(இ -ள்.) (அதுகண்டு), 'எம் குலத்திலவன்ஓ - எங்கள் குலத்தில் மூத்தவனான வீடுமனோ, என் பகழிக்கு இவன்ஓஇலக்கு ஆம் என்பான் போல - 'எனது அம்புகளுக்கு (இயற்கையில்) ஆண்மையில்லாத இச்சிகண்டியோ ஏற்ற குறியாவன்' என்று இகழ்பவன்போல, செம் கை சிலை வீழ்த்தான் - (சிகண்டியோடு) போர்செய்யாமல் சிவந்த கையிற்பிடித்துள்ள (தன்) வில்லைக் கீழே போட்டான்; (பின்பு), இவன்உம் - இச்சிகண்டியும், அரசன் தம்பிக்கு அழிந்து - துரியோதனராசனது தம்பியான துச்சாதனனுக்குத் தோற்று, தவன(ன்) உதயத்தில் இருள் என்ன - சூரியனது உதயகாலத்தில் இருள்கெடுதல்போல், சாய்ந்தான் - உறுதிநிலைகெட்டான்,' என்று - என்று அறிந்து, தனஞ்சயன்- அருச்சுனன், தன் - தனது, பவன(ம்) உதயம் தேர்-காற்றுவருதல் போன்ற (வேகத்தையுடைய) தேரை, நடு விட்டான் - (எதிரிகளின் சேனை) மத்தியிலே செலுத்தினான்; (அப்பொழுது) பணியார் தாம் உம் புறம் இட்டார் - பகைவர்களும் புறங்கொடுத்து ஓடினார்கள்; 'இவனோ' என்பது முதல் 'சாய்ந்தான்' என்றது வரையில் அருச்சுனன் எண்ணும் எண்ணம்; அதனுள், 'இவனோ இலக்காம் என்பகழிக்கு' என்றது, வீடுமன்மனத்திற் கருதியதை; தபநோதயம், பவநோதயம்-குணசந்திபெற்ற வடமொழித் தொடர்கள். பணியார்-வணங்காதவர்-பி-ம்: அழிந்தவனும். (317) 35.- கவிக்கூற்று: அருச்சுனன் வென்ற சிறப்பு. பார்த்தன்கணையாற்பட்டவரைப்பங்கேருகத்தோன்பலகோடி நாத்தந்திலனேயெண்ணுதற்குநாமார்புகலத்தேமாலை மாத்தந்திகளும்புரவிகளுந்துணியத்துணியவழிசோரி நீத்தந்தன்னால்வடவைமுகநெருப்பொத்ததுகார்நெடுவேலை. |
(இ - ள்) (அப்பொழுது) பார்த்தன் கணையால்- அருச்சுனனுடைய அம்புகளால், பட்டவரை - இறந்தபகைவர்களை, எண்ணுதற்கு - கணக்கிட்டுச் சொல்லுதற்கு, பங்கேருகத்தோன் - தாமரை மலரில் வாழும் பிரமன், பலகோடி நா தந்திலன்ஏ - அநேக கோடி நாக்குக்களைக் கொடுத்தானில்லையே! நாம் புகல ஆர்-(ஒருநாக்கையுடைய) நாம் (அவர்களை எண்ணிச்) சொல்லுதற்கு யார்? (சொல்லத்தரமுடையோமல்லோம் என்றபடி); தேன் மாலை - தேனையுடைய பூமாலைகளைத் தரித்த, மா தந்திகள்உம் - பெரியயானைகளும், புரவிகள்உம்- குதிரைகளும், துணிய துணிய - மிகுதியாக வெட்டுப்பட, வழி- (அவற்றினின்று)பெருகுகிற, சோரி நீத்தந்தன்னால்- இரத்தவெள்ளஞ் சென்று பாய்தலால், கார் நெடு வேலை - கருநிறத்தையுடைய பெரியகடல், வடவை முகம் நெருப்புஒத்தது-படபாஎன்னும் பெண்குதிரையின் முகத்தினின்று வெளிப்படும் நெருப்புபோலச் செந்நிறமடைந்தது; (எ-று.) மிகப்பலவாகிய நாக்குக்கள் இருந்தால்மாத்திரத்திரமே அப்போர்த்திறத்தைச் சொல்லுதல்கூடு மென்பது, முன்னிரண்டடிகளின் |