பின் நிணம் - உடம்பிலுள்ளகொழுப்புகள், எத்தனை-! கொடி குடர்கள்உம்- கொடிபோலச்சுற்றிய குடல்களும், எத்தனை-! நிணம் தடிகள்-கொழுத்துள்ள தசைத்திரள்கள், எத்தனை-! நரம்புவகை-நரம்புகளின்வகைகள், எத்தனை-! எலும்பு நிரை-எலும்புகளின் வரிசைகள், எத்தனை-! மேல் இன்னும், மணிதொடைகள்- அழகியதுடையென்னும் உறுப்புகள், எத்தனை-! மலர் கழல்கள்-தாமரைமலர்போன்ற கால்கள், எத்தனை-! (எ-று.) மிகப்பல வீரர்கள் தலைமுதலியன சின்னபின்னப்பட்டு அழிந்தன ரென்பதாம்.தொடையெனினும், துடையெனினும் ஒக்கும். நரம்புவகை, எலுப்பு நிரை-மென்றொடர் வன்றொடராயின. பி. ம்: குடல்களோடு. (349) 26. | விரிந்தனவு ரங்களும்வெ குண்டனம னங்களும்வி ழுந்தனப சுங்கு ருதிநீர், தெரிந்தனவெ லும்புகள ழிந்தனகொ ழுந்த சைநி மிர்ந்தனத ரம்பின் விசியுஞ், சரிந்தனபெ ருங்குடர்து ணிந்தனசி ரங்கடைத வழ்ந்தனநெ டும்பு ருவமு, மெரிந்தனமு கங்களுமெ ழுந்தனசி ரங்களுமி றந்தனர் கடுங்க ணிளையோர். |
(இ-ள்.) (மற்றும் வலவீரர்களது), உரங்கள்உம்-மார்புகளும், விரிந்தன-பிளந்தன; மனங்களும்-, வெகுண்டன - கோபங்கொண்டன; பசு குருதி நீர்-புதிய இரத்தப்பெருக்குகள், விழுந்தன-கீழ்ப்பாய்ந்தன; எலும்புகள்-, நெரிந்தன- நொருங்கின; கொழு தசை-கொழுத்த சதைகள், அழிந்தன-; நரம்பின் விசிஉம்- நரம்புகளின் கட்டுக்களும், நிமிர்ந்தன - நெக்கு விட்டன; பெரு குடர் - பெரிய குடல்கள், சரிந்தன-; சிரம்-தலைகள், துணிந்தன - அறுபட்டன; நெடு புருவம்உம்- நீண்ட புருவங்களும், கடை தவழ்ந்தன - நுனி நெறித்தன; முகங்களும்-, எரிந்தன- தீந்துபோயின; சிரங்கள்உம்- தலைகளும், எழுந்தன-(உடலினின்று துணிபட்டு) மேலெழுந்தன; (இவ்வாறு போரில் வீடுமனம்புகளால்), கடுங் கண் இளையோர்- பயங்கரமான கண்களையுடைய வீரர்கள், இறந்தனர்-; (எ-று.) வெகுண்டனமனங்களும், கடைதவழ்ந்தனநெடும்புருவமும் என்ற இரண்டும்- அவர்கள்கொண்ட கோபத்தையும், மற்றவை அவர்கள் பலவகையாக அழிந்ததையும் விளக்கும். எரிந்தனமுகங்களும் என்பதற்கு-முகங்கள் கோபாக்கினியாற் கொதித்தன எனினும் அமையும். கடுங்கண் என்றது, கோபக்கண்களை; இனி, கடுமையான தன்மையுமாம். பி-ம்: முகங்களுமிடிந்தனமனங்களும். (350) வேறு. 27. | சோமகரின் மச்சரிற் றென்னரிற் றுளுவரிற் றுருப தேயரில் வளவரிற் றேமருவ லங்கற்கு லிங்கரிற் சேரரிற் சிஞ்சிய ரில்வெஞ்ச மர்விடா மாமகுட வர்த்தனரின் மண்டலிக ரிற்பட்ட வர்த்தனரின் மற்றிவ்வுரவோ னேமருக ணைக்கிலக் காகாத மன்னவர்க ளெம்மண்ன ரென்றுமொழிவாம். |
(இ-ள்.) சோமகரில் - சோமககுலத்தவரிலும், மச்சரில்-மத்ஸ்ய தேசத்தவரிலும், தென்னரில் - பாண்டியநாட்டவரிலும், துளுவரில்-துளுவதேசத்தவரிலும், துருபதேயரில்-துருபதேசத்தவரிலும், வளவரில்-சோழநாட்டவரிலும், தேன் மருவு அலங்கல்- |