பக்கம் எண் :

92பாரதம்வீட்டும பருவம்

     துரியோதனனைத் தேற்றுதற்குப் பாகனது துணையும் இல்லை யானதை இதில்
தெரிவித்தார். நண்ணலரை மாகந்தனிற் சென்று அமர்கடந்து வரு மைந்துடையோன்
திருமைந்தன் என்பதற்கு - (இந்திரனாலேவப்பட்டுப்) பகைவர்களாய் வந்து
துரியோதனாதியர்களைக் கட்டித் தூக்கிக்கொண்டு போன சித்திரசேனன்
முதலியவர்களைப் பெரிய வானத்திற் பாய்ந்து போரில் வென்று வந்த
வலிமையையுடையனான வீமசேனனது  சிறந்தகுமாரனாகிய கடோத்கச னென்று
உரைப்பினும் அமையும். மீண்டும்-துரியோதனனைக் கடோற்கசன்
வீழ்த்தினதல்லாமல்என்றபடி. நண்ணலர் - பொருந்தவர்: பகைவர். மாகம்=மஹா
கம்:
வடசொல்.வேகம்படப் பாய்ந்தான் என இயைப்பினுமாம்.         (117)

9.-துரியோதனன் சோர்ந்துவீழ்ந்தமைகேட்டு
வீடுமன் அருச்சுனனைவிட்டு அங்கு எழுதல்.

விழுந்தான்வேலாற்றேர்ப்பாகன் வெஞ்சாயகத்தால்விறல்வேந்தர்
தொழுந்தாளரசன்றானுமுயிர் சோர்ந்தானென்னுந்தொனிகேட்டுச்
செழுந்தார்வாகைவிசயனையுந் தி்ருமாலையும்விட்டொருமுனையா
யெழுந்தான்மந்தாகினிமைந்தனிலைந்தார்தமக்கோரெயில்போல்வான்.

     (இ - ள்.) தேர் பாகன் - (துரியோதனனது) சாரதி, வேலால் - (பகைவன்
எறிந்த)வேலாயுதத்தால் விழுந்தான் - இறந்துவிழுந்திட்டான்;  விறல் வேந்தர்
தொழும் தாள்அரசன் தான்உம் - வலிமையையுடைய அரசர்கள் பலர் வணங்கும்
பாதத்தையுடையதுரியோதனராசனும், வெம் சாயகத்தால் - கொடியபகைவனம்பால்,
உயிர்சோர்ந்தான்-மூர்ச்சித்தான்,' என்னும்-என்று (சேனைவீரர்) கூவுகிற, தொனி-சத்தத்தை,கேட்டு-, இளைத்தோர்தமக்கு ஓர் எயில் போல்வான் - (போரில்)
இளைத்தவர்க்குஒருமதில்போலப் பாதுகாவலாகவுள்ளவனாகிய, மந்தாகினி
மைந்தன்-கங்காபுத்திரனான வீடுமன், செழு தார் வாகை விசயனைஉம்
திருமாலைஉம் விட்டு -(தன்னா லெதிர்க்கப்பட்டுநின்ற) அழகிய
வாகைப்பூமாலையைச்சூடியஅருச்சுனனையும் கண்ணனையும் விட்டுநீங்கி, ஒரு
முனை ஆய் எழுந்தான் -ஒரேவேகமாய்ப்புறப்பட்டு (த் துரியோதனனிடம்)
வந்தான்; (எ - று.)

     செழுந்தார்வாகை யென்றது, முந்தினநாளில் வீடுமனாதியோரைவென்ற சயத்தை
விளக்குதற்கு. இளைத்தோர்தமக்கோ ரெயில்போல்வான்-இது இங்கே ஸாபிப்பிராய
விசேஷணம்: கருத்துடையடைமொழி. ஸாயகம், த்வநி - வடசொற்கள். திருமால் -
திருமகளிடத்து மால்கொண்டவனென்க; மால்- ஆசைப்பெருக்கம்:
சிறந்தமாயவனுமாம். மந்தாகிநீ - ஆகாச கங்கைக்குப் பெயர்.       (118)

10.-வீடுமன் துரியோதனன் மூர்ச்சையைத் தெளிவித்தல்.

வண்டாரலங்கல்வலம்புரியோன் மார்பந்துளைத்தவாளிவழி
கண்டானெடுத்துத்தாழ்ந்ததிருக் கையாலணைத்துக்காற்றேரிற்
கொண்டானாவிதருமருந்து கொடுத்தானவனுங்கொடுத்தமருந்
துண்டானுண்டகணத்தினின்மீண் டுணர்ந்தானுலகேழுடையானே.