சயத்தைத்தரும் பலத்தையுடைய வீரன், கடிதின் - விரைவாக, நீடுவரை ஒப்பது ஒர்கதாஆயுதம் எடுத்து அணுகி-நீண்ட மலையை யொப்பதொரு கதாயுதத்தை யெடுத்துக்கொண்டு அருகிற்சென்று, வீடுமன் மனத்து அனைய தேர் வலவனை- வீடுமனது மனத்தை யொத்த தேரைச் செலுத்தும் பாகனை, நேர் பட அடித்தனன்- குறி தவறாது காயம்படும்படி அடித்தான்; (எ - று.) கதைக்கு மலைஉவமை - பெருவடிவத்துக்கும், வலிமைக்கும், அழித்தற்கு அருமைக்கும். அச்சந்தருவதற்கு மென்க. மனத்தனைய - மனத்துக்கு மிகவும் இஷ்டமான என்றபடி; இதனைத் தேருக்கும் வலவனுக்கும் அடைமொழியாக்கலாம் : தேருக்கு ஆக்கும்போது, மனத்து அனைய-மனோவேகத்தை யொத்த எனப் பொருள்கொள்ளினும் இழுக்காது. உரவோன் என்பதில், உரவு-பகுதி; அது-பலம்: தேகபலம், ஆயுதபலம், சேனாபலம், மனோபலம், புத்திபலம், தெய்வபலம் முதலிய பலவகை வலிமைகளையும் உணர்த்தும். இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பத்துக்கவிகள் - பெரும்பாலும் முதலைந்துசீரும் கூவிளங்காய்ச்சீர்களும், ஆறாவது தேமாச்சீரும், ஏழாவது புளிமாச்சீருமாகிய எழுசீராசிரியவிருத்தங்கள். (100) 24. | வேகமுடனிப்படியவ்வீமனுமுடற்றியடல்வீடுமனொ டொத்தமுதுபோர், மோகரவிதத்தரசர்மாமகுடரத்நமுடன்மூளைகடெறிக்கவடியா, நாகமொடெடுத்திவுளிதேர்சிதறமுற்றவொருநாழிகையிலெற்றி வரவே, யாகவமுழுக்கவுருமேறெறிவதொக்குமெனவாரவமிகுத்ததறவே. |
(இ - ள்,) இ படி - இவ்விதமாய், வேகமுடன் - விரைவோடு, அவ்வீமனும்-, உடற்றி - போர்செய்து, அடல் வீடுமனொடு ஒத்த - வலிமையையுடைய பீஷ்மனோடு பொருந்திய, முது போர் மோகரம் விதத்து அரசர் - பழமையான [பெரிய] யுத்தத்தில் உக்கிரமான தன்மையையுடைய அரசர்களது, மா மகுடம் ரத்நமுடன்- பெரிய கிரீடத்திற்பதித்த இரத்தினங்களுடனே, மூளைகள்- தலைமூளைகளும், தெறிக்க-சிதறும்படி, அடியா-அடித்து, நாகமொடு இவுளி தேர் - யானைகளோடு குதிரைகளையுந் தேர்களையும், எடுத்து-, சிதற - (அவை பொடியாய்ச்) சிந்தும்படி, ஒரு நாழிகையில் - ஒரு நாழிகைப் பொழுதிலே, முற்ற - (அச்சேனை) முழுவதிலும், எற்றி வர - தாக்கிக்கொண்டு வருகையில், ஆகவம் முழுக்க - அப்போர்க்களம் முழுவதும், உரும் ஏறு எறிவது ஒக்கும் என - பேரிடிவிழுவதுபோலுமென்னும்படி, அற - மிகவும், ஆரவம் மிகுத்தது - இரைச்சல்அதிகப்படப்பெற்றது; (எ - று.) ஆஹவம், ஆரவம் - வடசொற்கள். பெரியதையுஞ் சிறந்ததையும் ஏறென்றல்,மரபு. பி - ம் : இப்படியில். சிதறி. (101) 25.-இதுவும். மேற்கவியும்-குளகம்: அபிமனும்வந்து கடுமையாகப் பொருவதைத் தெரிவிக்கும். மீளவும்வளைத்தசிலை வீடுமனத்திர்த்தகுரல் வீமனொடுருத்திருவருங், காளமுகிலுக்குமுகினேர்மலைவதொக்கவெரிகா லுநயனக் |
|