பக்கம் எண் :

பத்தாம் போர்ச்சருக்கம்231

சொற்களின் திரிபுகள். பி-ம்: மச்சநாடர் வெங்கலிங்கர். கருநடேசர் சிஞ்சியர்.
                                                         (338)

15.-இதுவும் அடுத்த கவியும் - வீடுமனாலெய்யப்பட்ட
மன்னவ ரடைந்த நிலைமையைக் கூறும்.

முடிதுணிந்துபின்புவீழமுன்னடந்துடற்றுவார்
அடிதுணிந்துவிழவிருத்தலங்கல்வில்வணக்குவார்
கொடிதுணிந்துவிற்றுணிந்துகோறொடுத்தகையுடன் 
தொடிதுணிந்துசோரிவெள்ளநதியினூடுசோருவார்.

     (இ-ள்.) (தருமன்சேனைவீரர்கள் வீடுமனம்புகளால்), முடி துணிந்து பின்பு
வீழ-(தம்) தலை அறுபட்டுப் பின்னே விழுந்திட, முன் நடந்து உடற்றுவார்-
முன்னேசென்று போர்செய்பவர்களும், அடி துணிந்து விழ-(தம்)கால்கள்
அறுந்துவிழ,இருந்து-கீழிருந்து கொண்டு, அலங்கல் வில்வணக்குவார் -
போர்மாலையைச் சூடிய (தம்) வில்லை வளைப்பவர்களும், கொடி துணிந்து -
(தம்)துவசம் அறுபட்டு, வில் துணிந்து - வில் அறுபட்டு, கோல் தொடுத்த கை
தொடியுடன் துணிந்து - அம்பையெய்கிற கை தொடியென்னும் வளையோடு
துணிபட்டு, சோரி வெள்ளம் நதியினூடு சோருவார்-இரத்தப்பெருக்காகிய ஆற்றிலே
தளர்ந்துவிழுபவர்களும் ஆனார்கள்: (எ-று.)

     முன் இரண்டடிகள், தலையும் கால்களும் அறுபட்டபின்பும் முண்டங்கள்
முன்தொடர்ச்சியால் சிறிதுபொழுது தொழில்செய்தலைக் கூறி அம்முகமாக
அவர்களது வீராவேசத்தை விளக்கும். கொடிதுணிந்து வில்துணிந்து கைதுணிந்து
சோருவார்-சினைவினை முதல்கொண்டது. கையுடன் தொடிதுணிந்து - உருபு
பிரித்துக் கூட்டப்பட்டது. வில்லையுங் கோல்தொடுத்த கையையும் உடன்
கூறியதற்குஏற்ப, கொடி - கொடிபோல மெல்லிதாய் நீண்டுள்ள வில் நாணி
என்றலும்பொருந்தும்; மேல் 22 - ஆம் கவியில் ''கைவரிவிலற்று நெடுநாணி
நடுவற்றுவளர்கைத் தலமுமற்று விழவே'' என்பதைக் காண்க. (பி - ம்:)
நதியினூடு சுழலுவார்.                                          (339)

16.-மருந்தே றித்த பூமி யென்ன வந்த வாம டங்குவார்
உருத்தே றிந்த வுருமி னொந்த வுரக மென்னவுட்குவார்   
ஒருத்த ரோட வென்னி தென்ற நேக ரஞ்சி யோடுவார்
விருத்தன் வில்வ ளைத்த வாண்மை விசய னுக்கு
                                   மிசையுமோ.

     (இ-ள்.)  (இன்னும் தருமன்சேனையார்), மருத்து எறிந்த பூழி என்ன-
காற்றினால் வீசியெறியப்பட்ட புழுதிபோல, வந்த ஆ மடங்குவார் - வந்த வழியே
திரும்புவார்கள்; உருத்து எறிந்த-உக்கிரமாய் இடித்த, உருமின் - இடியினால்,
நொந்த - வருந்திய, உரகம் என்ன - பாம்புகள்போல, உட்குவார் - அஞ்சி
ஒடுங்குவார்கள்; ஒருத்தர் ஓட - (முன்பு) ஒருவர் பயந்து ஓட, அநேகர் - (மற்றும்)
பலர், இது என் என்று - இது என்ன அபாயகாரணமென்று கருதி, அஞ்சி ஓடுவார்
- பயந்து ஓடுவார்கள்; (இங்ஙனம் ஆகும் படி), விருத்தன வில் வளைத்த ஆண்மை
- (யாவரினும்) மூத்தவ