விரித்தவெண்குடைமன்னர்சூழ்தரவீமனிற்பதொர்மேன்மைகண் டெரித்தநெஞ்சொடுவிரைவின்மைத்துனரானகொற்றவரெய்தினார். |
(இ-ள்.) விரித்த வெள் குடை மன்னர் - விரித்துப்பிடித்த வெண் கொற்றக்குடையையுடைய அரசர்கள் (பலர்),- தரித்த வேலினர் - பிடித்த வேலாயுதமுடையவர்களும், தாரை வாளினர் - கூர் நுனியையுடைய வாளாயுதத்தையுடையவர்களும், தாமம் வில்லினர் ஆக - ஒளியையுடைய வில்லையுடையவர்களுமாக,- பரிதியை செறி பரிதி போல் - சூரியனைச் சூழ்ந்த பரிவேடம்போல, இரு பக்கம்உம் சூழ்தர-(தனது) இரண்டு பக்கத்திலுஞ் சுற்றிநிற்க,- வீமன் - வீமசேனன், பரித்த தேரொடு - (தன்னைத்) தாங்கி தேருடனே, நிற்பது- (இடையில்) நிற்பதாகிய, ஒர் மேன்மை - ஒரு கம்பீரத்தோற்றத்தை, கண்டு - பார்த்து,எரித்த நெஞ்சொடு - பொறாமைகொண்டு தவித்த மனத்துடனே, மைத்துனர் ஆனகொற்றவர் - (துரியோதனனுக்கு) மைத்துனன்மார்களான அரசர்கள், விரைவின்எய்தினார் - துரிதமாக அருகுவந்துசேர்ந்தார்கள்; (எ-று.) பகையிருளொழித்துத் தேரின்மீது விளங்குதலால் வீமனுக்குச் சூரியனும், அவனைச் சூழ்ந்துநின்று விளங்குதலால் மன்னர்க்குப் பரிவேடமும் உவமை. பரித்ததேரொடு என்பதை 'மன்னர் சூழ்தர' என்பதனோடும் இயைக்கலாம். பரிதி - வடசொல்; சூரியனுக்குச் சமீபத்தில் சிலகாலங்களில் சூழ்ந்துதோன்றும் மண்டல வடிவமான ரேகை; இதற்கு - பரிவேஷமென்றும் பெயர்; தென் மொழியில் 'ஊர்கோள்' எனப்படும். பக்கம் - பக்ஷம்; வடசொல். மைத்துனரான கொற்றவர் - துரியோதனனது மனைவியான பானுமதிக்கு உடன்பிறந்த முறையாகுபவர். தாமம் - போர்மாலைசூடிய என்றும், நாணிக்கயிற்றையுடைய என்றுங் கொள்ளலாம். பி -ம்: மத்திரரான கொற்றவர். (46) 47.-வீமன் கதாயுதத்தினால் வந்தவரோடு சீறி அவரிரியப்பொருதல். எய்துமைத்துனரெய்துதெவ்வரொடெண்ணில்போர்செயவிண்ணிடைச் செய்துபெற்றனதேரினின்றுமிழிந்துளானனிசீறினான் மொய்திறற்பவமானனன்றுமுருக்குமுக்குவடென்னவே கைதவப்படைமன்னர்மாமுடிசிதையவங்கொருகதையினால். |
(இ - ள்.) எய்து மைத்துனர்-(இவ்வாறு) வந்த துரியோதனன் மைத்துனன்மார்,எய்து-(பாணங்களைப்) பிரயோகித்து, தெவ்வரொடு- (வீமன் முதலிய)பகைவர்களுடனே, எண் இல் போர் செய- அளவில்லாத பெரும் போரைச் செய்யாநிற்க,-விண்இடை செய்து பெற்று அன தேரினின்றும் இழிந்துளான் - தேவலோகத்திலே செய்யப்பட்டு(த் தான்) பெற்றாற்போன்ற (தனது) இரதத்தினின்று இறங்கியுள்ளவனாய், (வீமன்),- மொய் திறல் பவமானன் அன்று முருக்கு முக்குவடு என்னஏ - மிக்க வலிமையையுடைய வாயுதேவன் அக்காலத்தில் [முன்பு ஒரு காலத்தில்] முறித்துத்தள்ளின (மேரு மலையின்) மூன்று சிகரங்கள்போல, கைதவம் படை மன்னர் மா முடி சிதைய-வஞ்சனை |