பக்கம் எண் :

48பாரதம்வீட்டும பருவம்

லின் எதிரிகளதுமனம் யாதாயினுமொன்றைச் சிந்திக்கவுஞ் சிறிதும் அவகாச
மில்லையாயிற் றென்க. ரணமென்னும் வடமொழி, முதலில் இகரம்பெற்று,
இரணம்எனநின்றது; [நன் - பத -21.]                            (52)

53.முரண்டெதிருமன்னவர்முரண்கொள்சிலையோரொன்
றிரண்டுசிலையாகவொருவீரணிவையெய்தான்
திரண்டுவருமன்னர்முடிசிந்தியுடன்மண்மேற்
புரண்டுவிழவாளிமழைதூவுபுயல்போல்வான்.

     (இ - ள்.) திரண்டு - (தம்மில்) கூடி, வரு - (போருக்கு) வருகிற, மன்னர் -
பகையரசர்களது, முடி-தலையை, சிந்தி - திதறி, உடல் மண் மேல் புரண்டு விழ-
(அவர்கள்) உடம்பு தரையிலே விழுந்து உருளும்படி, வாளி மழை தூவு-
பாணவருஷத்தைச் சொரிகின்ற, புயல் - காளமேகத்தை, போல்வான் - ஒப்பவனான,
ஒரு வீரன்-(சுவேதனாகிய) வீரனொருத்தன், முரண்டு எதிரும் மன்னவர் -
பகைமைகொண்டு எதிர்த்துப்போர்செய்யும் அந்தஆறு அரசர்களது, முரண் கொள்
சிலை-வலிமையைக் கொண்ட வில், ஓர் ஒன்று இரண்டு சிலை ஆக -
ஒவ்வொன்றும் இவ்விரண்டு வில்லாகும்படி இவை எய்தான் - இந்தப்பல
அம்புகளைச் சொரிந்தான்;  (எ - று.)

     கீழ்க்கவியில் 'அவரந்தக்கரணம் வறிதாகும்வகை கணைபல தொடுத்தான்'
என்றதையே இக்கவியில் விவரித்து நன்குவிளக்கிக் கூறினராதலால், 'கணைபல'
என்றதை இவையென அண்மைச் சுட்டாற் குறித்தார். ஓரொன்று இரண்டுசிலையாக-
ஒவ்வொன்று இரண்டு துண்டாக என்றபடி; ஒன்றை இரண்டாக்குதல் வல்லவர்
தொழிலாதலின், இதில், ஒருவில் இரண்டு வில்லாக  என ஒரு சமத்காரமுந்
தோன்றக்கூறினமை காண்க; "அறுவர் சிலையினையுமாறிரண்டு கூறாக்கி" என்றார்
பாரதவெண்பாவிலும். புரண்டு விழ-விழுந்துபுரள என விகுதிபிரித்துக்கூட்டுக.(53)

54.தேரும்விசைகூரிவுளியுஞ்செறிபனைக்கைக்
காருமயில்வாள்சிலைதரித்துவருகாலாள்
யாரும்வெடிபூளைவனமென்னவொருதானே
யூருமொருதேரனிலமொக்குமெனநின்றான்.

     (இ - ள்,) (பகைவர்களது), தேர்உம்-இரதங்களும், விசை கூர் இவுளி உம்-
வேகம்மிக்க குதிரைகளும், செறி பனை கை கார்உம்- (வலிமை)
மிக்கபனைமரம்போன்றதுதிக்கையையுடைய மேகம் போன்ற  யானைகளும், அயில்
வாள் சிலை தரித்துவரு காலாள் - வேல் வாள் வில் என்னும் ஆயுதங்களை
யேந்திவருகிறகாலாள்களும், யார்உம்-(ஆக நால்வகைச்) சேனையோரும், வெடி
பூளைவனம்என்ன-வெடித்த இலவம்பஞ்சுத்தொகுதியை யொத்திருக்க, ஒரு தான்ஏ
ஊரும்ஒருதேர் - வேறுதுணையில்லாத தான் ஒருவனே ஏறிச்செல்லும் (தனது)
இரதமொன்று, அனிலம் ஒக்கும் என (அவ்விலவம்பஞ்சுகளைப் பறக்கடிக்கிற)
காற்றையொக்கு மென்று சொல்லும்படி, நின்றான் - (வெற்றிகொண்டு) நின்றான்;
(எ - று.)