பக்கம் எண் :

ஒன்பதாம் போர்ச்சருக்கம்213

நீறுபடுவித்த என இயையும்; விரையொடு எறியும் என இயைப்பினும்மையும். 
                                                        (307)

25.விட்டவடிவேலுருவவேலுருவுமுன்னே
பட்டவனும்வீழவிருபாலும்வருசேனை
முட்டவுமிவன்கணைமுனைக்கெதிரிலக்காய்க்
கெட்டனர்நிசாசரர்கள்கிரிகளெனவீழ்ந்தார்.

     (இ-ள்.) விட்ட - (வீமன்) எறிந்த, வடி வேல் - கூர்மையான வேலாயுதம்,
உருவ - (அவ்வரக்கனுடம்பைத்) துளைக்க, வேல் உருவும் முன்ஏ - அவ்வேல்
(அங்ஙனம்) ஊடுருவுதற்கு முன்னே [ஊடுருவினவளவிலே என்றபடி], அவன்உம் -
அந்த அலம்சுனும், பட்டு வீழ - இறந்து கீழ்விழ, இருபால்உம் வரு
சேனைமுட்டஉம் - (அவ்வரக்கனது) இரண்டு பக்கத்திலும் உடன்வந்த
சேனைமுழுவதும், இவன் கணை முனைக்கு எதிர் இலக்கு ஆய் - இவ்வீமனது
அம்புநுனிக்கு எதிர்ப்பட்ட லக்ஷ்யமாகி,நிசாசரர்கள்-(அச்சேனையிலுள்ள பல)
இராக்கதர்கள், கெட்டனர் - அழிந்தவர்களாய், கிரிகள் என வீழ்ந்தார்-(சிறகு
அறுபட்ட) மலைகளைப்போல விழுந்திட்டார்கள்; (எ-று.)

    நிசாசரர் - இராத்திரிகாலத்திற் சஞ்சரிப்பவர்; காரணப் பெயர்; நிசிசாரெனவும்
வரும்:வடசொல்: அரக்கர்க்குப்பகலினும் இரவில் வலிமை மிகுதி, முட்டவும் -
நெருங்கித்தாக்கவும் எனினுமாம். முட்ட=முற்ற ஆய் -ஆக எனத் திரித்தலுமாம்.
                                                        (308)

26.-வீமன்  கதாயுதத்தாற் பலரை மாய்த்தல்.

ஆறுபடிநூறுபடியாயிரமரக்கர்
மாறுபடுபாடைவடமன்னரொருகோடி
யூறுபடவெங்கதைகொடன்றவனுடைக்கச்
சேறுபடுமூளைகடெறித்தனசிரத்தால்.

     (இ-ள்.) ஆறு படி நூறு படி ஆயிரம் அரக்கர் - அறுநூறாயிரம்
இராக்கதர்களும், மாறுபடு பாடை வட மன்னர் ஒரு கோடி - (ஒருவரோடொருவர்)
பேதப்பட்ட பாஷைகளையுடைய வடதேசத்திலுள்ள அரசர்கள் ஒரு கோடிபேரும்,
ஊறு பட - காயப்படும்படி, அவன் - அவ்வீமன், அன்று-அப்பொழுது, வெம்
கதை கொடு,-கொடியகதாயுதத்தால், உடைக்க - பிளக்க,- (அவர்களுடைய),
சிரத்தால் - (பிளந்த) தலைகளால், சேறு படும் மூளைகள் தெறித்தன-
சேறாகப்பொருந்திய மூளைகள் வெளிச்சிந்தின;

     படி - அளவு, மடங்கு - ஆறுபடி நூறு - ஆறளவுகொண்ட நூறு: அறுநூறு:
அவ்வளவு கொண்ட ஆயிரம் - ஆறுபடிநூறு படியாயிரம் [அறுநூறாயிரம்],
படிதல்-அமைதல்என்பாருமுளர். பாடை-பா பி-ம்: மூளைகடிறந்தனர்.      (309)

27.-தேவர்கள் வீமனைப் புகழ்தல்.

முற்பகலின்மைந்தனைமுருக்கியவரக்கன்
பிற்பகலில்வீழவடிவேல்கொடுபிளந்தான்