தாது - மகரந்தப்பொடி, நீ தவறின் - உன்னைவிட்டாலென்றுமாம். பின்னை - என்பது,வேறு என்றும் பொருளில் வந்தது. நிருபர்சிகாமணி-அரசர்கள் தலைமேல்வைத்துக்கொண்டாடத்தக்கவனென்றபடி. (154) 17.-இதுமுதல்மூன்றுகவிகள்-ஒருதொடர்: 'நீசக்கரவியூகத்தைப்பிளந்து வெல்க' என்று அபிமனைத் தருமன்தழுவி விடைகொடுத்தனுப்பியமை கூறும். தன்னெதிர்மாமயிலோனெனநின்றதனஞ்சயன்மாமகவைப் பொன்னெதிர்பேரொளியருள்வடிவாகியபூபதிவருதியென நின்னெதிர்போரினினிற்பவர்வேறிலர்நேமிவியூகமுநீ முன்னெதிராவமர்புரிபொழுதன்றிமுரண்குலையாதினியே. |
(இ - ள்.) (பின்பு), பொன் எதிர் - பொன்னையொத்த, பேர்ஒளி-மிக்க உடம்பினொளியையுடைய, அருள் வடிவு ஆகிய-கருணையின் வடிவமான, பூபதி - தருமராசன்,-தன் எதிர்-தனது எதிரில், மா மயிலோன் என நின்ற - சிறந்த மயிலைக்(கொடியும் வாகனமுமாக) உடைய முருகக் கடவுள்போல நின்ற, தனஞ்சயன் மா மகவை - அருச்சுனனது சிறந்த புத்திரனான அபிமனை, வருதி எனா - வா வென்று அழைத்து, 'நின் எதிர்-உனது எதிரில், போரினில் நிற்பவர் - யுத்தத்தில் நிற்கவல்லவர், வேறு இலர் -எவரு மில்லை; இனி-, நீ-, முன் எதிரா- முன்னே எதிர்த்துச்சென்ற அமர் புரி பொழுது அன்றி-போர் செய்யும்பொழுதில்லாமல், நேமி வியூகம் உம் - சக்கரவியூகமும், முரண் குலையாது - வலிமை யழியாது;' (எ - று.)-இப்பாட்டில், 'என' என்ற வினையெச்சம், மேல் பத்தொன்பதாம்பாட்டில் வருகிற "புல்லுக வென்றனன்" என்பதிலுள்ள 'என்றனன்' என்ற முற்றோடு முடியும்; இப்பாட்டின் பின் இரண்டடிமுதல் 19-ஆம் பாட்டில் "புல்லுக" என்பதுவரை - தருமன் அபிமனை நோக்கிக் கூறிய வார்த்தைகள். முருகன் - அபிமனுக்கு, இளமை அழகு பலம் பகைவெல்லும் பராக்கிரமம் சிவபிரான்ருள்பெற்றமை இவற்றில்உவமை. தருமன் செந்நிறமுள்ளவ னாதலால், 'பொன்னெதிர்பேரொளி' எனப்பட்டது; இனி, இத்தொடருக்கு- பிருகஸ்பதிபதியையோத்த சிறந்த ஞானமுடைய என்றும் பொருள் கொள்ளலாம். கருணைநிரம்பியவனென்றும், அக்குருணையின் அமைதி இவனது தோற்றங் கண்டமாத்திரத்திலே விளங்கு மென்றுங் கூறுவார், 'அருள்வடிவாகிய' என்றார். (155) 18. | என்னையழைத்துடனென்னலுடன்றுவென்னிட்டவில்லா சிரியன், மன்னைவளைத்தொருசக்கரயூகம்வகுத்தெதிர் நின்றனனா, னின்னையளித்ததராபதிதன்னையுநின்னையுமேமொழியப், பின்னையெடுத்தவிலோடெதிர்சென்றுபிளந்திடவல்லவர்யார். |
(இ-ள்.) 'நென்னல் - நேற்று, என்னை-, அழைத்து- (போருக்குக்) கூப்பிட்டு, உடன் -என்னுடனே, உடன்று-போர்செய்து, வென் இட்ட - புறங்கொடுத்த, வில் ஆசிரியன்- வில்லில்வல்ல துரோணாசாரியன், அக்கறுவையுட்கொண்டு இன்றைக்கு), மன்னை வளைத்து - (தன்சேனை) அரசர்களைச் சூழநிறுத்தி, ஒரு சக்கரயூகம் |