சூடுதும்பைமண்டலீகர் என்றது, வடமொழிநடை; தும்பை சூடு மண்டலீகர் என மொழிமாற்றுதல், நேராம். 'எண்ணில்கோடி' என்ற அடைமொழியை மன்னர்க்குஞ் சேனைக்குங் கூட்டுக. முன்னே 'மாடிரண்டும்' என வந்ததனாலும், பின்னே 'தூசி' என வருவதனாலும், நடுவில் 'பேரணி' என்றது பின்னணியாயிற்று. பி - ம்: மகீபரோடு. (84) 8.-இருதிறத்துச் சேனைக்குங் கைகலந்த போர். வீசுகொண்டலுடனெதிர்ந்துகோடையுந்திவீசவே மூசுகொண்டலோரிரண்டுமுடுகிநின்றுபொழிவபோல் தூசிநின்றவீரரோடுதூசிவீரர்வில்வளைத் தாசுகங்கள்வீசவீசவந்தரம்புதைந்தவே. |
(இ - ள்.) வீசு கொண்டலுடன் எதிர்ந்து - வீசியடிக்கிறகீழ் காற்றோடு எதிரிட்டு, கோடை உந்தி வீச - மேல்காற்று மோதி வீசுதலால், மூசு கொண்டல் ஓர்இரண்டு - நெருங்கிய இரண்டு மேகங்கள், முடுகி நின்று - (ஒன்றோடொன்று) பகைத்துநின்று, பொழிவபோல் - மழை பெய்வனபோல,-தூசிநின்ற வீரரோடு - (ஒருபக்கத்து) முன்னணிச் சேனையில்நின்ற வீரர்களுடனே, தூசிவீரர் - (மற்றொருபக்கத்து) முன்னணிச்சேனையில்வீரர்கள், வில்வளைத்து - வில்லைவளைத்து, ஆசுகங்கள் வீச வீச - அம்புகளை மேன்மேல் வீசுதலால், அந்தரம் புதைந்த - ஆகாயவெளிகள் மறைந்தன; (எ - று.) பெருங்காற்றோடுகூடிப் பெருமழை பொழிவதுபோல, வீரர்கள் ஒருவர்மேல் ஒருவர் அம்புகளை அளவில்லாமற் சொரிந்து ஆகாயத்தைமறைத்தார்களென்பதாம். "குணக்கெழுகாற்று மேகமுங் கொண்டல்," "வெயிலுங்காந்தளு மேற்றிசைக்காற்றுங் குதிரையும் வேனிலுங் கோடையாகும்" என்ற பிங்கலந்தையைஇங்கே அறிக. பொழிவ - பெயர்; பொழிவனவாகிய கொண்ட லோரிரண்டுபோலென்க. ஆசுகம் - விரைந்துசெல்வதென்று பொருள்; ஆசு - விரைவு: வடமொழிஅவியயம். (85) 9.-இதுவும் அடுத்த கவியும்-திருஷ்டத்யும்நனும் துரோணனும்பொர, திருஷ்டத்யும்நன் தோற்றோடியமை கூறும். சொற்கையாதவாய்மைவல்லதுருபதன்குமாரனும் விற்கையாசிரியனுமுற்றெதிர்ந்து தம்மில்வெகுளவே பொற்கைவெஞ்சராசனம்பொழிந்தகோலிழிந்தவா னுற்கையென்னவொருகைமாமுகங்களூடொளித்தவே. |
(இ-ள்.) (அப்பொழுது), சொல்கையாத-சொல்வெறுக்கப்படாத [இன்சொல்லையுடைய],வாய்மை வல்ல - உண்மைபேசுதலில் வல்லவனான, துருபதன் குமாரன்உம் -துருபதராசனது புத்திரனான திட்டத்துய்மனும், வில் கை ஆசிரியன்உம் -வில்லையேந்திய கையையுடைய துரோணாசார்யனும், உற்று எதிர்ந்து - வந்துஎதிரிட்டு, தம்மில் வெகுள - தமக்குள் [ஒருவன் மேலோருவன்] கோபிக்க, (அச்சம |