்
(வில்நாணியாகிய) வாசுகியையும் ஒத்த வில்லும் நாணியும், அற-துணிபடும்படி,
மேல்- அவனெதிரிலே, ஒரு செழு கணை தொடுத்தான் - சிறந்த ஒரு அம்பைச்
செலுத்தினான்; (எ-று.)

     இரண்டாம்போர்ச்சருக்கத்து "மேருவை வளைத்து நெடு வாசுகி பிணித்து"
என்றது காண்க. இனி, முதலடிக்கு - மந்தர மலையையும் அதைச் சுற்றிக்
கடைகயிறான வாசுகியையும் ஒத்த எனப்பொருள் கொள்ளுதலும் ஒன்று.
மலையினைப் பொருவும் சிலையும், வாசுகியைப் பொருவும் நாணும் என
மாறவேண்டுதலால், பெயர்களும் பெயர்ப்பயனிலைகளுமாய் நின்ற
எதிர்நிரனிறைப் பொருள்கோள். குலைகுலைதல்- இரட்டைக்கிளவி, குத்து -
முதனிலைத் தொழிற்பெயர்.  பி - ம்: நனிகுத்தி.                 (304)

22.மந்தரமுமந்தரமுமென்னவமர்மலைவா
னந்தரமிதல்லவெனவந்தரநெறிப்போய்க்
கந்தரநெடுங்கிரகரத்தினிலெடுத்தச்
சுந்தரன்வயங்குதிரடோடனிலெறிந்தான்.

     (இ-ள்.) மந்தரம்உம் மந்தரம்உம் என்ன - இரண்டுமந்தர மலைகள்(இருந்து
அவை ஒன்றோடொன்று போர்செய்தாற்)போல,அமர் மலைவான்-(வீமனுடன்)
போர்வெய்பவனான அலம்புசன், இது அந்தரம் அல்ல என-இப்படிப் போர்செய்தல்
(வெல்வதற்கு) உபாய மன்றென்று கருதி, அந்தரம் நெறி போய்-ஆகாச மார்க்கத்திற்
சென்று, கந்தரம் நெடு கிரி - மேகங்கள் தவழும்படியான பெரிய ஒருமலையை,
கரத்தினில் எடுத்து-ஒற்றைக்கையில் எடுத்து, அ சுந்தரன் வயங்கு, திரள்
தோள்தனில் எறிந்தான் - அழகிய அந்த வீமனது விளங்குகிற வலியதோளின்மேல்
வீசியெறிந்தான்; (எ - று.)