பக்கம் எண் :

முதற் போர்ச்சருக்கம்39

அப்பொழுது அடைந்த மனத்துயரமும், அப்படி-அதற்கேற்றவாறேயிருந்தது; (பின்பு),
வென்று பட்டம் அணிந்த வாரணம் என்ன - (பகை) வென்று (நெற்றியில்) வீரபட்ட
மணிந்த யானை போல, (பகைவர் அஞ்சும்படி கம்பீரமாய்), வீமன் - வீமசேனன்,
அமரின்மேல் வந்தனன் - போர்செய்தற்கு வந்தான்; (எ - று.)

     துரியோதனன் பக்கத்தார் உத்தரனிறந்ததற்காக எவ்வளவு மகிழ்ந்தனரோ,
அவ்வளவு விசனப்பட்டார்கள் அதற்காகப் பாண்டவ சேனையா ரென்பார், 'அப்படி'
என்றார். மச்சர்கோ-மத்ஸ்யதேசத்தார்க்கு அரசன். நேரலார்-தம்மோடு
மனமிணங்காதவர்; எனவே. பகைவராயிற்று. கற்பமுடிவுதோறுங் கடல்
பொங்கியெழுந்து உலகை மூடியழிக்கு மென்பது, நூற்கொள்கை. யானை -
வீரனுக்கு,நடைவலிமை காம்பீரியங்களால் உவமை. வாரணம் - தற்சமவடமொழி.
                                                               (41)

42.-வீமன் போரில் வரவே எதிரிகள் பின்னிடைய, அப்போது
துரியோதனன் வரக் கண்டு வீமன் சினத்தல்.

தாமன்மேல்வரவரவுடைந்திடுதமமெனும்படிதண்டுடன்
வீமன்மேல்வரவரவுடைந்தனர்மேவலார்கள்வலம்புரித்
தாமன்மேல்வரவரவுகண்டுதரிக்கிலாதெதிர்சென்றனன்
காமன்மேலரனென்னநெஞ்சுகனன்றுகண்கள்சிவக்கவே.

     (இ-ள்.) தாமன்-ஒளிவடிவமான சூரியன், மேல் வரவர- வானத்திலே
உயர்ந்துவரவர, உடைந்திடு - அழிந்தொழிகிற, தமம் எனும்படி- இருள்போல,
வீமன்தண்டுடன் மேல் வர வர - வீமசேனன் (தனது சத்துருகாதிநியென்னுங்)
கதாயுதத்தோடு தம்மேல் எதிர்த்துவரவர, மேவலார்கள்-எதிர்பக்கத்தார்,
உடைந்தனர்- அழிந்தொழிந்தனர்; (அப்பொழுது), வலம்புரி தாமன் -
நஞ்சாவட்டைப்பூமாலையையுடைய துரியோதனன், மேல்வர - வீமன்மேல்
எதிர்த்துவர, (வீமன்), வரவு கண்டு -(அவனது)வருகையைப் பார்த்து, தரிக்கிலாது -
சகிக்காமல், நெஞ்சு கனன்று-மனங்கோபித்து, கண்கள் சிவக்க - (அதனாற்) கண்கள்
செந்நிறமடைய, காமன்மேல் அரன் என்ன-மன்மதன்மேற் பரமசிவன் போல, எதிர்
சென்றனன் - (அத்துரியோதனன்மேல்) எதிர்த்துச் சொன்றான்; (எ - று.)

     இப்பாட்டிற்கூறிய உவமையிரண்டனுள், முன்னது-இருந்த விடந்தெரியாதபடி
உடனே அழிதற்கும், பின்னது - தவறாமல் விரைவில் எளிதில் அழிதற்கும் உவமை.
தாமம் - வடசொற்றிரிபு: இது-ஒளியும் மாலையுமாதலை "தாம மொளியுந்
தார்மாலையுமாம்" என்ற திவாகரத்தாலு மறிக. சூரியனுக்கு 'தாமநிதி' என்று
வடமொழியில் ஒரு பெயர். தமஸ் - வடசொல். மேவலார் -
விரும்பிச்சேராதவரென்று காரணப்பொருள். காமன் என்பதற்கு - (ஆண்பாற்கும்
பெண்பாற்கும் ஒன்றற்கொன்று) ஆசையை விளைப்பவனென்றும், (யாவருங்கண்டு)
விரும்புங் கட்டழகுடையவ னென்றும் பொருள். அரன் - ஹரன்;
இவ்வடமொழிப்பெயர், அழித்தற்றொழிற் கடவுளானமைபற்றியது: இனி,
அரனென்பதற்கு - அடியவரது அருந்துயரை அழிப்பவ னென்றும்
பொருள்கொள்ளலாம். துரியோதன.