பக்கம் எண் :

முதற் போர்ச்சருக்கம்57

வேறு

69.- சுவேதன்பட்டதற்கு வானோரும் துரியோதனனும்
 பக்கத்து அரசரும் மகிழ்தல்.

பூழிபட நிலமிசையப் பொற்சுண்ணங் கமழ்மேனிப் புதல்வன் வீழ
வாழிமொழித் துளமகிழ்ந்தா ரந்தரதுந் துபிமுழங்க வானோ
                                           ருள்ளார்
ஊழிபெயர்ந் துலகேழு முள்ளடக்கித் திசைநான்கு முகளித் தேறி
யாழிபரந் தார்ப்பதென வார்த்தனரப் பெருஞ்சேனை
                                       யரசரெல்லாம்.

     (இ - ள்.) பொன் - பொன்நிறமான, சுண்ணம் - சுகந்தப்பொடி, கமழ் -
மணம்வீசப்பெற்ற, மேனி - (தனது) உடம்பிலே, பூழி பட - புழுதிபடிய, அ
புதல்வன்- அந்தச்சுவேதகுமாரன், நிலம்மிசை - தரையிலே, வீழ - இறந்துவிழ, -
வானோர்உள்ளார் - ஆகாயத்தில் (போர்காண) வந்துள்ளவரான தேவர்கள், வாழி
மொழிந்து- வாழ்த்துக்கூறி, அந்தரம் துந்துபி முழங்க - ஆகாயத்தில் தேவ துந்துபி
வாத்தியம்முழங்காநிற்க, உளம் மகிழ்ந்தார் - மனமகிழ்ச்சி கொண்டார்கள்; ஆழி -
கடல், ஊழி- கற்பமுடிவுகாலத்திலே, பெயர்ந்து - தன்நிலைமாறி [பொங்கி], உலகு
ஏழ்உம் உள்அடக்கி - ஏழுலகங்களையுந் தன்னுள்ளே அடங்கச்செய்து, திசை
நான்குஉம்உகளித்து ஏறி-எல்லாத் திக்குக்களிலும் கடந்துகிளர்ந்து, பரந்து-பரவி,
ஆர்ப்பது என- ஆரவாரிப்பதுபோல, அ பெரு சேனை அரசர்எல்லாம் - பெரிய
அந்தக்கௌரவசேனையிலுள்ள அரசர்கள் யாவரும், ஆர்த்தனர்-
ஆரவாரித்தார்கள்;(எ -று.)

     சிறந்தவீரன் மண்ணுலகத்தைவிட்டுத் தமதுவிண்ணுலகத்துக்கு விருந்தானதும்,
தமது இனத்தவரான வசுக்களில் ஒருவனான வீடுமன் வெற்றி கொண்டதும்,
தேவர்கள் மனமகிழ்ந்து பேரிகை கொட்டி வாழ்த்துக்கூறினதற்குக் காரணம்.
சுண்ணம் - சூர்ணமென்னும் வடமொழிச்சிதைவு. வாழி மொழிந்து - வாழியென
மொழிந்து என்க. வானோர் உளம்மகிழ்ந்தார்-"உயர்திணை தொடர்ந்த பொருள்
முதலாறும், அதனொடுசார்த்தினத்திணை முடிபின" என்ற விதிபற்றி,
அஃறிணையாகிய சினைப்பெயர் உயர்திணையாகிய முதலின் முடிபைக் கொண்ட
திணைவழுவமைதி. ஊழி-பிரமனாயுள். உலகேழ் - பூலோகம் புவர்லோகம் ஸு
வர்லோகம் மஹர்லோகம் ஜநலோகம் தபோலோகம் ஸத்யலோகம் என்னும்
மேலுலகேழும், அதலம் விதலம் ஸு தலம் தராதலம் ரஸாதலம் மஹாதலம் பாதாளம்
என்னுங் கீழுலகேழுமாம். உகளித்து, உகளி-பகுதி.

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் ஒன்பதுகவிகள் - பெரும்பாலும்
ஈற்றுச்சீரிரண்டும் மாச்சீரும், மற்றைநான்கும் காய்ச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்குகொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்; இவற்றில் ஆறாஞ்சீர்
தேமாச்சீராகவேநிற்கும்.                                        (69)

70.-இதுமுதல் மூன்றுகவிகள் - படுகளச்சிறப்புக் கூறும்.

உடைந்ததடந்தேருருள்களுகுகுருதிப்புனறோறுமும்பர்வானில்
அடைந்தவயவருக்குவழியாயசுடர்மண்டலத்தின்சாயைபோலும்