பக்கம் எண் :

இரண்டாம் போர்ச்சருக்கம்77

     மூன்றாமடியால், கலிங்கன் வீடுமனுக்குப் போரில் உற்ற துணையாக வுள்ளவ
னென விளங்கும். கந்து=ஸ்கந்தம்: மரக்கிளையின் பெயராகிய இந்த வடமொழி
இலக்கணையாய், கட்டுத்தறியைக் காட்டும். யானை கட்டுத்தறி முறிப்ப தாதலை
"தூணும் விலங்கு முறிப்பது" என மேற் பதினேழாம் போர்ச்சருக்கத்தில்
வருவதனாலுங் காண்க. இந்திரன் - வீமனுக்கும், சிறகு - கலிங்கனுக்கும், குன்று -
வீடுமனுக்கும் உவமை.                                          (98)

22.-மூன்றுகவிகள் - வீமன் வீடுமனுடன் கடும்போர்
புரிந்து ஆகவமுழுவதிலும் ஆரவம்மிகுத்தலைக் கூறும்.

வீமனுந் தனதுதேர் மேல்கொண் டாங்கொரு
தாமவே லவன்புயத் தடத்தி லோச்சினான்
மாமரு மாலையான் றானு மற்றவ்வே
றோமர மொன்றினாற் றுணித்து வீழ்த்தினான்.

     (இ - ள்.) வீமனும்-, தனது தேர் மேல் கொண்டு - தன்னுடைய
தேரின்மேல்ஏறிக்கொண்டு, ஆங்கு-அப்பொழுது, ஒரு தாமம் வேல் -
ஒளியையுடையதொருவேலாயுதத்தை, அவன் புயம் தடத்தில்-அந்த வீடுமனது
தோளினிடத்தில், ஓச்சினான்- குறிக்கொண்டு எறிந்தான்;  மா மரு மாலையான்
தான்உம் - மிக்கவாசனையையுடைய மாலையையுடைய அவ்வீடுமனும், அ வேல் -
அந்தவேலாயுதத்தை, தோமரம் ஒன்றினால் - (தான் எறிந்த) தோமரமென்னும்
ஓராயுதத்தால், துணித்து வீழ்த்தினான் - துண்டித்துத் தள்ளினான்; (எ - று.)

     தோமரம் - இருப்புலக்கைக்கும், கைவேலுக்கும், பேரீட்டிக்கும் பெயர்.
தாமவேல்-வெற்றிமாலையைச் சூடிய வேலுமாம். மற்று - அசை. கீழ் 13-ஆம்
பாட்டில் வீமன் தேரினின்று இறங்கினமை கூறியதனால், இங்கே 'தேர்மேல்
கொண்டு'என்றார்                                   (99)

வேறு.

23,ஓடுமிர தத்திவுளி நாலுமட லற்றுவிழ வோரொர்கணை
                               தொட்டி ரதமு,
மீடுகுலையத்துவசம் வீழவனி கத்தவரு மேகவெதிர்
                              முட்டு தலுமே,
நீடுவரை யொப்பதொர்கதாயுத மெடுத்தணுகி நேர்பட
                            வடித்த னனரோ,
வீடுமன் மனத்தனையதேர்வலவனைக்கடிதின்
                 வீமனெனும் வெற்றி யுரவோன்.

     (இ - ள்.) (அதுவுமின்றி, வீமனது), இரதத்து - தேரிற்பூட்டிய, ஓடும் -
விரைந்துசெல்லுந்தன்மையனவான, இவுளி நால்உம் - குதிரைகள் நான்கும், உடல்
அற்று விழ-உடம்பு துணிந்து விழும்படியும், இரதம்உம் ஈடு குலைய - அத்தேரும்
வலிமைகெடும்படியும், துவசம் வீழ- அத்தேர்க்கொடி அறுந்துவிழும்படியும்,
அனிகத்தவர்உம் ஏக-(அவன்) சேனையிலுள்ள வீரர்களும் (புறங்கொடுத்து)
ஓடும்படியும், ஓர் ஒர் கணை தொட்டு - (ஒவ்வொன்றுக்கு) ஒவ்வொரு அம்பை
எய்து, எதிர் முட்டுதலும் - (வீடுமன்) எதிர்த்துப் போர் செய்தவளவில்,-வீமன்
எனும்வெற்றி உரவோன்-வீமனென்கிற