வருக்கும் ஓருவமை கூறினார். சாதியாதன இல்லை - போர்த்திறமைக ளெல்லாவற்றையுஞ் செய்தன ரென்பதாம் ; இரண்டு எதிர்மறை உடன் பாட்டையுணர்த்தித் துணிவுகுறித்தன. மடங்கல் - (பிடரிமயிர்) மடங்கு தலையுடையதெனக் காரணப்பெயராம்; பிடரி மயிருடைமைபற்றி, சிங்கத்துக்கு வடமொழியில் 'கேஸரீ' என ஒருபெயர் வழங்குதலுங் காண்க. ஏறு - ஆண்பாற்பெயர்; கருத்தாப்பொருளீறுபுணர்ந்துகெட்ட காரணக்குறி. மேதிநீ - (திருமாலாற் கொல்லப்பட்ட மது கைடப ரென்னும் அசுரர்களது) உடற் கொழுப்பினால் நனைந்தமைபற்றி, பூமிக்கு இப்பெயர்; மேதஸ் - நிணம். (44) 45. | ஆரழிந்தனவுருளழிந்தனவச்சழிந்தனவச்சிரத் தேரழிந்துகொடிஞ்சியும்பலசின்னமானதுமன்னனும் போரழிந்தனனென்றுசேனைபுறக்கிடாவருபொழுதினிற் கூரழிந்ததெனக்குறித்தணிநின்றகாவலர்கூடினர். |
(இ - ள்.) (அப்பொழுது, துரியோதனனது தேர்ச்சக்கரத்தின்), ஆர் - இலைகள், அழிந்தன-; உருள் - சக்கரங்கள், அழிந்தன-; அச்சு - இரிசுகள், அழிந்தன-; வச்சிரம் தேர் அழிந்து - வச்சிரம்போல் உறுதியான தேர் சிதைந்து, கொடிஞ்சிஉம் பல சின்னம் ஆனது - தேர்மொட்டும் பல துண்டுகளாய்விட்டது; (அப்பொழுது), மன்னன்உம் போர் அழிந்தனன் என்று - துரியோதனனும் போரில் தோற்றா னென்ற காரணத்தால், சேனை புறக்கு இடா வரு பொழுதினில் - (அவனது)சேனை புறங்கொடுத்து வருகிற சமயத்தில், அணி நின்ற காவலர் - (அவனது)சேனை வகுப்பில் நின்ற அரசர்கள் (பலர்), கூர் அழிந்தது என குறித்து - (நமது)திறமை கெட்டதென்று கருதி, கூடினர் - ஒருங்குதிரண்டார்கள்; (எ - று.) "ஆரே கூர்மையு மாத்தியு மாகுந், தேராழி யகத்திற் செறி யுறுப்புமாகும்" என்ற திவாகரத்தாலும், "ஆர்கெழு குறடு சூட்டாழி போன்று" என்ற சீவகசிந்தாமணியாலும், அதன் உரையாலும், தேர்ச்சக்கரத்தின் இடையிலேயுள்ள இலைகள் ஆரெனப்படுமென விளங்கும். உருள் - சக்கரத்துக்குக் காரணப்பெயர். அச்சு - உருள் கோத்தமரம்; இது-அக்ஷமென்னும் வடசொல்லின் சிதைவு. வச்சிரம்- ஒருவகையிரத்தினமென்றாவது, இந்திரனாயுதமென்றாவது, மரவச்சிர மென்றாவது கொள்க. கொடிஞ்சி - தாமரைமலரின் வடிவமாகச் செய்து தேரின்முன்னிடத்து வைக்கப்படுவதோருறுப்பு என்பர். சிந்நம் - வடசொல். புறக்கு - உருபுமயக்கமாக இரண்டாம்வேற்றுமையின் பொருளில் வந்த நான்காம்வேற்றுமையென்றாவது, இதில்கு - சாரியை யென்றாவது கொள்க. (45) 46.-துரியோதனனுக்குப் பக்கபலமாக அவனுடைய மைத்துனன்மார் வருதல். பரித்ததேரொடுபரிதியைச்செறிபரிதிபோலிருபக்கமுந் தரித்தவேலினர்தாரைவாளினர்தாமவில்லினராகவே |
|