(இ-ள்.) (அதுகேட்டு), தீ வாய் நாகம் கொடியோன்- விஷாக்கினியை உமிழும் வாயையுடைய பாம்பைக் கொடியிலுடைய துரியோதனன், (கர்ணணை நோக்கி), 'தான அதிகனே - ஈகையால் மேம்பட்டவனே! நீ-, வெம்சமரில் - கொடியயுத்தத்தில், சேனை தலைவன் ஆனால்-சேனாதிபதியாய் விட்டால், அரசு ஆய் நிற்பார் யார் - (என்னுடன் பிரதான) அரசனாய்நிற்பவர் வேறுயாவர்? [எவருமில்லையே என்றபடி],' என்று-என்றுசொல்லி, அவனை விலக்கி - அக்கர்ணனை (ச்சேனைத்தலைமை பூணுதலினின்றி) விலக்கி (துரோணனை நோக்கி), 'மீன் ஆர் கொடியோன்தன்னை-மீன்பொருந்தின கொடியையுடைய மன்மதனையும், வென்ற-(போர்த்திறத்தில்) சயித்த, வேதம் கொடியோய்- வேதமெழுதிய கொடியை யுடையவனே! சேனாபதி ஆக-(நீ) சேனைத்தலைவனாகுக,' என்றான்-என்று பிரார்த்தித்தான்; (எ-று.) காமமுதலிய குற்றங்களை ஒழித்தவனென்றும், மன்மதனை வென்ற சிவபிரானோ டொத்தவனென்றும் மூன்றாமடிக்குக் கருத்துக்கொள்ளல் சாலும். உயர்ந்த சாதியில் சிறந்தகுலத்திற்பிறந்த வனாதலாலும், பிராய அறிவு ஒழுக்கங்களில்முதிர்ச்சியுடையவனாதலாலும், அஸ்திரசஸ்திர வித்தைகளில் சிறந்த அநேகர்க்கும்ஆசிரிய னாதலாலும், துரோணன்சேனைத்தலைவனாக்கப்பட்டான். 52.-துரோணன் சேனாபதியாயிருத்தற்கு உடம்பட, யாவருந் துயிலுதல். சிலையாசிரியன்வேந்தர்வேந்தன்சேனைதனக்குத் தலையாய்மன்னர்யாருந்தன்னைவந்துசூழக் கொலையார்பகழிவெள்ளமார்பந்தோறுங்கோத்துத் தொலையாவெம்போர்தொலைக்கத்துணிந்தானெவருந்துயின்றார் |
(இ-ள்.) சிலை ஆசிரியன்-வில்லாசிரியனாகிய துரோணன், வேந்தர் வேந்தன்சேனை தனக்கு தலைஆய்-துரியோதனனதுசேனைக்குத் தலைவனாய், மன்னர்யார்உம் தன்னை வந்து சூழ - அரசர்களெல்லோரும் தன்னை வந்துசூழ்ந்திட,-கொலை ஆர்-கொல்லுதல் தொழில் மிக்க, பகழி வெள்ளம் - பாண வருஷத்தை,மார்பம் தோறுஉம்-(பகைவீரர்களது) மார்பிலெல்லாம், கோத்து- தொடுத்து,தொலையாவெம் போர்-நீங்காத கொடிய போரை, தொலைக்க- செய்துமுடிக்க, துணிந்தான்-நிச்சயித்தான்; (பின்பு அவ்விரவில்), எவர்உம் துயின்றார்-எல்லோரும்உறங்கினார்கள்; (எ-று.)-பி-ம்: சேனைக்கெல்லாம். (376) 53.-சூரியோதய வருணனை. வருணன் மைந்தன் பாடு வருணற் குரைத்து மீளத் தருண மைந்தன் விசயஞ் சதம கத்தோன் கேட்ப இருணி றைந்த கங்கு லேங்கி முன்னே யோட அருணன் பொற்றேர் தூண்ட வருக்கன் குணபா லடைந்தான். |
|