பக்கம் எண் :

254பாரதம்வீட்டும பருவம்

     முன்னமே தன்மக்கள்சிலர் இறந்ததனால் மனம்வருந்திய திருதராட்டிரன்
இப்பொழுது குலத்தலைவனும் சேனாபதியும் தன்னைவளர்த்த தந்தையுமான
வீடுமனும் அழிந்த செய்தியைக் கேட்டு அவ்வருத்தத்தின்மேல்
மிக்கவருத்தமுற்றானென்பதாம். நான்காமடி - துன்பத்தின்மேல் துன்பமடைதற்கு
உவமை; ''புண்ணிலாம்பெரும்புழையிற் கனல்நுழைந்தாலென'' எனக் கம்பர்
கூறியதுங் காண்க. இனி, முதல்வன் புதல்வன் என்பதற்கு - யாவர்க்கும்
முதல்வனாகிய திருமாலினது அவதாரமான வியாசமுனிவனுக்கு மகனாகிய
திருதராட்டிர னென உரைத்தலுமொன்று. இரண்டாமடியால், வீடுமனைத்
திருதராட்டிரன் தனக்குக் கண்ணாகக் கருதியிருந்தமை விளங்கும். பி-ம்:
அயலுற்றென்ன.                                            (373)

50.-இனிச்சேனாபதியாகுபவர் யாரென்று துரியோதனன் எண்ணுகையில்,
கர்ணன் தான் சேனாபதியாவே னெனல்.

செங்கணரவக்கொடியோன்சேனாபதியாய்நாளை
யிங்குமுனையினிற்பார்யாரென்றெண்ணுமெல்லை
அங்கர்பூபன்யானேயமரார்வானத்தமரக்
கங்கைமைந்தன்சொன்னபரிசேகாப்பனென்றான்.

     (இ-ள்.) செம் கண் அரவம் கொடியோன் - (கோபத்தாற்) சிவந்த
கண்களையுடைய துரியோதனன், 'இங்கு - இப்பக்கத்தில், சேனாபதி ஆய் -
சேனைத்தலைவனாய், நாளை - நாளைக்கு, முனையில்-போர்க்களத்தில், நிற்பார்-
நிற்கவல்லவர்,யார்?'என்றுஎண்ணும் எல்லை - என்று ஆலோசிக்கும் பொழுது,-
அங்கர் பூபன் - அங்க நாட்டாரரசனான கர்ணன், 'யானே-,அமரார் வானத்து
அமர-பகைவர்கள் மேலுலகத்துச் செல்லும்படி, கங்கை மைந்தன் சொன்ன பரிசுஏ -
வீடுமன்சொன்னபடியே, காப்பன் - (சேனைத்தலைவனாய் நம்சேனையைக்)
காப்பேன்,' என்றான்-என்றுசொன்னான்; (எ-று.) 

     கங்கைமைந்தன் சொன்னதை, கீழ் நாற்பத்துநான்காங்கவியிற் காண்க.
கர்ணன்வீடுமனிடஞ் சென்று அவனைக் கண்டு பேசித் தான் சேனாபதியாகும்படி
அவனிடம் விடைபெற்றுவந்தானென இங்கே முதனூல் கூறும். அமரார் - (தம்மை)
விரும்பிச் சேராதவர். பி - ம்: அமரிற்றலைவனாகி.                   (374)
 

51.-தனக்குத் துணையாக நிற்பவர் ஒருவருமில்லையென்று
அக்கர்ணனைத்துரியோதனன்
விலக்கித் துரோணனைச் சேனாபதியாகெனல்.

தானாதிகனேநீவெஞ்சமரிற்சேனைத்தலைவ
னானாலரசாய்நிற்பார்யாரென்றவனைவிலக்கி
மீனார்கொடியோன்றன்னைவென்றவேதக்கொடியோய்
சேனாபதியாகென்றான்றீவாய்நாகக்கொடியோன்.