பக்கம் எண் :

பத்தாம் போர்ச்சருக்கம்233

18.-வீடுமனுக்குத் துணையாக வந்தவரெய்த அம்புகளை அருச்சுனன்
விலக்குதல்.

மனஞ்செய்வலிகூர்கசதுரங்கமபதாதியிரதத்துடன்வளைந்துபலருந்
தனஞ்சயமடங்கலெதிர்சாபமும்வளைத்தெதிர்சரங்களுமுகைத்ததமர்
                                          செய்தார்
கனஞ்சலதிமொண்டுகொடொழுந்தனையவண்ணனொருகார்முகம்
                                    வணக்கியொருநூ
றினஞ்சரமொரோர்தொடையிலேவியவரேவுசரம்யாவுமெதிரே
                                        விலகினான்.

     (இ-ள்.)     பலர்உம் - (இவ்வாறு) பலஅரசர்களும், மனம் செய்வலி கூர்-
மனத்திற்பொருந்திய வலிமை [தைரியம்] மிகுந்த, கச துரங்கம பதாதி இரதத்துடன்-
மிகுந்த யானை குதிரை காலாள் தேர் என்னும் நால்வகைச் சேனைகளுடனே,
வளைத்து - சூழ்ந்து கொண்டு, தனஞ்சய(ன்) மடங்கல்எதிர்-அருச்சுனனாகிய
சிங்கத்தி னெதிரே, சாபம்உம் வளைத்து - வில்லையும் வளைத்து, எதிர்
சரங்கள்உம் உகைத்து - அவன்மேல் அம்புகளையும் செலுத்தி, அமர்செய்தார் -
போரைச் செய்தார்கள்; (அப்பொழுது), கனம் சலதி மொண்டு கொடு எழுந்து
அனைய வண்ணன் - மேகம் கடல்நீரை முகந்துகொண்டு எழுந்தாற்போன்ற
கருநிறத்தையுடைய அருச்சுனன், ஒருகார் முகம் வணங்கி - (காண்டீவமென்னும்
தனது) ஒருவில்லை வளைத்து, ஒரு நூறு இனம் சரம் ஒர் ஓர் தொடையில் ஏவி -
ஒவ்வொரு நூறுதொகுதியான அம்புகளை ஒவ்வொருதொடுக்குந்தரத்திலும்
பிரயோகித்து-(அந்த அம்புகளால்), அவர் ஏவுசரம் யாஉம் எதிர்ஏ விலகினான் -
அப்பகைவர்கள் (தன்மேல்) ஏவிய அம்புகளையெல்லாம் எதிரிலே
விலகச்செய்தான்; (எ-று.)

     விலக்கினான் என்ற பிறவினை, சந்தவின்பத்திற்கேற்ப, தொகுத்தல் பெற்றது.
'மனஞ்செய்வலிகூர்' என்ற அடைமொழி இரதத்துக்குப்பொருந்தாதாதலின்,
சதுரங்கசேனையில் இரதத்தை இறுதியில் வைத்தார். சலதி-நீர் தங்குமிடம். பி-ம்:
தனஞ்சயன் மடங்கவெதிர்.                                   (342)

19.-ஒருபக்கத்தில் அருச்சுனன் பகைவெல்ல,
மற்றொருசார் வீமன் தண்டு கொண்டு விரைதல்.

தேருதயபானுவெனநின்றவிசயன்றனெதிர்தெவ்வர்பனியென்னவகலத்
தாருதயமாநிருபர்வேலைசுவறத்தனதுதண்டுதனிகொண்டுகுதியா
வோருதவியின்றிமுடியோடவர்சிரங்களுமுடைந்துமுதுகிட்டுடையவே
மாருதசகாயனெனமாருதனெனக்கடவுண்மாருதசுதன்கடுகினான்.

     (இ-ள்.) தேர் உதய பானு என நின்ற-தேரோடுஉதித்தலையுடைய
சூரியன்போல விளங்கிநின்ற, விசயன் தன்-அருச்சுனனது, எதிர் -
எதிரிலே, தெவ்வர்-பகைவர்கள், பனி என்ன-மூடுபனி போல, அகல-(இருந்த
இடந்தெரியாது) நீங்க,-(மற்றொருபக்கத்தில்) கடவுள் மாருத சுதன் - வாயுதேவனது
குமாரனான வீமசேனன், தார் உதயம் ஆம் நிருபர் வேலை சுவற-
முன்னணிச்சேனையிலே விளங்கித்தோன்றுதலையுடைய அரசர்களாகிய
கடல்வற்றும்படி, தனது தண்டு கொண்டு தனிகுதியா - தன்னுடைய