பக்கம் எண் :

46பாரதம்வீட்டும பருவம்

சூழஉம்-உயர்ந்த கொடிய யானைகளும் குதிரைகளும் இரதங்களும்
காலாட்படையும்ஆகிய சதுரங்க சைனியத்தோடு (பல) அரசர்கள் (தன்னைச்)
சூழ்ந்துவரவும்,மத்திரத்து அரசு எங்கு நின்றனன் எங்கு நின்றனன் என்று போய் -
(என்தம்பியைக்கொன்றவனான) மத்திரதேசாதிபதியாகிய சல்லியன்
எவ்விடத்துள்ளான்எவ்விடத்துள்ளான் என்றுசொல்லித் தேடிச்சென்று, அங்கு
நின்ற மகீபர்வென் இட -அவ்விடத்தில் [தான் போகிறவழியில்] நின்ற
பகையரசர்கள் புறங்கொடுத்தோடும்படி,(பொருது), அவனை முந்துற அணுகினான் -
அச்சல்லியனை முற்படக் கிட்டினான்;(எ - று.)

     அடுக்கு - கோபமும் விரைவும் பற்றியது. அரசு - அரசனுக்குப்
பண்பாகுபெயர்: இது - சொல்லால் அஃறிணையாயினும் பொருளால்
உயர்திணையாகையால், நின்றனன் என்ற ஆண்பால்முற்றைக் கொண்டது. வென் -
வெந்.                                                           (49)

வேறு.

50.-சுவேதன் சல்லியனோடு வீரவாதஞ்சொல்ல, பிறகு
இருவருங் கைகலந்து பொருதல்.

சல்லியனெ னப்பெயர்த ரித்துவரு கோமுன்
வல்லியமெ னத்தகுசி வேதனமர் வல்லான்
பல்லியமு ழக்கியதெ னப்பலவும் வீரஞ்
சொல்லியொரு வர்க்கொருவர் தொடுசிலை குனித்தார்.

     (இ - ள்.) அமர் வல்லான் - போர்செய்தலில் வல்லவனாகிய, வல்லியம் என
தகு சிவேதன் -(கொடிய பராக்கிரமத்திற்) புலியென்று சொல்லத்தக்க சுவேதகுமாரன்,
சல்லியன் என பெயர் தரித்து வரு கோ முன் - சல்லியனென்று பெயர்பெற்றுவந்த
அவ்வரசனெதிரில் பல் இயம் முழக்கியது என - பலவகைவாத்தியங்களை
முழங்கச்செய்ததுபோல, (உரத்தகுரலாக), பலஉம் வீரம் சொல்லி-
பலவகைவீரவாதங்களை யெல்லாஞ் சொன்னபின்பு, (இருவரும்), ஒருவர்க்கு ஒருவர்
தொடு சிலை குனித்தார் - ஒருவரோடொருவர் அம்புதொடுத்தற்குரிய வில்லை
வளைத்துப் போர்செய்தார்கள்;(எ-று.)

     சொல்லி - எச்சத்திரிபு. தொடுசிலை - வினைத்தொகை.

     இதுமுதற் பத்தொன்பது கவிகள் - பெரும்பாலும் ஈற்றுச் சீரொன்றுமாச்சீரும்,
மற்றை மூன்றும் விளங்காய்ச்சீர்களுமாகிய அளவடி நான்கு கொண்ட
கலிவிருத்தங்கள்.                                             (50)

51.-அப்போது துரியோதனன் தம்பிமார் அறுவரைச் சல்லியனுக்குத்
துணையாக அனுப்புதல்.

ஒருவருமிவர்க்குநிகரில்லையெனவுற்றே
யிருவருமலைந்திடவிராசகுலராசன்
பருவரல்கொண்மத்திரபதிக்குதவியாகென்
றருவரையொடொத்தபுயரறுவரைவிடுத்தான்.