மானகுதிரைகளையும் சக்கரங்களையும் கொண்ட தேரை (வீடுமனெதிரில்) செலுத்த,- தனஞ்சயன்உம்-அருச்சுனனும,் கோலம் வெம் சரங்கள் அடைவுஏ தெரிந்து கொண்டு-அழகியகொடிய அம்புகளை முறையே ஆராய்ந்தெடுத்தது, சிலை கோலினன்-(போர் செய்ய) வில்வளைத்தான் (எ-று.) பிரளயகாலத்தில் திருமால் உலகங்களைத் திருவயிற்றில் வைத்துக் கொண்டு பாதுகாக்கின்றமைபற்றி. 'ஞாலமுண்டவாய்' என்றார். சந்தனம்=ஸ்யந்தநம். இவனைக்கொண்டு - கதையை உட்கொண்டுவந்த சுட்டு. இதுமுதற் பத்துக்கவிகள் - இச்சருக்கத்து 17-ஆம் கவி போன்ற விருத்தவகையிற் சேர்ந்தனவேயாகும். (352) 29.-ஸ்ரீக்ருஷ்ணணுடைய பாஞ்சசன்னியமுழக்கம். ஓதம்வந்தெ ழுந்ததென மேகநின்ற திர்ந்ததென வூழியும் பெயர்ந்த தெனவே மாதிரங்க ளுஞ்செவிடு போயகண்ட மும்பொதுளி வாய்பிளந்த தண்டமுகடுஞ் சீதரன்செ ழுந்துளப மாதவன்ற யங்கருண சீதபங்க யங்கொ டிருவி னுதன்வெஞ் சமங்கருதி யூதுகின்ற சங்கின்முழு நாதம்வந்தெ ழுந்த பொழுதே. |
(இ - ள்) சீதரன் - ஸ்ரீதரனென்னும் ஒருதிருநாமமுடையவனும், செழு துளபம்- சிறந்த திருத்துழாய்மாலையையணிந்த, மாதவன்-மாதவனென்னும் ஒருதிருநாமமுடையவனும், தயங்கு - விளங்குகிற, அருணம்-செந்நிறமுடைய, சீதம்- குளிர்ந்த, பங்கயம்-தாமரைமலரை, கொள்-(இடமாகக்) கொண்ட திருவின்- இலக்குமியினது, நாதன் - கணவனும் ஆகிய கண்ணபிரான், வெம் சமம் கருதி - கொடியபோரை உத்தேசித்து, ஊதுகின்ற-(அப்பொழுது தன் திருவாய்மலரில்வைத்து) ஊதின, சங்கின்-(பாஞ்சசன்னிய மென்னுந் திவ்விய) சங்கத்தினது, முழு நாதம் - போரொலிமுழுவதும், வந்து எழுந்த பொழுது - வெளிப்பட்டு மிகுந்தபொழுது, ஓதம் வந்து எழுந்தது என - கடல்கள் பொங்கிவந்ததென்று சொல்லவும், மேகம் நின்று அதிர்ந்தது என - மேகங்கள் நிலை பெற்று இடிமுழங்கிற்று என்று சொல்லவும், ஊழிஉம்பெயர்ந்தது என-கல்பகாலம் மாறிற் றென்று சொல்லவும், மாதிரங்கள்உம் செவிடு போய் - எல்லாத்திசையிலுள்ளவர்களும் செவிடுபட்டு, அகண்டம்உம் பொதுளி-எல்லாவுலகங்களும் தாக்கி, அண்டம் முகடுஉம் வாய் பிளந்தது-அண்டகோளத்தின் மேல்முகடும் (அதிர்ச்சியால்) வெடித்தது; (எ-று.) மாதிரம் - ஆகுபெயர். ஸ்ரீதரன்-திருமகளைத் திருமார்பில் தரிப்பவன்: மாதவன்-திருமகள்கணவன். பின்னே 'திருவின் நாதன்' என வந்ததனால், மாதவன் என்னும் பெயர் - இடுகுறி மாத்திரமாய் நின்றது; இனி, (வாமனாவதாரத்தில்) பெருந்தவமுடையா னெனினுமாம். அருணசீதபங்பஜம் - வடமொழித்தொடர். (353) |