தாக முன்னே சொல்லியுள்ளானாதலால், இவ்வாறு நினைத்தான். முனைந்து - பொருது எனினுமாம். (329) 6.-வீடுமன் போர்க்களஞ் சேர்தல். சுற்றறாதவில்லினன்றொடைமிடைந்ததூணியன் கொற்றவாகைவாளினன்கூரவீரவேலினன் மற்றுமாயுதங்களோடுமன்னரோடும்வார்முர செற்றுமாரவத்தினோடுமடுகளத்தினெய்தினான். |
(இ-ள்.) சுற்று அறாத - கட்டு நீங்காத, வில்லினன் - வில்லையுடையவனும், தொடை மிடைந்த - அம்புகள் நெருங்கிய, தூணியன் - புட்டிலை யுடையவனும், கொற்றம் வாகை வாளினன்- வெற்றிக்குஅடையாளமானவாகைப் பூமாலையைச் சூடின வாளையுடையவனும், கூர வீரம் வேலினன் -கூர்மையையுடைய வீரத்தன்மைக்குஉரிய வேலாயுதத்தை யுடையவனுமாய், மற்றும்ஆயுதங்களோடு உம்- வேறு பல படைக்கலங்களுடனும், மன்னரோடுஉம்-எல்லாஅரசர்களோடும், வார் முரசு எற்றும் ஆரவத்தினோடுஉம்-தோற்கயிற்றாற்கட்டிய பேரிகைகள் அடிக்கப்படும் முழக்கத்தோடும், அடு களத்தின் எய்தினான் - போர்செய்தற்குரிய களத்தில் சேர்ந்தான் (வீடுமன்); (எ-று.)-தொடை - தொடுக்கப்படுவது; அம்பு. (330) 7.-முன்னைநாள்வியூகமே வீடுமனும் வகுத்துநிற்க, ஸ்ரீக்ருஷ்ணன் அருச்சுனனிடம் இன்றுவீடுமனுக்குவிமானமளிப்பாயெனல். தானுமுன்னணிந்தவாறுதானையைநிறுத்தியச் சேனைமன்னன்வந்துநின்றநிலைமைகண்டுசெங்கண்மால் வானினின்றிழிந்தகங்கைமைந்தனுக்குவானுலாம் யானமின்றளித்தியென்றுவிசயனோடிசைக்கவே. |
இதுமுதல் ஆறுகவிகள் - குளகம். (இ-ள்.) அ சேனை மன்னன் - அந்தச்சேனைத்தலைவனான வீடுமன்,- தான்உம் - (பாண்டவர்கள்போலவே) தானும், முன் அணிந்த ஆறு-முந்தின நாளிற் படைவகுத்தவிதமாகவே [சருவதோபத்திரவியூகமாக], தானையை நிறுத்தி - (தன்) சேனையை (அணிவகுத்து) நிற்கச்செய்து, வந்து நின்ற - (எதிரில்) வந்து நின்ற, நிலைமை-நிலைமையை, கண்டு-,-செம் கண் மால்-சிவந்த திருக்கண்களையுடைய கண்ணபிரான், விசயனோடு - அருச்சுனனுடனே, 'வானினின்று இழிந்த கங்கை மைந்தனுக்கு-ஆகாயத்தினின்று இறங்கிய கங்கையின் குமாரனான வீடுமனுக்கு, வான் உலாம் யானம் - மேலுலகத்துக்குச் செல்லும் விமானத்தை, இன்று - இன்றைத்தினத்தில், அளித்தி - கொடுப்பாய்,' என்று இசைக்க - என்றுசொல்ல,- (எ-று.)- "விசயன் (8) என்ற போது (11)'' என மேற்கவிகளோடு தொடரும். வானுலாம் யான மளித்தல்-இறந்து தேவவிமானமேறிச்சுவர்க்கஞ் செல்லும்படி செய்தல். 'வானினின்று இழிந்த' என்ற |