குறிக்கின்ற 'நபா;' என்னும் வடசொல், நபம் எனச்சிதைந்து, இலக்கணையாய், கார்காலத்தை உணர்த்தும்; ஆவணிபுரட்டாசி மாதங்கள் வர்ஷாகால மாதலால், உபரி,இபஸங்கம், விபிநம் - வடசொற்கள். ஒருசிங்கத்தைக்கண்டு யானைகள் பலவும் வலிஅழிதல், பிரசித்தம். ஏவின் - ஐந்தாம்வேற்றுமை விரி: ஏ - முதல்வேற்றுமை. இதுமுதல், பன்னிரண்டு கவிகள் - கீழ்ச்சருக்கத்தின் 45ஆங் கவிபோன்ற எண்சீர்க்கழிநெடிலடியாசிரியச்சந்தவிருத்தங்கள். 'தன தனன தந்த தான தனதனதனதனன தந்த தான தனதன' என்பது, இவற்றிற்குச் சந்தக்குழிப்பாதலால், இச்சந்தம்சிறிது வேறுபட்டது. (177) 40.-துரியோதனன் தன்சேனையோரை நோக்கி வீமஅபிமன்னுக்களைப் பிரித்துப் பொருதாலே எளிதில்வெல்லலாமென்று உபாயம் கூறுதல். சகுனியுடன் விந்துபூரிமுதலியதரணிபரடங்கவேகிமகபதி, மகன்மகனொடிங்குறாதபடி யெதிர்வளைமின்வருகந்தவாகன் மதலையைவிகனனுமடங்கல்போலு மிளைஞரும் விருதர்பலருந் துரோணன் மதலையு, மிகன்மலையிலிந்த நாழிகையிலிவரிருவரையும் வென்று கோறலெளிதரோ. |
(இ-ள்.) 'விந்துபூரி முதலிய - விந்துபூரி யென்பவன் முதலான, தரணிபர் அடங்க-அரசர்களெல்லோரும், சகுனியுடன் - சகுனியுடனே, ஏகி-சென்று, வரு கந்தவாகன் மதலையை-எதிர்த்து வருகிற வாயுகுமாரனான வீமனை, மகபதி மகன் மகனொடு இங்கு உறாதபடி - இந்திரகுமாரனான அருச்சுனனது புத்திரனாகிய அபிமனுடன் இவ்விடத்துச் சேராதபடி, எதிர்வளைமின் -எதிரில் வளைத்துக்கொள்ளுங்கள்: (அங்ஙனம்வளைய), விகனன்உம் - விகர்ணனும், மடங்கல்போலும் இளைஞர்உம்-சிங்கம்போன்ற, (மற்றைத்) தம்பிமார் பலரும், விருதர்பலர்உம்-(மற்றும்) அரசர்கள் அநேகரும், துரோணன் மதலைஉம்- அசுவத்தாமாவும்இகல் மலையில்-(அபிமனுடன்) போர்செய்தால், இந்த நாழிகையில் - இவ்வொருநாழிகைப்பொழுதிலே, இவர் இருவரைஉம் - (வீமன் அபிமன் என்னும்) இவர்இரண்டுபேரையும், வென்று கோறல் - சயித்தலும் கொல்லுதலும், எளிது -எளியதாம்; (எ - று.) அரோ ஈற்றசை; தேற்றமுமாம்; 'இடைச் சொற்கள்இடத்துக்கேற்றபடி பல பொருள்தர உரியன', விந்து, பூரி என இரண்டுபேராக எடுத்தால், பூரி என்பது-பூரிசிரவா என்னும் அரசனைக் குறிக்கும்; இங்ஙனம் ஒருபெயரின் ஒரு பகுதி அப்பெயர்முழுவதையும் உணர்த்துதலை வடநூலார் 'நாமைகதேஸே நாமக்ரஹணம்' என்பர், பூரிஸ்ரவஸ் என்பவன், அதிரதத்தலைவரில் ஒருவன்; பூரி எனவும் ஓர் அரசன் உண்டு. மகபதிமகன் மகன் - இந்திரனது பேரன். தரணிபர் அடங்க எதிர் வளைமின் - இடவழுவமைதி. (178) 41.-துரியோதனன்மொழி கேட்டவீரர். இருவரோடும் பொரமுடுகுதல். எணவுயர்புயங்ககேதுவுரைசெயவினைவிடைகொண்டுவீரரனைவரு முனைடடவணிந்துகாலமுகிலெனமுரசினமுழங்கவோடியெதிரெதிர் |
|