பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்101

நொய்தின் உகைத்த - விரைவாகப் பிரயோகித்த, வடி கோலொடு- கூர்மையான
அம்புகளால், இவன் - திட்டத்துய்மனது, கோல் -  அம்புகள், முனை அற்று -
நுனியறுந்து, விழ - கீழ்விழவும், தொடு- (கையில்) ஏந்திய, குனி சிலை - வளைந்த
வில்லின், நாண்- நாணி, அழிய - துணிபடவும், சேலொடு சேல் பொரு சீலம் எனும்
படிதேர்கள் இரண்டுஉம் மணி காலொடு கால் பொர - சேல்மீனோடு சேல்மீன்
போர்செய்ய மொழுங்கு போலு மென்னும்படி, தன்தேரும் திட்டத்துய்மன் தேரும்
அழகிய கால்களோடு கால்கள் தாக்க, வல் துவசத்தொடு கவசம் அழித்தனன் -
(அத்திட்டத்துய்மனது) வலிய தேர்கொடியையும் உடற்கவசத்தையும் அழித்தான்:

     நொய்தின் - அலட்சியமாக, எளிதாக, மென்மையாக எனவும் பொருள்கள்
படும். கால் என்றது - தேரின் ஏர்க்கா லென்றேனும், முன்நிற்குந்
தூண்களென்றேனும் சக்கர மென்றேனும் கொள்க. கோலொடு, ஓடு - கருவிப்
பொருளது. சீலம் - வடசொல்.                                  (151)

14.-கவிக்கூற்று: துரோணன் செய்த போரின் சிறப்பு.

அருமுனியாதிதிட்டனுமன் குலவாதியும்மந்தணனாம்,
பெருமுனிதானுமுடற்றியபோர்சிலர்பின்பொருதாருளரோ,
வொருமுனியேழ்கடலுங்கரமொன்றிலொடுக்கினன்மன்னனைமேல்,
வருமுனிவென்றனன்முனிவருடன்பொரவல்லவர்யார்புவிமேல்

     (இ-ள்.) (முன்பு), அரு முனி ஆதி - (உலகத்தில்) அருமையான
முனிவர்களுக்கு முதல்வனான, வதிட்டன்உம்- வசிட்டனும், மன் குலம் ஆதிஉம்-
க்ஷத்திரியசாதியில்தோன்றிய சிறந்தவனான விசுவாமித்திரமகாமுனிவனும், அந்தணன்
ஆம் பெரு முனிதான் உம்-பிராமணசாதியனான சிறந்த முனிவனாகிய பரசுராமனும்,
உடற்றிய - பெருங்கோபங்கொண்டுசெய்த, போர்-யுத்தம்போன்ற யுத்தத்தை, பின்-
பின்பு, பொருதார் - செய்தவர், சிலர் உளர் ஓ - சிலபேராயினும் இருக்கின்றனரோ?
[எவருமில்லை என்றபடி] ஒரு முனி - ஒப்பற்ற அகஸ்தியமகாமுனிவனொருவன்,
ஏழ்கடல்  உம் - ஏழுசமுத்திரத்தையும், கரம் ஒன்றில் ஒடுக்கினன் - (தனது
வலிமையால்) ஒருகையிலொடுங்கச்செய்தான்:  (இப்பொழுது), மன்னனை -
இராசனான திட்டத்துய்மனை, மேல் வரு முனி - எதிர்த்துவந்த முனிவனான
துரோணன், வென்றனன் - சயித்தான்;  (ஆதலால்), முனிவருடன் பொர வல்லவர் -
முனிவர்களோடு போர்செய்யவல்லவர், புவிமேல் யார் - பூலோகத்தில்
யாவர்உள்ளார்?

     'திட்டத்துய்மனை முனி வென்றனன்' என்ற சிறப்புப் பொருளை (வேறுசில
திருஷ்டாந்தங்களுங் காட்டி) 'முனிவருடன் பொரவல்லவர் யார் புவிமேல்' என்ற
பொதுப்பொருளால் விளக்கியதனால், வேற்றுப்பொருள்வைப்பணி. ஏழ்கடல்-
உவர்நீர், கருப்பஞ்சாறு, கள், நெய், தயிர், பால், நன்னீர் இவற்றின்மயமானவை.

    அறிவு ஒழுக்கங்களில் ஒப்புயர்வின்மையை உணர்த்துதற்கு 'அருமுனி'
என்றும்,வசிஷ்டன் பிரமனது குமாரனாய்ப் படைப்பின் தொடக்கத்தில்
மற்றைமுனிவர்களுக்கு முந்தித் தோன்றியதனால்