பக்கம் எண் :

94பாரதம்வீட்டும பருவம்

     (இ - ள்.) (வீடுமன்), மருமங்களின்உம்-(எதிரிகளுடைய) மார்புகளிலும்,
புயங்களின்உம் - தோள்களிலும், வதனங்களின்உம்-முகங்களிலும், கண்களின்உம்-
கண்களிலும், செருமும்படி - தைத்து நெருங்கும்படி, வெம் கணை மாரி சிந்தி
சிந்தி-கொடிய அம்புமழையை மிகுதியாகப்பெய்து, சிரம் துணித்து-(அவர்கள்)
தலைகளையறுத்து, தருமன் சேனை பரவை எலாம்- யுதிட்டிரனது சேனாசமுத்திரம்
முழுவதிலும், தான்ஏ ஆகி- தானொருவனேயாய், தலைநாளில் பொரு மந்தரம்
மால்வரை போல திரிந்தான்-முன்னொருகாலத்தில் (திருப்பாற்கடலில்) பொருந்திய
[கடைந்த] பெரிய மந்தரகிரிபோலச் சுழன்று, வெம் போர் புரிந்தான்-கொடிய
போரைச்செய்தான்; (எ-று.)- முதலடியிற்கூறிய நான்கிடமும், அம்பெய்தற்குச்
சிறந்தஇலக்குக்களாம். செருமம், செருமு-பகுதி. மர்மம், வதநம், மந்தரம் -
வடசொற்கள்.                                                (121)

13.-வீடுமன் மும்முரமாகக் கொன்றுகொண்டிருக்கவும்,
அருச்சுனன் கண்டுங் காணான்போலிருத்தல்.

மலையொத் ததிருங் கடகளிறும் வயமா வணியு மான்றேருந்
தொலையத் தொலைய யாவரையுஞ் சுடுவெங் கணையாற்
                                      றுரந்துதுரந்
தலையத் தரங்க மெறிகடல்வாய் வடவா னலம்போ லவனின்ற
நிலையைக் கண்டுங் காணான்போ னின்றான் விசய னிகரில்லான்.

     (இ - ள்,) மலை ஒத்து அதிரும் கடகளிறுஉம் - மலைபோல நின்று
கர்ச்சிக்கும் மதயானைகளும், வய மா அணிஉம் - வலிய குதிரைவரிசைகளும்,
மான்தேர்உம் - குதிரைகளைப் பூட்டிய தேர்களும், தொலைய தொலைய -
மிகுதியாகஅழியும்படி, யாவரைஉம் - (பகைவர்கள்) எல்லோரையும், சுடு
வெம்கணையால்துரந்து துரந்து - அழிக்கவல்ல கொடிய அம்புகளால்
துரத்தித்துரத்தி, அலையதரங்கம் எறி கடல்வாய் வடவானலம் போல் -
அலையும்படி அலைகளைவீசுகிறகடலில் படபாமுகாக்நிபோல, அவன் நின்ற -
அவ்வீடுமன் (பாண்டவசேனைமத்தியில்) நின்ற, நிலையை - தன்மையை,
கண்டுஉம் - பார்த்தும், நிகர் இல்லான்விசயன் - ஒப்பற்றவனான அருச்சுனன்,
காணான் போல் நின்றான் - பாராதவன்போல(ப் போர் செய்யாது திகைத்து)
நின்றான், (எ - று.)

     படபாநலம் - வடசொற்றொடர்; கடலினிடையே பெண்குதிரையொன்றின்
முகத்தி லுள்ளதும், மழை முதலியவற்றால் வருகிற நீரினால் கடல் பொங்காதபடி
அந்நீரை உறிஞ்சுவதும், யுகாந்தகாலத்தில் அங்குநின்று எழுந்து உலகங்களை
யொழிப்பதுமாகிய தீ: படபா - பெண்குதிரை; அநலம் - நெருப்பு. நிகரில்லான்
காணான்போல் நிற்பதே! என்றபடி இனி, நிகரில்லான் - இகழ்ச்சிக்குறிப்பினதுமாம்.
                                                           (122)

வேறு.

14.-வீடுமன் கடும்போர்புரிகையில் பொராதிருந்த அருச்சுனனை
ஸ்ரீ கிருஷ்ணன் சினந்து, சக்கரமெடுத்தல்.

கானெரி துற்றென வீடும னிப்படி காதிம லைத்திடவு
மானநி னைத்திலை சாபமெ டுத்திலை வாளிதொ டுத்திலைநீ