31.-வீடுமன்கணையால் பாஞ்சாலரிற்பலர் தமதுவாகனங்களோடு படுதல். வரிவெஞ்சிலைக்கைக்கௌரவர்க்குமுதலாமுதல்வன்வடிக்கணைகள் தெரியுங்கணத்திற்றெரியாமற்றேருந்தாமுஞ்சிலர்பட்டார் கரியுந்தாமுஞ்சிலர்பட்டார்கலுழ்வாய்மதுகைக்கால்வேகப் பரியுந்தாமுஞ்சிலர்பட்டார்படாதாருண்டோபாஞ்சாலர். |
(இ-ள்.) வரி - கட்டமைந்த, வெம் - கொடிய, சிலை-வில்லையேந்திய, கை -கையையுடைய, கௌரவர்க்கு முதல் ஆம் முதல்வன் - (அக்காலத்திலுள்ள) குருகுலத்தார்க்குள் மூத்தவனான சிறந்த வீடுமன், வடி கணைகள் - கூர்மையான அம்புகளை,தெரியும் கணத்தில்-ஆராய்ந்து விடும்பொழுதே,-(பகைவர்களில்), தெரியாமல் - (அழிவது) தெரியாமல், தேர்உம் தாம்உம் சிலர் பட்டார்-தேர்களும் தாங்களுமாகச் சிலர் அழிந்தார்கள்; கரிஉம் தாம்உம் சிலர் பட்டார்- யானைகளுந் தாங்களுமாகச் சிலர் அழிந்தார்கள்; கலுழ் வாய் மதுகை கால் வேகம் பரிஉம் தாம்உம் சிலர் பட்டார்-நுரையையுடைய வாயையுடையனவும் வலிமையையுடையனவும் காற்றுப்போன்ற வேகத்தையுடையனவுமாகிய குதிரைகளுந் தாங்களுமாகச் சிலர் அழிந்தார்கள்; (இவ்வாறு), பாஞ்சாலர்-பாஞ்சால தேசத்தாருள், படாதார் உண்டுஓ - (வீடுமன்முன்) பங்கப்படாதவர்கள் உளரோ? [யாவரும் பங்கப்பட்டனர்]; (எ-று.)-கால்வேகம்-கால்களின் விசையுமாம். 'கலிவாய்' என்ற பாடத்துக்கு ஒலி அல்லது செருக்கு வாய்ந்த பரி என்க: "கலிமான்" என்று குதிரையைக் கூறுதல் காண்க. (314) 32.-வீடுமன் சிகண்டியின்கணைக்கு இலக்காதல். நீயுங்ககனங்குடியேறநின்பேருடலநீணிலத்திற் றோயும்படிநிற்பொரநின்றேனென்றேசொல்லாயிரஞ்சொல்லிச் சேயுந்தனக்குநிகரில்லாச்சிகண்டிகடுங்காற்சிலைவாங்கிக் காயுங்கணைகட்கிலக்கானான்காமன்கணைக்குங்கலங்காதான். |
(இ-ள்.) (அப்பொழுது), சேய்உம் தனக்கு நிகர் இல்லா - முருகக்கடவுளும் (பலபராக்கிரமங்களில்) தனக்கு ஒப்பாகப்பெறாத, சிகண்டி-, (வீடுமன்முன் வந்து), 'நீஉம் ககனம் குடி ஏற - நீயும் மேலுலகத்தை அடையவும், நின் பேர் உடலம் - உனது பெரிய உடம்பு, நீள் நிலத்தில் தோயும்படி - பெரியபூமியிலே விழும்படியும், நின் பொர - உன்னைப் போர்செய்து அழிக்க, நின்றேன் - வந்துநின்றேன்', என்று- , சொல் ஆயிரம் சொல்லி - மிகப்பலவான வீரவாதங்களைச் சொல்லிக்கொண்டு, கடு கால் சிலை, வாங்கி- பயங்கரமான விற்கழுந்தை வளைத்து, காயும் - கோபித்துஎ றிகிற, கணைகட்கு - அம்புகளுக்கு,-காமன் கணைக்குஉம் கலங்காதான் - மன்மதனது அம்புக்கும் சலியாத வீடுமன், இலக்கு ஆனான் - குறியானான்: (எ-று.) சிகண்டி வீரவாதஞ்செய்து வீடுமன்மேல் கொடிய அம்புகளை எய்தன னென்பதாம். காமன்கணைக்கும், உம் - உயர்வுசிறப்பு; |