30.-சூரியாஸ்தமனவருணனை. வேலையமுதுக்குவருவானவர்களொத்தனர்கள்வீடுமன்முதற்படைஞரா லாலநிகரொத்தனனனீகினிதொலைத்தொருதனாண்மைநிலையிட்டுவருவோன் மேலினியிமைப்பொழுதுநாம்வெளியினிற்கிலிவன்மேலிடுமெனக்கருதினான் போலெழுவயப்புரவியூருமிரதத்திரவிபோயுததியிற்சொருகினான். |
(இ - ள்.) (அப்பொழுது அஞ்சித் சிதறியோடின), வீடுமன் முதல் படைஞர் - பீஷ்மன்முதலான சேனைவீரர்கள், வேலை அமுதுக்கு வரு வானவர்கள் ஒத்தனர்கள் - பாற்கடலில்தோன்றிய அமிருதத்தைப் பெறுதற்கு வந்த தேவர்களைப் போன்றார்கள்; அனீகினி தொலைத்து - (அங்ஙனம் சத்துரு) சேனையை யோட்டி, ஒரு தன் ஆண்மை நிலை இட்டு வருவோன் - ஒப்பற்ற தனதுபராக்கிரமத்தை நிலைநிறுத்தி வருபவனான அருச்சுனன், ஆலம் நிகர் ஒத்தனன் - (அப்பொழுது பாற்கடலினின்று யாவரும் அஞ்சுமாறு எழுந்த) காலகூடவிஷத்தை உவமையாகப் பொருந்தினான்; (அச்சமயத்தில்), எழு வய புரவி ஊரும் இரதத்து இரவி-ஏழு வலியகுதிரைகள் பூண்டு நடந்துந் தேரையுடைய சூரியன், இனி மேல் நாம் வெளியில் இமைப்பொழுது நிற்கில் இவன் மேலிடும் என கருதினான் போல் - நாம்இனிமேல் வெளியிலே ஒரு கணப்பொழுது நின்றாலும் இவ்வருச்சுனன் நம்மேலும்(அழிக்க) வருவானென்று எண்ணினான்போல, உததயில் போய் சொருகினான் -(மேல்) கடலிற் போய் மறைந்தான்; (எ - று.)- படைஞரால், ஆல் - ஈற்றசை. முன்னிரண்டடி - உவமையணியும், பின்னிரண்டடி- ஏதுத்தற்குறிப் பேற்றவணியுமாம். மண்ணுலகத்தில் ஆண்மைநிலையிட்டு வருபவன் அங்கு எதிர்ப்பவரில்லாமையால் விண்ணுலகத்துப் பாய்ந்து எதிரில் நிற்குந் தன்மேல் பொருதிடுவானோ எனச் சூரியன் அஞ்சினான். சூரியன் அஸ்தமித்தலை மேல்கடலில்மறைதலாகத் தோற்றம்மாத்திரத்தைக்கொண்டு கவிகள் வருணிப்பர். வீடுமன்முதலியோரை வானவர்க ளென்றதற் கேற்ப, வெற்றியை அமுதமாகக் கொள்க.அமுதுக்கு - நான்காம்வேற்றுமை, பொருட்டுப் பொருளது. 'படைஞரார்' என்றபாடத்துக்கு, ஆர் - விகுதிமேல் விகுதி. ஆலம் - ஹாலம்: வடசொல். எழுபுரவி -பண்புத்தொகை; சூரியனது தேர்க்குதிரை ஏழெனப் பெயர்பெற்ற தொன்றேயென்பாரும், ஒரு குதிரைக்கு ஏழு பெயர்க ளென்பாரும், ஏழுகுதிரைகளென்பாரும்,ஏழுகுதிரைகளில் ஒன்று ஏழெுன்று பெயர்பெற்ற தென்பாரும் எனப் பலதிறத்தவராவர். 31.-மாலைப்பொழுது வருணண. ஆதபனொளித்ததிசையோவொளிசிவந்ததறவாழ்குருதிமெத்துகையினான் மாதிரமுமைக்கடலுமாநிலமுமுட்டவொருமாசறுசிவப்புவடிவா யேதிலிருள்புக்குலவலாமிடமறக்கடையினேறனலியொத்ததிகலிப் பாதகமிகுத்தகொலைவாணிருபர்தத்தமதுபாடிநகர்புக்கனர்களே. |
|