பக்கம் எண் :

72பாரதம்வீட்டும பருவம்

கொண்டு அம்புமழையைச் சொரிந்துகொண்டு, முகில் எறிந்த உரும் என-
மேகமிடித்த இடிபோல [மிகப்பயங்கரமாக], தலைப்பெய்தான் - எதிர்த்து வந்தான்;
(எ - று.)

     விக்ரம் - விக்ரமம் என்பதன் விகாரம்;  பராக்கிரமம். சக்ரதேவன்
முகிலெறிந்தஉருமென எனஎடுத்து, தேவராசனான இந்திரன் (தனக்கு வாகனமான)
மேகத்தை(வச்சிராயுதங்கொண்டு) அடித்தலாலுண்டான இடிபோல என்றும்
உரைக்கலாம்;ஸக்ரன் - வடசொல். தலைப்பெய்தல்-முன்னே கலத்தல்.
அநேகபோர் - நிலைமொழிவட சொல்லாதலால், வலி இயல்பு.          (89)

வேறு,

13.-கலிங்கராசனுடன்வந்த யானைப்படைகளை வீமன் வென்றமை.

கதிக்கடுந் தேரினின் றிழிந்து காலிங்கன்
மதிக்குமும் மதகரி வந்த யாவையுந்
துதிக்கைவன் கரங்களாற் சுற்றி யெற்றினான்
விதிக்கொரு விதியனான் வீம சேனனே.

     (இ - ள்.)  (அப்பொழுது), விதிக்கு ஒரு விதி அனான் - ஊழ்வினைக்கும்
ஒருஊழ்வினையை யொத்தவனாகிய, வீமசேனன்-, கதி கடு தேரினின்று இழிந்து -
வேகம்மிக்க (தனது) இரதத்தினின்று இறங்கி,- காலிங்கன்-அந்தக்
கலிங்கநாட்டுமன்னனான சக்ரதேவன், மதிக்கும்- நன்குமதித்த, மும்மதம் கரி வந்த
யாவைஉம் - மூன்றுமதங்களையுடைய யானைகள் (போருக்கு) வந்தன
எல்லாவற்றையும், வல் கரங்களால் துதிக்கை சுற்றி எற்றினான்- (தனது)
வலியகைகளால் துதிக்கையைப் பிடித்து வீசினான்; (எ - று.)

     பதினாயிரம் யானைபலங் கொண்டவனாதலால், இங்ஙனம் எளிதிற் செய்தான்.
'விதிக்கொருவிதியனான்' என்றது - மற்றையோருடைய போர்ச்செயல்களெல்லாம்
விதியை அனுசரித்துப் பயன்தரும்: இவனது போர்ச்செய்கையையோ, விதி தான்
அனுசரிக்கும் என்றவாறு; எனவே, பகைவரை எதிர்த்துத் தவறாமற் கொல்ல
வல்லவன் என்றதாம்; "ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்
முந்துறும்" என்றபடி எல்லாவுபாயங்களையுந் தடுத்துவிட்டுத் தான் தவறாமற்
பலிப்பதாகிய ஊழ்வினையையுந் தன் கருத்தின்படி நடத்தத்தக்க பராக்கிரமமுடையா
னென்க. விதிக்கு என்றதன் இறுதியில் உயர்வுசிறப்புஉம்மை விகாரத்தால் தொக்கது.
பீமஸேனன்-பயங்கரமான சேனையையுடையான். காலிங்கன்- தத்திதாந்தநாமம்.
மும்மதம்-கன்னம் இரண்டு, குறியொன்று ஆக மூன்றிடங்களினின்று பெருகுவன.
துதிக்கை வன்கரங்களால் - யானைத் துதிக்கைபோன்ற தனது வரிய
கைகளாலென்றுங் கொள்ளலாம். பி-ம் : காலிங்கர்.

     இதுமுதற் பத்துக் கவிகள் - பெரும்பாலும் மூன்றாஞ்சீரொன்று மாச்சீரும்,
மற்றை மூன்றும் விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்.    (90)