பக்கம் எண் :

108பாரதம்துரோண பருவம்

இராமபிரானும், மேவலார் உயிர் தென் புலத்து இடு - பகைவர்களின் உயிரைத்
தெற்குத்திக்கில் [யமலோகத்தில்] செலுத்துகிற, தன் பெரு தாதைஉம் - தனது
சிறந்ததந்தையான அருச்சுனனும், தரம் என-(தனக்கு) ஒப்பென்று சொல்லுமாறு,-
இமைப்பிடை - கணப்பொழுதிலே, ஏவினான் - பாணப்பிரயோகஞ்செய்தான்:
(எ- று.)

     கோதை தங்கு கரம் -  உடும்புத்தோலாலாகிய முன்னங்கைச் சட்டைதங்கிய
கரமுமாம்: கோதா - வடசொல். சீதை - ஸீதா என்னும் வடசொல்லின் திரிபு:
இதற்கு- கலப்பையுழுசாலென்று முதலிற் பொருள்: சனகமகாராசான்
கேள்விக்காகச்சாலையுழுதபோது, பிராட்டி பூமிதேவியின்மகளாய்க்
கலப்பையுழுபடைச் சாலிற் காணப்பட்டதனால், சீதையென்று திருநாமம்; இது -
இடவாகுபெயரின்பாற்படும்.                                     (161)

24.- அபிமனம்பினால் சக்கரவியூகத்துஅணி சிதறுதல்.

அச்சுதப்பெயர்மாதுலன்புகலரியமந்திரமன்பினோ
டுச்சரித்தொருநொடியினிற்பலகோடிபாணமுடற்றினான்
எச்சிரத்தையுமெப்புயத்தையுமிடைதுணித்தலினடையமுன்
வச்சிரத்தவனுரைசெய்சக்கரமாறிலாவணிபாறவே.

இதுவும், மேற்கவியும் - குளகம்.

     (இ-ள்.) அச்சுதன் பெயர் மாதுலன் புகல்-அச்சுதனென்னும் ஒரு
திருநாமத்தையுடைய (தன்) மாமனான கண்ணபிரான் (தனக்கு) உபதேசித்துள்ள,
அரிய மந்திரம் - அருமையானதொரு மந்திரத்தை, அன்பினோடு உச்சரித்து -
பக்தியோடு சொல்லி, ஒரு  நொடியினில் - ஒருமாத்திரைபொழுதிலே. பலகோடி
பாணம்- அநேகங்கோடி அம்புகளை, உடற்றினான் - பெருங்கோபத்தோடு
பிரயோகித்தான்;(அவைகள்), எ சிரத்தைஉம்-(பகைவரது) தலைகளெல்லாவற்றையும்
எ- புயத்தையும்உம்-தோள்களெல்லாவற்றையும், இடைதுணித்தலின் - நடுவிலே
துண்டித்தலால்,-வச்சிரத்தவன் முன் உரைசெய்-வச்சிராயுதமுடைய இந்திரன் முன்பு
உபதேசித்துள்ள, சக்கரம் - சக்கரவியூகத்தினது, மாறு இலா அணி - ஓப்பில்லாத
ஒழுங்கு, அடைய பாற-முழுவதுஞ் சிதைய,-(எ - று.) 'பற்றினான்' என அடுத்த
கவியில் முடியும்.

     முன்னிரண்டடியிற்குறித்தது, வைஷ்ணவாஸ்திரம். 'முன்
வச்சிரத்தவனுரைசெய்சக்கரம் என்றதனால், சக்கரவியூகத்தின் உபதேசபரம்பரை
இந்திரனிடத்தினின்று வந்ததென்று தெரிகிறது. 'என்பது, ஸ்ரீவாசுதேவன் பக்கல்
பெற்றதோர் அஸ்திரத்திரத்தினையுச் சரித்து...................சக்கரயூகத்தைப் பிளந்து
உள்புக்கு' என்றது, பெருந்தேவனார் பாரதம். மாதுலன் - மாதாவினுடன்பிறந்தவன்.
மாறு இலா - மாறுபடுதலில்லாத எனினுமாம் பாற உடற்றினானென முத்தகமுமாம்.
                                                            (162)

25.-அபிமனைத் துரோணன் எதிர்த்துத்தோற்றல்.

மல்லலம்புயவபிமன்வெஞ்சரமழையனைத்தையுமாலெனப்
பல்லவெங்கணைகொடுவிலக்கிமுனைந்துவந்தெதிர்பற்றினான்